search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife arrest"

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி தறி தொழிலாளி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 35). தறி தொழிலாளி.

    இவரது மனைவி அம்பிகா (28). இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சஞ்சனாஸ்ரீ(10), தன்யஸ்ரீ(8) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    அம்பிகா பெங்களூருவில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தினமும் கம்பெனி வேனில் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பி வந்துவிடுவார்.

    அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராமமூர்த்தி (23). விவசாயி. இவருக்கு திருமணமாகி சுமா என்ற மனைவியும், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையும் உள்ளது.

    அம்பிகாவுக்கும், ராமமூர்த்திக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாதேஸ் அம்பிகாவை கண்டித்ததார். ஆனாலும், அம்பிகாவும், ராமமூர்த்தியும் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

    தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக மாதேஸ் இருப்பதால் அவரை கொலை செய்ய ராமமூர்த்தி முடிவு செய்தார்.

    இந்த நிலையில் நேற்று அம்பிகா வேலைக்காக கார்மெண்ட்சுக்கு சென்றுவிட்டார். அவரது 2 பெண் குழந்தைகளும் பள்ளி விடுமுறை காரணமாக தேன்கனிக்கோட்டையில் உள்ள அம்பிகாவின் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

    இரவு 8 மணியளவில் மாதேஸ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ராமமூர்த்தி வீட்டிற்குள் சென்று மாதேசின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அப்போது அம்பிகா வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாதேஸ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாதேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த அம்பிகாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய ராமமூர்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தந்தையை கொன்று தற்கொலை நாடகமாடிய தாயின் நடிப்பை மகன்கள் அம்பலப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோனியா (25). இவர்களுக்கு ஜீவா (7), ஹரி (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு ராஜலிங்கம் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக சோனியா கூறினார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சோனியாவின் மகன்கள் ஜீவா, ஹரி ஆகிய 2 பேரும் தாயின் நாடகத்தை அம்பலப்படுத்தினர். தனது தாயும், சிலரும் சேர்ந்து தந்தையை அடித்து கழுத்தை நெரித்ததாக கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது பாணியில் சோனியாவிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தனக்கும், தனது தங்கை சோபனாவின் கணவர் சிவக்குமாருக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு கணவருக்கு தெரிந்ததால் அவர் தன்னை கண்டித்ததாகவும் இதனால் சிவக்குமார் மற்றும் அவரது கடை ஊழியர்கள் துணையோடு கணவரை கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து சோனியாவை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து ராஜலிங்கத்தை கொன்ற மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களின் விவரம் வருமாறு:-

    1. அஜீத் (19) திருவண்ணாமலை அருகே உள்ள பசும்கரை பழைய காலனியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன்.

    2. காளிமுத்து (19) திருவண்ணாமலை சீனாத்தூர் காலனியை சேர்ந்த சகாதேவன் என்பவரின் மகன். இவர் திருவண்ணாமலையில் உள்ள பிரபல என்ஜீனியரிங் கல்லூரி ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    3. பாலாஜி (20) திருவண்ணாமலை வேலங்கல் காலனியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன்.

    4. சிவக்குமார் (39) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த எம்.ஜி.அள்ளி பகுதியை சேர்ந்தவர்.

    கைதான சிவக்குமார், சோனியாவின் தங்கை சோபனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சோபனாவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சூரை சேர்ந்த பாண்டித்துரை என்பவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தை இருந்தது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை விட்டு விவாகரத்து பெற்று வந்துவிட்டார். போச்சம்பள்ளியில் வசித்தபோது சிவக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். சோபனாவும், சிவக்குமாரும் அடிக்கடி சோனியா வீட்டுக்கு சென்றபோது சோனியாவுடன் சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கமே கொலை வரை சென்றுள்ளது.

    சிவக்குமாருடன் கைதான மற்ற 3 பேரும் திருவண்ணாமலையில் அவர் வைத்துள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் பந்தல்கள் போடும் அடார்னஸ் கடையில் வேலை பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜலிங்கம் கொலையில் கைதான அவரது மனைவி சோனியா உள்பட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். மேலும் ராஜலிங்கத்தை வி‌ஷ ஊசி போட்டு கொன்றதாக சோனியா கூறி இருந்தார்.

