search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "declined"

    • 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்தது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீன் அளவும் குறைந்தது. இருந்த போதிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.14 அடியாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இன்று வினாடிக்கு 1,072 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை அணை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை அடியோடு சரிந்து 16 கன அடி மட்டும் வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 1 மாதத்திற்கும் மேலாக வெகுவாக குறைந்தது.

    நேற்று அணைக்கு 39 கன அடி தண்ணீர் வந்தது. இன்று இது காலை அடியோடு சரிந்து 16 கன அடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 64.34 அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி இது 64.21 அடியாக குறைந்துள்ளது.

    நீர்வரத்து இதேநிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. #MetturDam

    நேற்று 117 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 116 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 117 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 116 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 82.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடிக்கு மேல் சரிந்து 81.2 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #Metturdam
    நேற்று 85.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 84.82 அடியானது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 293 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 179 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீரும், டெல்டா பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 85.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 84.82 அடியானது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2.3 அடி குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #Metturdam
    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 869 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 750 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 21-ந் தேதி 94.27 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 91.9 அடியாக இருந்தது.

    இன்று மேலும் ஒரு அடிக்கு மேல் சரிந்து 90.97 அடியானது. இதனால் 3 நாட்களில் 2.3 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #Metturdam
    சபரிமலையில் நெய் அபிஷேகம் வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ரூ.20 லட்சம் குறைந்துள்ளது. #Sabarimala
    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யலாம். தாமதமாக வரும் பக்தர்கள் இரவு சன்னிதானத்தில் தங்கியிருந்து மறுநாள் நெய் அபிஷேகம் செய்வார்கள்.

    தற்போது சன்னிதானத்தில் இரவு பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பல பக்தர்களால் நெய் அபிஷேகம் செய்ய முடியவில்லை. இதன் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்து விட்டது. கடந்த ஆண்டு நடை திறந்த 16 நாளில் நெய் அபிஷேகம் மூலம் ரூ.41 லட்சத்து 48 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு நெய் அபிஷேக வருமானம் ரூ.21 லட்சத்து 48 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம் ரூ.20 லட்சம் வருமானம் குறைந்துள்ளது. #Sabarimala

    மழை இல்லாததாலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து தற்போது 129.60 அடியாக உள்ளது. #Periyardam
    கூடலூர்:

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 129 அடியாக குறைந்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயர்ந்தது. அதன் பின்னர் மழை இல்லாததாலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து தற்போது 129.60 அடியாக உள்ளது.

    அணைக்கு 410 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பை மேலும் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.90 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 1478 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1670 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.80 அடியாக உள்ளது. 16 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.13 அடியாக உள்ளது. 23 கனஅடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. வருகிற 14-ந் தேதி முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். #Periyardam

    மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து சரிந்து 5 ஆயிரத்து 747 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நேற்று 100.01 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்றும் 100 அடியாக நீடித்தது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.

    கடந்த 30-ந் தேதி 2 ஆயிரத்து 538 கன அடியாக இருந்த நீர்வரத்து 9-ந் தேதி 5 ஆயிரத்து 244 கன அடியாக அதிகரித்தது. நேற்று 6 ஆயிரத்து 38 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து சரிந்து 5 ஆயிரத்து 747 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் ஒரே அளவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் அதே அளவில் நீடிக்கிறது. நேற்று 100.01 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றும் 100 அடியாக நீடித்தது. #MetturDam
    நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருகிறது. #MullaPeriyar #PeriyarDam
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 142 அடி வரை எட்டியது. இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிகுறி இன்னும் தென்படாததால் தொடர்ந்து நீர்வரத்து குறைந்துகொண்டே வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.65 அடியாக உள்ளது. அணைக்கு 767 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் நீர்மட்டம் 69 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அதன்படி இன்று காலை அணைக்கு வந்த 2220 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5571 மி. கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.35 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 90 கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.25 அடி. அணைக்கு வரும் 30 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.  #MullaPeriyar #PeriyarDam

    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 4,800 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சில நாட்கள் அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 4,800 கனஅடியாக குறைந்தது. இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து இருந்தனர்.

    குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்திருந்தனர். அவர்கள் மெயின் அருவி, மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பரிசலில் சவாரி செய்து ஒகேனக்கல் இயற்கை அழகை ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகையால் மீன் மார்க்கெட் களைகட்டி இருந்தது. மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் ஆகியோருக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்தது. பயணிகள் கூட்ட நெரிசலால் ஒகேனக்கல்லில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. #Hogenakkal

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு 3 மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டமும் சரிந்து கொண்டே வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

    நேற்று முன்தினம் 808 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை இது 611 கன அடியாக குறைந்தது. இன்று மேலும் குறைந்து 433 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்து. நேற்று மாலை 6 மணி முதல் நீர்திறப்பு வினாடிக்கு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு 3 மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டமும் சரிந்து கொண்டே வருகிறது.

    நேற்று முன்தினம் 34.62 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று 34.33 அடியாக சரிந்தது. இன்று காலை இது 34.06 அடியாக குறைந்துள்ளது.

    ×