search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wild elephant"

    • வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    • தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன் குடிசை, குப்பம்மாள்பட்டி, கேசி.பட்டி, பெரியூர், பார்ச்சலூர், ஆடலூர், பன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் காபி, மிளகு வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். வப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் தாண்டிக்குடி முருகன் கோவில் கடுகுதடி பகுதியில், கடந்த 5 நாட்களாக காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை 4:15 மணிக்கு தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது. இந்த காட்சி, போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதன் பிறகு கல்லார் காப்பு காட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    இதனால் பொது மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர். தகவல் அறிந்து வத்தலகுண்டு வனவர் முத்துக்குமரன் தலைமையில் வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.
    • சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இங்கு சாம்ராஜ்நகர், தாளவாடி, ஆசனூர் ஆகிய பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் உரு ளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் ஏராளமான மினி ஆட்டோக்களில் தினமும் ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.

    நேற்று இரவு தாளவாடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் திம்பம் மலைப் பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.

    அப்போது சாலையின் ஓரமாக யானையை தாண்டி சென்று விடலாம் என எண்ணி ஓட்டுனர் வாகனத்தை இயக்கிய போது, காட்டு யானை அந்த சரக்கு வாகனத்தை தனது தும்பிக்கையால் பிடித்து நிறுத்தியது. அதன் பிறகு மேல் பகுதியில் வைத்திருந்த உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் இழுத்து கீழே தள்ளியது.

    பின்பு உருளைகிழங்கு மூட்டையை உண்பதற்காக எடுத்துச் சென்றது. இதனால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்தி ற்கு பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே போக்குவரத்து மீண்டும் சீரானது.

    • யானை ஊருக்குள் வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
    • வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையிடம் போ ராசா. இது மக்கள் வாழும் பகுதி வராதே என சத்தமாக பேசி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது,

    காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து மளிகை கடை, சத்துணவு மையம், வீடுகள் போன்றவைகளை உடைத்து உணவுகளை சாப்பிட்டு சென்று வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

    பின்னர் வீடுகளில் அருகில் யானை சுற்றி வந்தது.

    யானை ஊருக்குள் வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து வந்த வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையை விரட்டும் பணிகள் ஈடுபட்டனர்.

    அப்போது வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையிடம் போ ராசா. இது மக்கள் வாழும் பகுதி வராதே என சத்தமாக பேசி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது யானை திடீரென வேட்டை தடுப்பு காவலர்களை நோக்கி விரட்டி வந்தது. இதனால் அவர்கள் அச்சம் அடைந்து ஓடினர். பின்பு யானையிடம் சத்தமாக பேசி வனப்பகுதிக்கு விரட்டினர். யானையும் அவர்களின் பேச்சை கேட்டு அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது.

    வேட்டுத்தடுப்பு காவலர்கள் யானையிடம் பேசியே யானையை விரட்டியது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • யானை நிற்பதை பார்த்ததும் சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார்.
    • இறந்த முதியவரின் உடலை பார்வையிட்டு, யானை மிதித்து கொன்றதை உறுதி செய்தனர்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடவேடம்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60).

    இவர் கடந்த 1 அரை வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் வடிவேலாம்பாளையம் பகுதியில் தங்கி மோளப்பாளையம், வடிவேலம்பாளையம் பகுதியில் தோட்ட வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக மோளப்பாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு புதர் மறைவில் யானை ஒன்று மறைந்திருந்தது.

    யானை நிற்பதை பார்த்ததும் சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் யானையிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை விடாது துரத்தி வந்தது.

    சில தூரம் சென்ற நிலையில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து யானை சண்முகசுந்தரத்தை தாக்கியது. இதில் அவருக்கு தலை, கை, கால் என உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரின மீது ஏறியும் மிதித்து விட்டு சென்றது.

    இதில் சண்முகசுந்தரம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    யானை தாக்கி முதியவர் இறந்த தகவல் அறிந்ததும் மதுக்கரை வனவர் ஐயப்பன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் இறந்த முதியவரின் உடலை பார்வையிட்டு, யானை மிதித்து கொன்றதை உறுதி செய்தனர். தொடர்ந்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து இறந்த சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஊருக்குள் புகும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    தற்போது யானை தாக்கி ஒருவர் இறந்துள்ளது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி உள்ளது. எனவே இந்த பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்து மேற்கொண்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • கும்கி யானைகள் தற்போது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூா் வட்டம், சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட சப்பந்தோடு பகுதியில் அண்மைக் காலங்களாக கட்டபொம்மன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது.

