search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman dead"

    • நீண்டநேரம் ஆகியும் உஷாராணி வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கிணற்றுக்குள் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி உஷாராணி (வயது55).

    இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் மேல் பகுதியை சுத்தம் செய்தார். அப்போது திடீரென உஷாராணி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

    தண்ணீரில் மூழ்கிய அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். நீண்டநேரம் ஆகியும் அவர் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கிணற்றுக்குள் உஷாராணி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கும் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி உஷாராணியின் உடலை மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அரசிடம் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்த விவசாயி சுப்புராயனை போலீசார் தேடி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிரை காட்டு பன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார்.

    இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காக பக்கத்து கிராமமான மணம் தவழ்ந்தபுத்தூர் காலணி சேர்ந்த சேட்டு என்பவரது மனைவி தனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார்.

    அப்போது காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், அரசிடம் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்த விவசாயி சுப்புராயனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    • காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை பழைய காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 45) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து காஞ்சனா அவரது மகன் ஆனந்தன் (25) என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற ஆனந்தன் பைக் விபத்தில் இறந்துவிட்டார். இதனால் காஞ்சனா தனிமையில் வசித்து வந்தார். கணவரும் இல்லை, மேலும் மகன் இறந்த துக்கத்தை அவரால் தாங்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இன்று காலையில் அவர் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். 2-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீஸ் நிலையத்தை கடந்து சென்றார். காலை 7.40 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் நியூ டின் சிகியா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற அந்த ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது காஞ்சனா ஓடி சென்று ரெயில் முன்பு தண்டவாளத்தின் நடுவில் நின்றார்.

    அவர் என்ஜின் டிரைவரை நோக்கி கைகளை அசைத்தபடி நின்று கொண்டே இருந்தார். இதனை கண்ட டிரைவர்கள் ரெயில் பிரேக் போட்டனர். மேலும் அலாரம் எழுப்பினர்.

    ஆனாலும் ரெயில் காஞ்சனா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாாக இறந்தார்.

    இதனை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    காஞ்சனா உடலை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே 1-வது பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்த வட மாநில பயணி ஒருவர் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். இதனைக் கண்டு அவரது குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டனர்.

    சத்தம் கேட்டு ரெயில்வே போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில் இறந்தவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் கிருபா (வயது 54) என்பது தெரியவந்தது. அவர் குடும்பத்துடன் வேலூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.

    ரெயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது தெரியவந்தது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது.
    • விபத்து நடந்து பெண் பக்தர் இறந்து கிடந்தும் போலீசார் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மணப்பாறை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

    இதில் ஒரு குழுவினர் இன்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த ஆசாத் ரோடு அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது. இதில் கும்பகோணம் துக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த உமாராணி (வயது 60) தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் மாதேஸ்வரி (65), சிவகாமி (55), மூக்காயி (65) உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்து பெண் பக்தர் இறந்து கிடந்தும் போலீசார் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் ஆத்திரம் அடைந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆலையின் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தைக்கு பின் பக்தர்கள் மறியலை கைவிட்டனர்.

    பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து மற்றும் சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மாரியின் கால் பாகங்களை புலியானது தின்று விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டது வனத்துறை விசாரணையில் தெரியவந்தது.
    • புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியை சேர்ந்தவர் மாரி(வயது63). நேற்று வழக்கம் போல வெளியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

    அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர், வனப்பகுதிகளில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. மாரி மாயமானதால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அடர்ந்த வனத்திற்கு சென்றார். அப்போது, அங்கு பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உடனடியாக ஊருக்குள் ஓடி வந்து தகவல் தெரிவித்தார். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.

    அப்போது அது மாயமான மாரி என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து அறிய வனத்துறையினர் அவரது உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது உடலில் புலி தாக்கியதற்கான காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    வனத்திற்குள் சென்ற மாரியை புதர் மறைவில் மறைந்திருந்த புலி தாக்கி கொன்றுள்ளது.

    பின்னர் அவரது உடலை இழுத்து சென்று, மாரியின் கால் பாகங்களை புலியானது தின்று விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டது வனத்துறை விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் புலியின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.

    புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தனது கணவரை மிரட்டுவதற்காக சசி பிரபா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக தெரிவித்தார்.
    • எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பற்றிக் கொண்டது. பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் லுத்ரன் மிஷன் கோவில் தெருவைச் சேர்ந்த சரண்ராஜ் மனைவி சசி பிரபா (வயது 29). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த சரண்ராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் சம்பவத்தன்று தனது கணவரை மிரட்டுவதற்காக சசி பிரபா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக தெரிவித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பற்றிக் கொண்டது. பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த சசி பிரபா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி திரிபுரசுந்தரி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திரிபுரசுந்தரி அந்த பகுதியில் உள்ள வயல் வெளிக்கு சென்றார்.

