search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water inflow"

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து 4600 கனஅடியாக சரிந்தது.

    இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி கடந்த 2 தினங்களாக கர்நாடக-தமிழக எல்லை பகுதிகளிலும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 4900 கனஅடியாக அதிகரித்தது. இன்று மேலும் அதிகரித்து 5800 கனஅடியாக உயர்ந்தது.

    தொடர்ந்து கர்நாடக- தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வள துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal

    கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. #VaigaiDam #PeriyarDam

    கூடலூர், நவ.24-

    கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கன மழை நீடித்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து 1882 கன அடியில் இருந்து 2223 கன அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை 900 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில இன்று காலை 4 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள் ளதால் வைகை அணைக்கு நீர்வரத்து 2664 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 62.04 அடியாக உள்ளது. அணையில் இருந்து 3 மாவட்ட பாசனத்திற்காக 3810 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாக உள்ளதால் அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 16.2, தேக்கடி 12.2, சண்முகாநதி அணை 4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் மழை தொடர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 101.2 அடியாக உயர்ந்தது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4 ஆயிரத்து 782 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 172 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 650 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது. இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டது.

    டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் தொடர்ந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.2 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மலையோர பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 26.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 424 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சிற்றாறு-1 அணைக்கு 179 கனஅடி தண்ணீரும், மாம்பழத் துறையாறு அணைக்கு 26 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-18.2, சிற்றாறு 1-16, சிற்றாறு 2-11, நாகர்கோவில்-2.4, பூதப்பாண்டி-1, ஆரல்வாய் மொழி-6, பாலமோர்-10.8, திற்பரப்பு-12.6.திற்பரப்பு அருவியில் விடுமுறை தினமான நேற்று அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். இந்த தொடர் மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பல குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
    மேட்டூர் அணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு இன்று காலை 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு 6 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4,785 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,670 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு இன்று காலை 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 100.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.58 அடியானது.  #MetturDam
    மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 6 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 4 ஆயிரத்து 378 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4 ஆயிரத்து 6 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 4 ஆயிரத்து 378 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காலை 5 ஆயிரத்து 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் தண்ணீர் திறப்பு 1,900 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

    நேற்று 99.86 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 99.88 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. #MetturDam

    தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #VaigaiDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை உள்ளிட்ட வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 2281கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் 69 அடி நீர்மட்டம் உள்ளதால் அணைக்கு வரும் 2281 கனஅடிநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.40 அடியாக உள்ளது. 979 கனஅடிநீர் வருகிறது. 1960 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.95 அடியாக உள்ளது. 20 கனஅடிநீர் வருகிறது. 100கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.29 அடியாக உள்ளது. 133 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் நேற்று இரவு சாரலாக தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய நீரூற்றுகள் உருவாகியுள்ளன.

    சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. மேலும் பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்ப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    பெரியாறு 7.6, தேக்கடி 14.8, கூடலூர் 5.1, சண்முகாநதி அணை 3, உத்தமபாளையம் 3.7, வீரபாண்டி 3, வைகை அணை 0.6, மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. #VaigaiDam

    ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6100 கனஅடியாக வந்தது. நேற்று நீர்வரத்து சற்று சரிந்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இந்த நிலையில் அஞ்செட்டி, நாட்டறாம்பாளையம் மற்றும் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    தீபாவளி பண்டிகையொட்டி பள்ளி, கல்லூரி களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மழையின் காரணமாக இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

    இதனால் மீன் விற்பனை, உணவகங்கள் போன்ற கடைகளில் சுற்றுலா பயணிகளின் வெறிச்சோடி காணப்பட்டன. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வந்திருந்த குறைவான சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்தனர். #Hogenakkal

    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து அதிகரித்து 5 ஆயிரத்து 100 கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து அதிகரித்து 5 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் வருகிறது.

    இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மிக குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்தனர். அதே போல பரிசல் சவாரி செய்யவும், கூட்டம் குறைவாகவே இருந்தது. சமையல் மற்றும் மசாஜ் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வருமானம் இல்லை. #Hogenakkal
     
    நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருகிறது. #MullaPeriyar #PeriyarDam
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 142 அடி வரை எட்டியது. இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிகுறி இன்னும் தென்படாததால் தொடர்ந்து நீர்வரத்து குறைந்துகொண்டே வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.65 அடியாக உள்ளது. அணைக்கு 767 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் நீர்மட்டம் 69 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அதன்படி இன்று காலை அணைக்கு வந்த 2220 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5571 மி. கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.35 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 90 கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.25 அடி. அணைக்கு வரும் 30 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.  #MullaPeriyar #PeriyarDam

    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 4,800 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சில நாட்கள் அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 4,800 கனஅடியாக குறைந்தது. இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து இருந்தனர்.

    குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்திருந்தனர். அவர்கள் மெயின் அருவி, மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பரிசலில் சவாரி செய்து ஒகேனக்கல் இயற்கை அழகை ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகையால் மீன் மார்க்கெட் களைகட்டி இருந்தது. மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் ஆகியோருக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்தது. பயணிகள் கூட்ட நெரிசலால் ஒகேனக்கல்லில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. #Hogenakkal

    கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு இன்றும் வினாடிக்கு தொடர்ந்து 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. #Hogenakkal
    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்றும் வினாடிக்கு தொடர்ந்து 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் தொங்குபாலம், முதலை பண்ணை ஆகிய பகுதிக்கும் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.  #Hogenakkal



    ×