    ஆனால் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ராஜலிங்கம் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் அவர் கழுத்து நெரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் இறந்ததாக கூறி உள்ளார். உடலில் ஊசி போட்டதற்கான அறிகுறியும், வயிற்றில் பூச்சி மருந்தும் இல்லை என்று கூறி உள்ளார்.
    திருவான்மியூர் கடற்கரையில் கணவன் மீது தாக்குதல் நடத்திவிட்டு மனைவியின் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். #ChennaiAttack
    சென்னை:

    சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கதிரவன். ஐ.டி. ஊழியரான இவருக்கும் அனிதா என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்குமுன் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியர் நேற்று திருவான்மியூர் கடற்கரைக்கு வந்திருந்தனர். அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் கதிரவன் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்து கதிரவன் விழுந்ததும், அனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் செயின் மற்றும் செல்போனை பறித்துகொண்டு தப்பி ஓடினர்.

    காயமடைந்த கதிரவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை முயற்சியில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.  சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காண முயன்றனர்.

    அதேசமயம், கதிரவனின் மனைவி அனிதாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தன் ஆண் நண்பர் மூலம் கணவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார். இதனையடுத்து அனிதாவை போலீசார் கைது செய்தனர். அவரது ஆண் நண்பரும் சிக்கினார். இந்த சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ChennaiAttack
    கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் கிரிக்கெட் மட்டையால் கணவரை மனைவி அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கோவை:

    கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகரை சேர்ந்தவர் ஞானம் (வயது 45). டிரைவர்.

    இவரது மனைவி உமா தேவி(39). இவர் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் லேப் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மாலினி(16) என்ற மகளும், பெல்வின்(7) என்ற மகனும் உள்ளனர்.

    மாலினி கோவையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1, பெல்வின் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    ஞானத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் சமீபகாலமாக சரியாக வேலைக்கு செல்வது கிடையாது. மனைவியிடம் இருந்து பணத்தை பறித்து சென்று குடித்து விட்டு, போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார்.

    நேற்று இரவும் ஞானம் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் உமாதேவி கண்டித்துள்ளார். மனைவியிடம் தகராறு செய்த ஞானம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை தூக்க முயன்றார்.

    குடிபோதையில் மகனை தூக்கியதை பார்த்த உமா தேவி கணவரை எச்சரித்தார். அதன்பிறகும் ஞானம் கேட்காமல் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உமாதேவி அங்கு கிடந்த மகனின் கிரிக்கெட் மட்டையை எடுத்து கணவரை அடித்தார். இதில் அவரின் பின்தலை, முகத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உமாதேவி ஆம்புலன்சு வரவழைத்து ஞானத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கணவரை கிரிக்கெட்மட்டையால் அடித்ததை உமாதேவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது கணவர் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து என்னிடமும், குழந்தைகளிடமும் தகராறு செய்தார். அவர் வீட்டுக்கு செலவுக்கு பணம் தராததால் நான் வேலைக்கு சென்றேன். ஆனால் அவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். நேற்று இரவும் போதையில் வந்த அவர் மகனை தூக்கினார். அவர் மகனை கீழே போட்டு அவனுக்கு அடி பட்டு விடக்கூடாது என்பதால் மகனை விட்டு விடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. எனவே கீழே கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அவரை அடித்தேன்.

    இதில் அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
    தருமபுரி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள தேவர்ஊத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 62). விவசாயி.

    இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு சுகுணா (37) என்ற மகள் உள்ளார். சுகுணாவை வடிவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். சுகுணா தனது கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

    கணேசனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவி கன்னியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு கணேசன் குடித்துவிட்டு வந்து மீண்டும் கன்னியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியம்மாள் மறைந்து வைத்திருந்த கட்டையை எடுத்து கணேசனின் தலையில் அடித்தார். இதில் கணேசன் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

    சிறிது நேரத்தில் கணேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததும் அதனை கண்டுகொள்ளாமல் கன்னியம்மாள் வீட்டின் அருகில் உள்ள அறையில் தூங்க சென்றார்.