    நீண்ட நேரமாக இவர் வராததால் சந்தேகம் அடைந்த வெங்கடேசன் வயலுக்கு சென்று பார்த்தபோது திரிபுரசுந்தரி அங்கு உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது. திரிபுரசுந்தரி கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • பஸ்சை பின்நோக்கி எடுக்கும்போது அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி பேபி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • பணிமனை மேலாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அரசு மாநகர போக்குவரத்துக் கழக பஸ் பணிமனை உள்ளது. இங்கு ஊழியர் கோபு (50) இன்று காலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்லும் தடம் எண். 70 பஸ்சை பின்நோக்கி எடுக்கும்போது அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி பேபி (60) மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து பணிமனை மேலாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டி பேபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 22-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது அமுதாவை பாம்பு கடித்தது.
    • திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருப்பூர்:

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் . இவரது மனைவி அமுதா (வயது 45). இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் குடியிருந்து விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது அமுதாவை பாம்பு கடித்தது. இதனையடுத்து திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இன்று காலை அமுதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் அமுதா இறந்துள்ளார். அமுதாவின் சாவிற்கு டாக்டர்கள் தான் காரணம் எனக்கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போரூர்:

    வடபழனியில் இருந்து கோயம்பேடு நோக்கி நள்ளிரவு 2 மணி அளவில் கான்கீரிட் கலவை லாரி ஒன்று சென்றது.

    100அடி சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி (26) பி.இ. பட்டதாரி. இவர் பொன்னேரி அண்ணாசிலையில் இருந்து தேரடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    ஆஞ்சநேயர் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து திடீரென கதவு திறந்தபோது நிலை தடுமாறிய ரகுபதி மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    அந்த நேரத்தில் எதிரே வந்த லாரி மோதியதில் ரகுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு வருகிற ஜனவரி மாதம் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பொதுவாக பிரசவ வலியால் துடிக்கும் பெண்களுக்கு டாக்டர்கள் கையால் வயிற்று பகுதியை அழுத்தி பிரசவம் பார்ப்பது வழக்கம்.
    • ஆனால் இவர்கள் காலால் மிதித்து பிரசவம் பார்த்ததை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டம் கத்தம்கூரு பகுதியை சேர்ந்தவர் சிரசு அகிலா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியான சிரசு அகிலாவுக்கு கடந்த 12-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது மாமியார் பூவுலம்மா, மருமகளை நலகொண்டா அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தார்.

    நள்ளிரவு ஒரு மணி அளவில் சிரசு அகிலாவுக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். ஆனால் பணியில் இருந்த டாக்டர்கள் நர்சுகள் வலியால் துடிக்கும் பெண்ணிற்கு பிரசவம் பார்க்காமல் செல்போனில் பேசிய படியும், கேம் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

    தற்போது அவர்களிடம் சென்ற இளம்பெண்ணின் மாமியார் மருமகள் வலியால் துடித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பிரசவ பார்க்க வேண்டுமென கூறினார். ஆனால் அவர்கள் செல்போனிலேயே பிசியாக இருந்தனர். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த பூவுலம்மா டாக்டர் மற்றும் நர்சுகளை திட்டினார்.

    அவசரமாக பிரசவம் பார்க்க வேண்டும் என்றால் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டியது தானே இங்கே எதற்கு கொண்டு வந்தாய் என திட்டியபடி வந்த நர்சுகள் சிரசு அகிலாவின் வயிற்றின் மீது காலை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது.

    பொதுவாக பிரசவ வலியால் துடிக்கும் பெண்களுக்கு டாக்டர்கள் கையால் வயிற்று பகுதியை அழுத்தி பிரசவம் பார்ப்பது வழக்கம். ஆனால் இவர்கள் காலால் மிதித்து பிரசவம் பார்த்ததை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இருப்பினும் சிரசு அகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் உதிரப்போக்கு மட்டும் நிற்கவில்லை. இதையடுத்து சிரசு அகிலாவை மேல் சிகிச்சைக்காக ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சிரசு அகிலாவின் கணவர் நலகொண்டா அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் லட்சுமி நாயக்கிடம் புகார் தெரிவித்தார்.

    பணியில் இருந்த டாக்டர் மற்றும் நர்சுகள் மீது விசாரணை நடத்தப்படும். விசாரணையில் அவர்களது மீது தவறு இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    • சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்னகரை காப்பு காட்டு பகுதியில் இன்றுகாலை வந்த போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
    • விபத்தில் வேனுக்கு அடியில் சிக்கி சாந்தி என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 19 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20 பேர் கீழ் குப்பத்தில் உள்ள முருகன் கோவிலில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்னகரை காப்பு காட்டு பகுதியில் இன்றுகாலை வந்த போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனுக்கு அடியில் சிக்கி சாந்தி (வயது45) என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 19 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்த விபத்தை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான சாந்தியின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    ×