என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி: 19 பேர் படுகாயம்
- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்னகரை காப்பு காட்டு பகுதியில் இன்றுகாலை வந்த போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
- விபத்தில் வேனுக்கு அடியில் சிக்கி சாந்தி என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 19 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20 பேர் கீழ் குப்பத்தில் உள்ள முருகன் கோவிலில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்னகரை காப்பு காட்டு பகுதியில் இன்றுகாலை வந்த போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனுக்கு அடியில் சிக்கி சாந்தி (வயது45) என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 19 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்தை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான சாந்தியின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இந்த விபத்தால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்