    இன்று காலை விடிந்ததும் கணேசன் அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கு இருந்த கன்னியம்மாளிடம் அவர்கள் கேட்டபோது, தான் கணேசனை கட்டையால் தாக்கியதால் இறந்து விட்டதாக கூறினார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து வைத்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்தவுடன் கன்னியம்மாளை அக்கம்பக்கத்தினர் ஒப்படைத்தனர். பிணமாக கிடந்த கணேசனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கன்னியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொன்றேன் என்று கூறினார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். #tamilnews
    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வாலிபர் கொலையில் மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மகேந்திரகுமார். இவரது மகன் ராஜ்குமார் (வயது 31). திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை செய்து வந்தார்.

    ராஜ்குமாருக்கு திருமணமாகி கவுசல்யா (28) என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 11-ந்தேதி திருப்பத்தூர் அடுத்த பெரிய குனிச்சி பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவர் வீட்டின் அருகே ராஜ்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    பணி முடிந்து வீடு திரும்பிய ராஜ்குமார், அதே பகுதியை சேர்ந்த துளசிராமன், லாரி டிரைவர் ரமேஷ் மற்றும் சிலருடன் பேசி கொண்டிருந்ததை சிலர் பார்த்துள்ளனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் ரமேசை தேடி சென்றனர். அப்போது அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. மேலும் ரமேசுக்கும், கொலையுண்ட ராஜ்குமாரின் மனைவி கவுசல்யாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

    இதனையடுத்து கவுசல்யாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரமேசுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    தலைமறைவாக இருந்த ரமேஷ், அவரது நண்பர் துளசிராமன் ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று காலை மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் கவுசல்யா, அவரது கள்ளக்காதலனை ஏவி கணவரை கொலை செய்தது தெரியவந்தது.

    ராஜ்குமார் இல்லாத நேரங்களில் கவுசல்யா ரமேஷ் தனிமையில் சந்தித்துள்ளனர். அடிக்கடி போனில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராஜ்குமாருக்கு தெரியவந்தது. அவர் கவுசல்யாவை கடுமையாக கண்டித்தார்.

    இதனால் கவுசல்யாவுக்கு ரமேஷை சந்திக்க முடியவில்லை. கணவன் உயிரோடு இருந்தால் ரமேஷை சந்திக்க முடியாது எனவே கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார். ராஜ்குமாரை கொலை செய்து விடுமாறு ரமேஷிடம் கூறியுள்ளார்.

    கள்ளக்காதலன் ரமேஷுடன் கவுசல்யா

    ராஜ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை பயன்படுத்தி அவரை கொல்ல முடிவு செய்தனர். ரமேஷின் நண்பர் கவுதமபேட்டையை சேர்ந்த துளசிராமன் சம்பவத்தன்று ராஜ்குமாரை தனியாக அழைத்து சென்று மதுவாங்கி கொடுத்தார். ராஜ்குமாரும் மதுகுடித்தார். அவருக்கு போதை உச்சத்துக்கு ஏறியது.

    அப்போது திட்டமிட்டபடி ரமேஷ் அங்கு சென்றார். அப்போது தான் இவர்களை சிலர் பார்த்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ராஜ்குமாரை ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

