என் மலர்
செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 4,800 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
ஒகேனக்கல்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சில நாட்கள் அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 4,800 கனஅடியாக குறைந்தது. இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து இருந்தனர்.
குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்திருந்தனர். அவர்கள் மெயின் அருவி, மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பரிசலில் சவாரி செய்து ஒகேனக்கல் இயற்கை அழகை ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் மீன் மார்க்கெட் களைகட்டி இருந்தது. மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் ஆகியோருக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்தது. பயணிகள் கூட்ட நெரிசலால் ஒகேனக்கல்லில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. #Hogenakkal
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சில நாட்கள் அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 4,800 கனஅடியாக குறைந்தது. இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து இருந்தனர்.
குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்திருந்தனர். அவர்கள் மெயின் அருவி, மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பரிசலில் சவாரி செய்து ஒகேனக்கல் இயற்கை அழகை ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் மீன் மார்க்கெட் களைகட்டி இருந்தது. மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் ஆகியோருக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்தது. பயணிகள் கூட்ட நெரிசலால் ஒகேனக்கல்லில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. #Hogenakkal
Next Story