search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தூர்"

    • மாலை ஊஞ்சல் சேவை நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    சித்தூர்:

    சித்தூர் குருவப்பநாயுடு தெரு பெத்தவீதியில் உள்ள சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மகாளய அமாவாசையையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.

    நேற்று காலை மூலவர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, புஷ்பம் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம், சிறப்புப் பூஜைகள், ஆராதனை செய்யப்பட்டது. மாலை ஊஞ்சல் சேவை நடந்தது.

    அதன் பிறகு உற்சவர் அங்காள பரமேஸ்வரியம்மன், லட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மஞ்சள் அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை உற்சவர் அம்மன், காசி விசாலாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    ×