    பின்னர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த கவுசல்யா, ரமேஷ், துளசிராமன் ஆகியோரை கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே போதையில் தினமும் சித்ரவதை செய்த கணவரை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள ஏ.வெள்ளோட்டை சேர்ந்தவர் ஜார்ஜ்குமார் (வயது42). இவர் சிறுமலை அடிவாரத்தில் வேளாங்கன்னிபுரத்தில் தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி பாத்திமாகுழந்தை தெரசு (35). இவர்களுக்கு வில்சன் (18), கிளிண்டன் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர். வில்சன் கல்லூரியில் படித்து வருகிறார். கிளிண்டன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஜார்ஜ்குமார் உரிமம் பெற்ற நாட்டு துப்பாக்கி வைத்துள்ளார். கடந்த மாதம் தோட்டத்தில் புகுந்த காட்டு விலங்குகளை துப்பாக்கியால் விரட்ட முயன்றபோது தவறி கீழே விழுந்து குண்டு அவரது உடலில் பாய்ந்தது. இதில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    ஜார்ஜ்குமார் குடிபழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு மனைவியையும், மகன்களையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார். நேற்று மகன்கள் 2 பேரும் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவிட்ட பிறகு தனியாக இருந்த மனைவியிடம் போதையில் தகராறு செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி ஜார்ஜ்குமாரை கீழே தள்ளி விட்டார். போதையில் அங்கிருந்த ஒரு பாறை மீது அவரது தலை விழுந்து அடிபட்டதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜார்ஜ்குமாரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்ததை அவரது மனைவி ஒத்துக் கொண்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.

    ஆபாச வீடியோ காண்பித்து செக்ஸ் தொல்லை கொடுத்த கணவரை கொன்ற மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் பழ வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 2 -ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது குடும்பத்தினரே கொலை செய்தது தெரிய வரவே அவர்களை கைது செய்தனர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    முருகனுக்கும், கலைச்செல்வி (38) என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மாரிச்செல்வி (19) என்ற மகளும், ஆனந்தகுமார் (16) என்ற மகனும் உள்ளனர்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் தினசரி போதையில் தனது மனைவியிடம் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் செல்போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதேபோல தனது மனைவியிடம் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.

    இதனால் மனைவி கலைச்செல்வி தனது கணவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார். இதனிடையே தனது மகள் மலர்ச்செல்வி கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு கைக்குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    கணவரின் செக்ஸ் தொல்லை குறித்து மகளிடமும், 10-ம் வகுப்பு படிக்கும் தனது மகனிடமும் கூறி கலைச்செல்வி அழுதுள்ளார். கடந்த 31-ந்தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த முருகன் தகராறு செய்துள்ளார்.

    பின்னர் தனது மனைவி என நினைத்து மகளை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் தங்கள் மனதை கல்லாக்கிக்கொண்டு கொலை செய்ய முடிவு செய்தனர்.

    கலைச்செல்வியும் அவரது மகளும் கை, கால்களை பிடித்துக்கொள்ள ஆனந்தகுமார் கத்தியை எடுத்து தனது தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இறந்துபோன தனது தந்தையின் உடலை எடுத்துக்கொண்டு தன்னுடன் படிக்கும் நண்பரான முகேஷ் குமார் என்ற முனியாண்டி (16) என்பவர் உதவியுடன் தோட்டத்தில் வீசி விட்டு சென்று விட்டனர்.

    கொலை செய்யப்பட்ட முருகனின் உடலை போலீசார் எடுத்து கண்டுபிடித்தவுடன் கலைச்செல்விக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பீதி ஏற்பட்டது. போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் தஞ்சம் அடைந்தனர்.

    நடந்த விபரங்களை போலீசாரிடம் பின்னர் தெரிவித்துள்ளனர். கைதான கலைச்செல்வி மற்றும் மலர்செல்வியை மதுரை சிறையிலும், ஆனந்தகுமார் மற்றும் முகேஷ்குமாரை மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
    கள்ளக்காதலுக்காக கள்ளக்காதலனை ஏவி கணவனை மனைவி கொலை செய்திருப்பது பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாவூர்சத்திரம்:

    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள கரிசலூரை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (வயது 42). சாக்கு தைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (37). இவர்களுக்கு அன்புபிரியா (11), சக்திபிரியா( 9) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த மாதம் 20-ந் தேதி ஆறுமுகநயினார் மனைவி, குழந்தைகளுடன் பெத்தநாடார்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றார். மறுநாள் அவர் ஊருக்கு திரும்பி வரவில்லை. அவருடைய மனைவி ஜெயந்தி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டுக்கு வந்தன‌ர். கணவரை காணவில்லை என ஜெயந்தி அதிர்ச்சியுடன் அக்கம்பக்கத்தில் கூறினார்.

