search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vulnerability"

    • மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தகூடிய நிலையில் பழைமையான கட்டிடங்கள் உள்ளன.
    • புதிய கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை ஒன்றியம், ராராமு த்திரகோட்டை கிராம த்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை என 200 க்கும் மேறாபட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இங்குள்ள பள்ளி வகுப்பறை கட்டி டங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்த நிலையில் மாணவர்களின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தகூடிய நிலையில் பழைமையான கட்டிடங்களாக உள்ளன. மேலும் மழை காலங்களில் மழைநீர் வகுப்பறை முழுவதும் ஒழுகுவதாகவும் கூறப்படுகிறது. அதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    பழுதடைந்த நிலை யில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் அமைத்துதர வேண்டுமென இங்குள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் நீண்ட நாட்களாக அரசை வலியுறு த்தி வருகின்றனர். உயிர்பலி ஏற்படும் முன்பு பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரு 30 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • மழையால் பாதிக்கபட்ட வீடுகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளான, நெல்லூர், சூரக்காடு, வேட்டங்குடி, நெப்பத்தூர், திருவாளி ஏரி, கருவி ஆகிய இடங்களை, மழையால் பாதிக்கப்பட்ட, மக்களையும், நெற்பயிர்களையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். சீர்காழி தரங்கம்பாடி பகுதிகளில், சம்பா தாளடி 87000 ஏக்கர் நிலங்கள், மழையால் பாதிக்கபட்டும்,

    257 கிராமங்கள் மழைநீரால் சூழப்பட்டும் பாதிக்கபட்டு இருந்தது.

    இந்த பாதிப்புகளை பார்வையிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆக்கூர் அருகே தலையுடையவர் கோயில் பத்து கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த நெற்பயி ர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயி களிடம் கேட்டறிந்தார் பின்னர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு நிவாரன உதவி பொருட்கள் வழங்கினார்.

    அவருடன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர்

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

    மயிலாடுதுறை மாவட்டம் சிறிய மாவட்டம். தற்போது, தரங்கம்பாடி, சீர்காழி பகுதிக்கு மட்டும் நிவாரணம் வழங்கபட்டுள்ளது. அதை, மயிலாடுதுறை குத்தாலம் பகுதிக்கும் அதிகரிக்க வேண்டும், நெற்பயிர் பாதிக்கபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரு 30, ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கபட்ட வீடுகளுக்கு தலா ரூ.3. ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓதவந்தான்குடி கிராமத்தில் குடியிருப்புகள தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
    • மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீர் புகுவதை தடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் புதுமண்ணியாறு உள்ளது. ஓதவந்தான்குடி, செருகுடி,வட்டாரம்,மாதானம்,பழையபாளையம்,தாண்டவன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை பல்வேறு கிராமங்களுக்கு பாசனவசதி தரும் பிரதான பாசன ஆறாக உள்ளது.

    இதனிடையே கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புதுமண்ணியாற்றில் கரைகள் வழிந்து தண்ணீர் செல்கிறது.

    இதனால் புதுமண்ணியாற்றில் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஓதவந்தான்குடி கிராமத்தில் குடியிருப்புகள தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனஓட்டிகளும் அவதியடைந்தனர்.

    இதனிடையே உடைப்பு ஏற்பட்ட கரைகளை பொதுமக்களே மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீர் புகுவதை தடுத்தனர்.

    இந்த புதுமண்ணியாற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது இவ்வாறு கரைகள் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளதாகவும், இதனால் வரும் காலத்தில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க கான்கிரிட் தடுப்பு சுவர் அமைத்து கரைகளை பலப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எங்கள் கிராமத்தில் வேலை இல்லாமல் அவதிப்பட்டோம்.
    • உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கும்படும் அபாயநிலை உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ஆலங்குடி அருகே பிராந்தை கிராமத்தில் தற்போது சம்பா நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்காக மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    உள்ளூர் பகுதியில் ஆள்பற்றாகுறை, கூலி உயர்வு போன்ற காரணமாக நாற்று நடும்பணி உள்பட விவசாய பணிக்கு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 15 தொழிலாளர்கள் வரவழக்கப்பட்டு விவசாயிகள் இப்பகுதியில் சம்பா விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.

    வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக விவசாய நடவு செலவு 30 சதவீதம் வரை குறைவதாக தெரிவித்தனர்.

    வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கும்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வடமாநில தொழிலாளர் கூறும்போது:-

    எங்கள் கிராமத்தில் வேலை இல்லாததால் அவதிப்பட்டோம்.

    அதனால் இங்கே வந்து வேலை செய்கிறோம்.

    கடந்த 15 நாட்களாக வேலை செய்கிறோம்.

    இன்னும் இங்கு ஒரு மாதம் வேலை இருக்கு. அதன் பரிறகு சொந்த ஊருக்கு கிளம்பி விடுவோம் என்றனர்.

    • கடந்த 2 நாட்களாக முகமது பாரூக் வீட்டை வீட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
    • கடந்த 2 நாட்களாக முகமது பாரூக் வீட்டை வீட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் அண்ணாநகரை சேர்ந்தவர் முகமதுபாரூக் (வயது 72).

    இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    முதியவர் முகமது பாரூக்கின் மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதனால் முகமதுபாரூக் வீட்டில் தனியாக கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.

    அவருக்கு உடல்நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் முகமதுபா ரூக்கை அவருடைய சகோ தரர் வீட்டுக்கு சென்று உடல்நிலை விசாரித்து விட்டு வந்துள்ளார்.

    இதனை யடுத்து கடந்த 2 நாட்களாக முகமதுபாரூக் வீட்டை வீட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

    இதற்கிடையே வல்லம் பஸ் நிலையம் அருகே கடை வைத்திருக்கும் ஒருவர் முகமதுபாரூக்கை சந்திப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் திறந்திருந்தன.

    உள்ளே சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியுள்ளது. வீட்டில் டி.வி ஓடி கொண்டு இருந்தது. அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வீட்டினுள் முகமதுபாரூக் பிணமாக கிடந்ததை பார்த்து சத்தம் போட்டார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    இது குறித்து வல்லம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அதில் முகமதுபாரூக் இறந்து 2 நாட்களாகி இருக்கும் என்பதால் உடல் துர்நாற்றம் வீசி உள்ளதாக சந்தேகப்பட்டனர்.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமதுபாரூக் உடல்நிலை பாதிப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முகமதுபாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், பண்டாரவாடை கிரசெண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கோமதி வரவேற்று பேசினார்.

    பள்ளி நிர்வாகக்குழு தலைவர் முகமது ஜபுருல்லா தலைமை வகித்தார்.

    தாளாளர் முகமதுபாட்சா, முன்னாள் உறுப்பினர் அப்துல்ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    பள்ளி தமிழாசிரியை கலையரசி உறுதிமொழி வாசித்தார்.

    பள்ளியின் நிர்வாக அலுவலர் சி.கரிகாலன், துவக்கவுரை நிகழ்த்தினார்.

    இதில் பாபநாசம் காவல் கண்காணிப்பாளர் பூரணி, மனநல மருத்துவர் இக்பால் சரிப் ஆகியோர் கலந்து கொண்டு மது போதை பொருட்களினால் உண்டாகும் பாதிப்புகள், தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    இந்த கருத்தரங்கில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முகமதுபாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் ஆசிரியர் கென்னடி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த சரோஜா என்ற மூதாட்டியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • மனநலம் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு முடி சுத்தம் செய்து குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, தொடர்ந்து மனநல சிகிச்சை அளித்து, நல்ல உணவளித்து வருகிறோம்.

    திருத்துறைப்பூண்டி:

    மகளிர் உதவி மைய அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் இவர்களின் ஆலோசனைப்படி திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே வீதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்து கொண்டிருந்த முகவரி சொல்ல தெரியாத 63 வயது மதிக்கத்தக்க சரோஜா என்ற மூதாட்டியை சமூக நலத்துறை ஓஎஸ்சி நிர்வாகி சுமிதா மற்றும் பணியாளர்கள், திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் உதவியுடன் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அங்கு சரிவர ஒத்துழைப்பு செய்ய மறுத்த சரோஜாவை திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு கொண்டு வந்து மனநல சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிப்பதற்காக ஓ.எஸ்.சி நிர்வாகி சுமிதா, தலைமை காவலர் மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ராஜகணேஷ் ஆகியோர் சேர்த்தனர்.

