search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூர் தொழிற்பேட்டை பணிமனையில் பின்னோக்கி வந்த பஸ் மோதி பெண் பலி
    X

    அம்பத்தூர் தொழிற்பேட்டை பணிமனையில் பின்னோக்கி வந்த பஸ் மோதி பெண் பலி

    • பஸ்சை பின்நோக்கி எடுக்கும்போது அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி பேபி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • பணிமனை மேலாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அரசு மாநகர போக்குவரத்துக் கழக பஸ் பணிமனை உள்ளது. இங்கு ஊழியர் கோபு (50) இன்று காலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்லும் தடம் எண். 70 பஸ்சை பின்நோக்கி எடுக்கும்போது அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி பேபி (60) மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து பணிமனை மேலாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டி பேபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×