என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் அருகே கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி
Byமாலை மலர்11 Jun 2018 7:21 AM GMT (Updated: 11 Jun 2018 7:21 AM GMT)
காஞ்சீபுரம் அருகே மது குடித்துவிட்டு ரகளை செய்ததால் கணவனின் தலையில் மனைவியே அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 48), கூலித் தொழிலாளி, இவரது மனைவி சுந்தரி.
இவர்களது மகன் கோவிந்தவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டும், மகள் ராஜேஸ்வரி 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
திருமுருகன் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தினை வீட்டிற்கு தராமல் மது குடித்து செலவழித்து வந்தார். மேலும் மது போதையில் வீட்டுக்கு வரும் அவர் மனைவி சுந்தரியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை முதலே மது போதையில் திருமுருகன் இருந்தார். மனைவியிடமும் ரகளையில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது சுந்தரியை அவர் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சுந்தரி மிகவும் மனவேதனை அடைந்தார்.
தினமும் மது குடித்து வரும் கணவனால் ஏற்படும் தொல்லையை தடுக்க அவரை தீத்துக்கட்டுவது என்று சுந்தரி முடிவு செய்தார்.
இரவு மகன் கோவிந்தவாசனும், ராஜேஸ்வரியும் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இதையடுத்து நள்ளிரவில் மது போதையில் தூங்கி கொண்டிருந்த கணவர் திருமுருகனின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே திருமுருகன் பலியானார்.
இன்று காலை நீண்ட நேரம் வரை திருமுருகன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது திருமுருகன் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சுந்தரியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 48), கூலித் தொழிலாளி, இவரது மனைவி சுந்தரி.
இவர்களது மகன் கோவிந்தவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டும், மகள் ராஜேஸ்வரி 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
திருமுருகன் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தினை வீட்டிற்கு தராமல் மது குடித்து செலவழித்து வந்தார். மேலும் மது போதையில் வீட்டுக்கு வரும் அவர் மனைவி சுந்தரியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை முதலே மது போதையில் திருமுருகன் இருந்தார். மனைவியிடமும் ரகளையில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது சுந்தரியை அவர் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சுந்தரி மிகவும் மனவேதனை அடைந்தார்.
தினமும் மது குடித்து வரும் கணவனால் ஏற்படும் தொல்லையை தடுக்க அவரை தீத்துக்கட்டுவது என்று சுந்தரி முடிவு செய்தார்.
இரவு மகன் கோவிந்தவாசனும், ராஜேஸ்வரியும் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இதையடுத்து நள்ளிரவில் மது போதையில் தூங்கி கொண்டிருந்த கணவர் திருமுருகனின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே திருமுருகன் பலியானார்.
இன்று காலை நீண்ட நேரம் வரை திருமுருகன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது திருமுருகன் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சுந்தரியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X