    இதையடுத்து ஆறுமுகநயினாரை உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். ஜெயந்தியும் அவர்களுடன் சேர்ந்து கணவரை தேடிவந்தனர். இந்த நிலையில் 22-ந்தேதி பக்கத்து ஊரான மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள குளத்தில் ஆறுமுகநயினார் பிணமாக மிதந்தார்.

    அவரது உடலுக்கு அருகில் உள்ள குளத்துகரையில் மது பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் சிதறி கிடந்தது. இதுபற்றி பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார், ஆறுமுகநயினாரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆறுமுகநயினார் போதையில் குளத்தில் விழுந்து இறந்ததாக முதலில் கூறப்பட்டது.

    ஆனால் அவரது கழுத்தில் வெட்டுக்காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆறுமுகநயினாரின் பிரேத பரிசோதனை அறிக்கை தென்காசி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்தனர். அந்த அறிக்கையில் கழுத்து அறுபட்டு இறந்த பின்புதான் தண்ணீரில் உடல் போடப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தங்கள் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் ஆறுமுகநயினாரின் மனைவி ஜெயந்தியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    அவரது செல்போன் உரையாடல்கள் மற்றும் விபரங்களை சேகரித்த போலீசாரின் கிடுக்கி பிடி விசாரணையில் ஜெயந்தி தனது கள்ளக்காதலனான களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஜெயந்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் எனது தாய்மாமா மகன் களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த கணபதி என்பவரது மகன் தங்கராஜ் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. தங்கராஜ் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். எனது கணவரிடமும் நண்பராக பழகினார். இதனால் யாருக்கும் சந்தேகம் வராமல் இரவிலும் வந்து தங்கி இருந்து விட்டு காலையில் செல்வார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் கள்ளக்காதல் எனது கணவர் ஆறுமுகநயினாருக்கு தெரிந்துவிட்டது. இதனால் எனது கணவர் தங்கராஜை வீட்டிற்கு வரக்கூடாது என்று தகராறு செய்தார். இதே போல் என்னிடமும் நீ இனி தங்கராஜிடம் பேசக்கூடாது என்று கண்டித்தார். இதனால் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி நான் தங்கராஜிடம் கேட்டபோது, ‘உன் கணவன் உயிருடன் இருந்தால் நாம் சந்தோசமாக இருக்க முடியாது. எனவே உன் கணவனை யாருக்கும் தெரியாமல் கொலை செய்து விட்டு நாம் தப்பிவிடலாம்’ என்று கூறினார். இது எனக்கும் சரி என்று பட்டது. எனவே இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.

    எங்கள் திட்டப்படி கடந்த ஜூலை 20-ந்தேதி தங்கராஜ், ஆறுமுகநயினாரிடம் போனில் நான் உங்கள் கோயில் திருவிழாவிற்கு வருகிறேன். இனி நான் தவறாக நடக்கமாட்டேன் என்று கூறி வீட்டிற்கு வந்தார். இதனை உண்மை என்று நம்பிய ஆறுமுக நயினார், தங்கராஜூடன் கோயில் திருவிழாவிற்கு சென்றார்.

    கோயில் திருவிழா என்பதால் நாம் இருவரும் மது வாங்கி குடித்து சந்தோசமாக இருக்கலாம் என்று தங்கராஜ் கூறினார். இதற்கு ஆறுமுக நயினார் சம்மதித்தார். அப்போது மது பாட்டில் வாங்க வேண்டுமே என்று ஆறுமுகநயினார் கேட்டார். அதற்கு தங்கராஜ் நான் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டேன் என்று கூறி நாகல்குளம் குளத்து கரையில் வைத்து குடிக்கலாம் என்று குளத்துகரைக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் குளத்து கரையில் அமர்ந்து இருவரும் மது குடித்த‌னர். போதை ஏறியதும் தள்ளாடிய ஆறுமுக நயினாரை தங்கராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆட்டை அறுப்பது போல் நடு கழுத்தில் நீளமாக அறுத்து கொலை செய்தார்.