    இந்த காட்டு யானை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. அவ்வாறு வரும் யானை விளைநிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

    தொடர்ந்து குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதனை தொடர்ந்து வனத்துறையினர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த யானைகள் ஊருக்குள் நுழையும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியைச் செய்து வருகின்றன.

    சேரம்பாடி மண்டாசாமி கோவில் பகுதி மற்றும் செவியோடு பகுதியில் இந்த கும்கி யானைகள் தற்போது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

    • கிராம மக்கள் அச்சம்
    • இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    வேலூர்:

    குடியாத்தம் அருகே பக்கத்து கிராமத்திற்கு குடி புகுந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக ஒற்றை காட்டு யானை முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது.

    இதனால் அந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லாமல் வீடுகளிலே முடங்கினர். மேலும் அந்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    காட்டு யானைக்கு பயந்து கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை அறுவடைக்கு முன்னதாகவே விவசாயிகள் அறுவடை செய்தனர்.

    இந்த நிலையில் கதிர்குளம் கிராமத்தில் இருந்து வெளியேறி, மேல்அனுப்பு கிராமத்திற்குள் புகுந்தது காட்டு யானை. விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது.

    அந்த கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி என்பவரின் நிலத்தில் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மற்றும் நெல் பயிர்களை மிதித்து சேதம் செய்தது.

    அதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த வனஜா என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் வேர்க்கடலை பயிர்களையும் சேதப்படுத்தியது.

    பகல் நேரங்களிலும் கிராமத்திற்குள் ஒற்றைக் காட்டு யானை சுற்றி வருவதால் கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருவதால், அதனை தடுக்கவோ அல்லது பிடித்து வேறு பகுதியில் விடவோ வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    காட்டு யானையை பிடித்து உடனடியாக வேறு பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன.
    • யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றதை கண்ட பக்கர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் வழிபடுவதற்காக ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், நாமக்கல், திருச்செங்கோடு மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் பண்ணாரி வனப்பகுதியில் உலா வருகின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியே வரும் யானைகள் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனை சாவடி அருகே இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.

    இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகளில் கரும்புகள் ஏற்றி செல்லப்படுவதால் கரும்புக்கட்டுகளை சாப்பிடுவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கரும்புக்கட்டுகளை ஏற்றி சொல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சாப்பிடுவது தொடர்கதை ஆகி வருகிறது.

    மேலும் சாலை நடுவே நின்றுகொண்டு பஸ்களை வழிமறிப்பதும் தொடக்கதையாகி வருகிறது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை திடீரென பண்ணாரி கோவில் முன் மைசூரு நெடுஞ்சாலை ரோட்டில் நடமாடியது. இதைத்கண்ட கடைக்காரர்கள், பக்தர்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றதை கண்ட பக்கர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு வனத்துறையினர், பொதுமக்கள், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

    • நள்ளிரவு நேரத்தில் தொலைதூரத்தில் நடந்து வரும் காட்டு யானைகளையும் தெளிவாக படம் பிடிக்க இயலும்.
    • காட்டு யானைகளின் வரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் சைரன் ஒலியும் எழுப்பப்படும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிதர்காடு, சேரம்பாடி, ஓவேலி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன. அவை தற்போது காட்டுக்குள் இருந்து அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    காட்டு யானைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது.

    எனவே அவற்றின் நடமா ட்டத்தை பொதுமக்களால் சரிவர கணிக்க முடியவில்லை. இதனால் அங்கு மனிதன்-விலங்கு மோதல் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் கூடலூர் பகுதியில் அதிநவீன கேமிராக்களுடன் கூடிய எச்சரிக்கை கோபுரங்களை அமைப்பது என வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதன்ஒருபகுதியாக அங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கருதப்படும் முக்கட்டி, நெலாக்கோட்டை, கோட்டாடு உள்பட 18 பகுதிகளில் அதிநவீன காமிராக்களுடன் எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பிதர்காடு வனச்சரக அதிகாரி ரவி கூறுகையில்,

    ஊரைஒட்டிய காட்டுப்பகுதியில் எச்சரிக்கை கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கேமிரா, சிம்கார்டு மற்றும் சைரன் கருவி ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன.

