என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sandbags"
- ஆனந்த காவேரி கால்வாய் கரையோரத்தில் வாய்க்காலில் நழுவி சரிந்து விழத் தொடங்கியது.
- இடத்தில் நீண்ட கம்புகளை நட்டு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
பூதலூர்:
பூதலூர் ஒன்றியம் மாரனேரி கிராமத்திலிருந்து கல்லணை செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையில் மாரநேரி கிராமத்தில்இருந்து கச்சமங்கலம் செல்லும் வழியில் ஆனந்த காவேரி கால்வாய் கரையோரத்தில் வாய்க்காலில் நழுவி சரிந்து விழத் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு சாலை சரிந்து விழதொடங்கிய நிலையில் அந்த இடத்தில் நீண்ட கம்புகளை நட்டு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
இந்த வழியாக ஏராளமான லாரிகள் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கல்லணைக்கும், திருக்காட்டுப்பள்ளிக்கும், ஒரத்தூர், மறுபுறத்தில் சோளகம்பட்டிக்கும், இந்தளூர் திருவெறும்பூருக்கும் சென்று கொண்டுள்ளன.
சாலை சரிந்து விழதொடங்கிய இடத்தில் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டு, நீண்ட கம்பு ஊன்றி சிவப்பு துணியை கட்டி உள்ளனர்.
இந்த இடத்தில் சாலையோரத்தில் நிரந்தரமாக தடுப்புச்சுவர் அமைத்து சாலையை சீரமைத்து தருவதற்கு பதிலாக கண்டுகொள்ளாமல் சம்பந்தப்பட்ட துறையினர் மெத்தன போக்கில் இருப்பதாக இந்த பகுதி மக்கள் குறைபட்டு கொள்கின்றனர்.
தற்பொழுது ஆனந்த காவேரி வாய்க்காலில் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அடுக்கப்பட்ட மணல் மூட்டைகளை அகற்றி நிரந்தரமாக தடுப்புச் சுவர் கட்டி சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- ஓதவந்தான்குடி கிராமத்தில் குடியிருப்புகள தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
- மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீர் புகுவதை தடுத்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் புதுமண்ணியாறு உள்ளது. ஓதவந்தான்குடி, செருகுடி,வட்டாரம்,மாதானம்,பழையபாளையம்,தாண்டவன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை பல்வேறு கிராமங்களுக்கு பாசனவசதி தரும் பிரதான பாசன ஆறாக உள்ளது.
இதனிடையே கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புதுமண்ணியாற்றில் கரைகள் வழிந்து தண்ணீர் செல்கிறது.
இதனால் புதுமண்ணியாற்றில் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஓதவந்தான்குடி கிராமத்தில் குடியிருப்புகள தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனஓட்டிகளும் அவதியடைந்தனர்.
இதனிடையே உடைப்பு ஏற்பட்ட கரைகளை பொதுமக்களே மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீர் புகுவதை தடுத்தனர்.
இந்த புதுமண்ணியாற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது இவ்வாறு கரைகள் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளதாகவும், இதனால் வரும் காலத்தில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க கான்கிரிட் தடுப்பு சுவர் அமைத்து கரைகளை பலப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்