    நம்பிக்கை மனநல காப்பக சமூகப் பணியாளர் சுபா, பணியாளர்கள் சரவணன், கோகிலா, செவிலியர் சுதா ஆகியோர் அவரை ஆசுவாசப்படுத்தி குளிக்க வைத்து மனநல சிகிச்சைக்காக சேர்த்து க்கொண்டனர் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு முடி சுத்தம் செய்து குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, தொடர்ந்து மனநல சிகிச்சை அளித்து, நல்ல உணவளித்து வருகிறோம். சில நாட்கள் கழித்து அவரின் முகவரியை கண்டறிந்து கண்டுபிடித்து அவர்களது வீட்டாருடன் சேர்ப்போம் என்றார்.

    • கடந்த மே மாதம் வரை கொரோன பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரேனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
    • பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும கடை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 19 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

    ஏற்கனவே மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 73 பேரில் 6 பேர் குணமாகினர். தற்போது 86 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோன பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரேனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

    சென்னை சுற்று வட்டார பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சேலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது. தற்போது அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களில் அனைவருக்கும் பரிசோதைனையை செய்ய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே முக கவசம் அணிவது கட்டாய–மாக்–கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணியா–தவர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும கடை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • பள்ளிகளில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன் ஒவ்வொரு பள்ளியாக சென்று பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் சம்பந்தமான அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • பள்ளி குழந்தைகளுக்கு முறையான கை கழுவும் முறை, வெந்நீர் அருந்துவதால் தடுக்கப்படும் நோய்கள் உள்ளிட்ட தன் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சீர்காழி அருகே உள்ள கொண்டல், தேனூர், ஆதமங்கலம், ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன் ஒவ்வொரு பள்ளியாக சென்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொழுநோய் சம்பந்தமான அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மேலும் பள்ளி குழந்தைகளுக்கு முறையான கை கழுவும் முறை, வெந்நீர் அருந்துவதால் தடுக்கப்படும் நோய்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மரம் வளர்ப்பதன் அவசியம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட தன் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    • டவுன் பெரிய தெருவில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு டவுன் பெரியதெரு உள்பட ஏராளமான இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் முகாம்கள் நடத்தி வருகின்றனர்

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் குறிப்பாக டவுன் பகுதியில் கடந்த சில நாட்களாக மஞ்சள்காமாலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரிய தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி ஸ்ரீநிதி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    டவுன் பெரிய தெருவில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சாக்கடையை தூர்வாருதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததன் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளார் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் குடிநீரில் சாக்கடை கலப்பது தொடர்கதை ஆகிவிட்டது. தொண்டர் சன்னதியில் தொடங்கி நயினார்குளம் வரையிலும் கழிவு நீர் ஓடைகள் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

    மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியவுடன் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் வந்து அங்குள்ள மக்கள் பருகும் குடிநீரை மாதிரி எடுத்து ஆய்வுக்கு சென்னைக்கு அனுப்பி உள்ளனர்.

    அதன் முடிவில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்திருப்பது தெரிய வந்தது. ஆனாலும் இதுவரை எவ்வித தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதுதொடர்பாக 2 மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மட்டுமல்லாது மேயர் துணை மேயரிடமும் மனு கொடுத்து வருகிறோம்.

    ஆனால் மனுவை அவர்கள் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பதோடு எல்லாம் முடிந்து விடுகிறது.

    தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகளின் அலட்சியமான நடவடிக்கைகளின் காரணமாக நாங்கள் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று ஆதங்கத்துடன் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

    இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு டவுன் பெரியதெரு உள்பட ஏராளமான இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் முகாம்கள் நடத்தி வருகின்றனர். அங்கே சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

    ×