    எச்சரிக்கை கோபுரத்தில் உள்ள தானியங்கி கேமிரா மூலம் நள்ளிரவு நேரத்தில் தொலைதூரத்தில் நடந்து வரும் காட்டு யானைகளையும் தெளிவாக படம் பிடிக்க இயலும். அவை உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் காட்டு யானைகளின் வரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் சைரன் ஒலியும் எழுப்பப்படும். இதனால் பொதுமக்கள் சுதாரித்து கொண்டு தப்பி பிழைக்கலாம். வனத்துறை அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை விரட்ட முடியும் என்று தெரிவித்து உள்ளார். 

    • காட்பாடி அடுத்த மகிமண்டலம் அருகே உள்ள பெரியபோடிநத்தம் கிராத்திற்குள் இன்று அதிகாலை யானை புகுந்தது.
    • ஒற்றை யானை ஆடு, மாடுகளை தும்பிக்கையால் தூக்கி வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது.

    அங்குள்ள பயிர்களை நாசம் செய்த ஒற்றை யானை விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த, கணவன், மனைவி உள்பட 3 பேரை மிதித்துக் கொன்றது.

    தகவல் அறிந்து வந்த ஆந்திர வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். இதனை அடுத்து யானை நேற்று ஆந்திரா எல்லைப் பகுதியை கடந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் வன பகுதியில் சுற்றி திரிந்தது.

    தமிழகம்-ஆந்திரா எல்லை பகுதியான காட்பாடி, பொன்னை, மகிமண்டலம் ஆகிய பகுதிகளில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த யானையை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து அச்சமடைந்தனர்.

    காட்பாடி அடுத்த மகிமண்டலம் அருகே உள்ள பெரியபோடிநத்தம் கிராத்திற்குள் இன்று அதிகாலை யானை புகுந்தது.

    அங்குள்ள சூளைமேட்டு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி வசந்தா (54).

    இவர்கள் வனப்பகுதியில் ஒட்டியுள்ள தனது வீட்டில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். பாலகிருஷ்ணன் மற்றும் வசந்தா ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஒற்றை யானை அவர்களது ஆட்டு கொட்டகைக்குள் புகுந்தது. அதனை கண்டு ஆடுகள் நீண்ட நேரம் கத்திக்கொண்டிருந்தது. அலறல் சத்தம் கேட்டு வசந்தா வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது ஒற்றை யானை ஆடு, மாடுகளை தும்பிக்கையால் தூக்கி வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் ஒரு ஆடு துடிதுடித்து இறந்து போனது.

    உடனடியாக வசந்தா கூச்சலிட்டபடி யானையை விரட்ட முயன்றார். பாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து வெளியே வருவதற்குள், யானை வசந்தாவை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. இதனைப் பார்த்த பாலகிருஷ்ணன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கூச்சலிட்டு யானையை விரட்டினார்.

    இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மருத்துவ குழுவினர் பரிசோதித்தபோது வசந்தா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பாடி போலீசார் மற்றும் ஆற்காடு வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வனத்துறையினர் 15 பேர் கொண்ட குழுவினர் யானையை கண்காணித்து வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் யானை விரட்டுவதற்கு உதவியாக ஆந்திரா வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

    மூதாட்டி மற்றும் ஆட்டுக்குட்டியை கொன்ற காட்டுயானை வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளது.

    வனத்துறை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒற்றை யானையை தேடி விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக-ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள காட்பாடி, பொன்னை, மேல்பாடி, போடி நத்தம் உள்ளிட்ட பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

    4 பேரை கொன்ற இந்த ஒற்றை யானையை காட்டுப்பகுதியில் விரட்டுவதா, இல்லை அதனைப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்வதா என தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. ஆசனூர் அடுத்த திம்பம் அருகே சாலையில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

    கரும்பு லாரியை கண்டதும் குடியுடன் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் தமிழகம் -கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப் பட்டது. வாகனங்கள் அணைத்தும் அணிவகுத்து நின்றன. சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். 