    பின்னர் ஆறுமுக நயினாரின் வேட்டியை பிடித்து தரதரவென்று இழுத்து குளத்து தண்ணீரில் தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து ஒன்றும் தெரியாதது போல் வந்து என்னிடம் கூறிவிட்டு அங்கிருந்து களக்காடு தப்பிச்சென்றார்.

    இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்தனர். அதில் தங்கராஜ், ஆறுமுகநயினாரை அழைத்துக்கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. இதைவைத்து எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து கைதான‌ தங்கராஜ், ஜெயந்தி இருவரையும் போலீசார் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையிலடைக்க உத்தர‌விட்டார். கைதான தங்கராஜ் திருமணமாகி தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    காஞ்சீபுரம் அருகே மது குடித்துவிட்டு ரகளை செய்ததால் கணவனின் தலையில் மனைவியே அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 48), கூலித் தொழிலாளி, இவரது மனைவி சுந்தரி.

    இவர்களது மகன் கோவிந்தவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டும், மகள் ராஜேஸ்வரி 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

    திருமுருகன் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தினை வீட்டிற்கு தராமல் மது குடித்து செலவழித்து வந்தார். மேலும் மது போதையில் வீட்டுக்கு வரும் அவர் மனைவி சுந்தரியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே மது போதையில் திருமுருகன் இருந்தார். மனைவியிடமும் ரகளையில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது சுந்தரியை அவர் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சுந்தரி மிகவும் மனவேதனை அடைந்தார்.

    தினமும் மது குடித்து வரும் கணவனால் ஏற்படும் தொல்லையை தடுக்க அவரை தீத்துக்கட்டுவது என்று சுந்தரி முடிவு செய்தார்.

    இரவு மகன் கோவிந்தவாசனும், ராஜேஸ்வரியும் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இதையடுத்து நள்ளிரவில் மது போதையில் தூங்கி கொண்டிருந்த கணவர் திருமுருகனின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே திருமுருகன் பலியானார்.

    இன்று காலை நீண்ட நேரம் வரை திருமுருகன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது திருமுருகன் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக சுந்தரியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    சித்தூர் மாவட்டத்தில் ஆண் குழந்தை இல்லாததால் 2-வது திருமணத்துக்கு முயன்ற கணவரை மனைவி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சிவாஜிகணேசன் (வயது 40), வியாபாரி. இவர், வீட்டுக்கு அருகில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மாதவிராணி (35).

    சாத்விகா (13), பூமிகா (7) என்ற இரு மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாததால், சிவாஜிகணேசன் மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்யப்போவதாக கூறி வந்தார். இதனால் அவர், தனது மனைவி மாதவிராணியை அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாதவிராணி வீட்டில் காய்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து சிவாஜிகணேசனை வெட்டிக்கொலை செய்தார். தான் கணவரை கொலை செய்த விவரத்தை, செல்போன் மூலமாக ரால்லபூடுகூருவில் உள்ள தன்னுடைய உறவினர்களுக்கு தெரிவித்தார்.

    பின்னர் மாதவிராணி ரால்லபூடுகூரு போலீசில் சரணடைந்தார். அவர், கணவரை கொலை செய்த தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், மாதவிராணியை கைது செய்தனர்.

    ஆண் குழந்தை இல்லாததால் என்னுடைய கணவர் சிவாஜிகணேசன் தினமும் என்னை அடித்து உதைத்து, துன்புறுத்தி வந்தார். என் நடத்தையின் மீதும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் காய்கறிகள் வெட்டும் கத்தியால் கணவரை வெட்டிக்கொலை செய்தேன், என்றார்.

    ஆனால் சிவாஜிகணேசனின் உறவினர்கள், போலீசில் பல்வேறு சந்தேகங்களைத் தெரிவித்துள்ளனர். மாதவிராணி கணவருக்கு தெரியாமல் பல முறை பங்காருபாளையம் பகுதிக்குச் சென்று வந்துள்ளார். அவர், யாரோ சிலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார், எனத் தெரிவித்தனர்.

    இதுபற்றி ரால்லபூடுகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவாஜிகணேசனின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவி, கத்தியால் வெட்டி கணவரை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×