    • சாலைகளில் சுற்றி திரியும் யானைகள் வாகனங்களை வழிமறிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
    • பஸ்சை வழிமறித்த காட்டு யானை சிறிது நேரத்தில் பஸ்சை நோக்கி வேகமாக முன்னேறி வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரையொட்டி வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதி, தேயிலை தோட்டங்கள் என மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் அதிகளவில் நடமாடி வருகிறது.

    அவ்வாறு வரும் யானைகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சேதப்படுத்தியும், அதனையொட்டிய விளைநிலங்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதுதவிர சாலைகளில் சுற்றி திரியும் யானைகள் வாகனங்களை வழிமறிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

    கூடலூரில் இருந்து ஊட்டிக்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பஸ் 27-வது மைல் பகுதியில் சென்ற போது, அப்பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென சாலையின் குறுக்கே வந்தது. தொடர்ந்து பஸ்சை வழிமறித்தபடி நின்றது.

    யானை வந்ததை பார்த்த பஸ் டிரைவர் உடனே பஸ்சை நிறுத்திவிட்டார். யானை மறித்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

    பஸ்சை வழிமறித்த காட்டு யானை சிறிது நேரத்தில் பஸ்சை நோக்கி வேகமாக முன்னேறி வந்தது. இதனால் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை பின்னோக்கி இயக்கினார்.

    ஆனாலும் யானையும் பஸ்சை நோக்கி முன்னேறி கொண்டே வந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மிகவும் அச்சம் அடைந்து கூச்சலிட்டனர்.

    தொடர்ந்து முன்னேறி வந்த யானை பஸ்சின் அருகே வந்து நின்று கொண்டு பிளிறியது.

    இதனால் யானை பஸ்சை தாக்கிவிடும் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் காட்டு யானை பஸ்சின் இடதுபுறமாக சென்றவாறு வழிவிட்டது.

    இதனால் பயணிகள் பயத்தில் மீண்டும் சத்தம் போட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக காட்டு யானை ஒதுங்கி சென்றது. உடனே டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டி ஊட்டியை நோக்கி புறப்பட்டார்.

    அதன்பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டபுள் ரோடு அருகே ஒற்றை யானை 2 முறை சாலையைக் கடந்து வனத்துறைக்கு போக்கு காட்டியது. இதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

    யானை நடமாட்டத்தால் குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினா் அறிவுறுத்தினா்.

    • ஜன்னலை உடைத்து கடைக்குள் இருந்த அரிசியை ருசித்து தின்றது
    • ஊருக்குள் யானை நடமாட்டம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

    கோவை,

    கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி அடிக்கடி மலையடிவார த்தையொட்டி குடியி ருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருவதை வாடி க்கையாக வைத்துள்ளது.

    அவ்வாறு வரும் யானை கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடு மற்றும் விவசாய நிலங்களில் உள்ள பயிர்க ளை சேதப்படுத்து வதோடு, பொருட்களையும் சூறை யாடி செல்கிறது.

    தொடர்ந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    சிறுமுகை அடுத்த சம்பூரவள்ளிபுதூர் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, சம்பூரவள்ளி புதூருக்குள் நுழைந்தது.

    அந்த பகுதியில் வெகு நேரமாக சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை, ரேஷன் கடை அருகே சென்றது. பின்னர் ரேஷன் கடையின் ஜன்னலை உடை த்து, துதிக்கையை உள்ளே விட்டு அரிசியை எடுத்து ருசித்து சாப்பிட்டது.

    தொடர்ந்து அங்கிருந்து காட்டு யானை சென்று விட்டது. இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள், ரேஷன் கடையின் ஜன்னல் உடைக்க ப்பட்டு இருந்ததை பார்த்து பணியாளர்களுக்கு தெரிவித்தனர்.

    அவர்களும் வந்து பார்த்தனர்.அப்போது அதிகாலை நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, ஜன்னலை உடைத்து அரிசியை சாப்பிட்டு சென்றது தெரியவந்தது.

    யானை நடமாட்டம் இருப்பது பற்றிய தகவல் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படு த்தி உள்ளது. யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர்.

    ×