search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vulnerability"

    • திருச்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வருகின்றன
    • மத்திய மாநில அரசுகள் உதவிட கோரிக்கை

    திருச்சி, 

    மத்திய அரசின் பிரதான நிறுவனங்களில் ஒன்றாக பெல் நிறுவனம் இருந்து வருகிறது.திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் நீராவி கொதிகலன்கள், அனல் மின் உற்பத்தி சாதனங்கள், காற்றாலை உற்பத்திக்கான ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இதனை நம்பி திருவெறும்பூர், அரியமங்கலம், துவாக்குடி, புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தன பொருளாதார தேக்கம், பெல் நிறுவனத்திற்கு கிடைத்து வந்த ஆர்டர்கள் குறைப்பு போன்ற காரணங்களால் அதனை சார்ந்து இயங்கி வந்த மேற்கண்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் 2016 ம் ஆண்டு முதல் நெருக்கடியை சந்திக்க தொடங்கின.இதனால் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.தற்போது இயங்கி வரும் நிறுவனங்களில் 51 நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

    வங்கிகளால் செயல்பட முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களாக இந்த நிறுவனங்களும் வாராக்கடன் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் அளிக்காத காரணத்தால் கூடுதல் வட்டிக்கு வங்கி சாராத நிறுவனங்களை அவர்கள் அணுகி மேலும் மேலும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

    மறுபுறம் வங்கிகள் தங்களது கடனை வசூலிக்க சட்ட நடவடிக்கைகளையும் தீவிரப் படுத்தி உள்ளது. நிறுவனங்களை மூடி ஏலம் விடும் நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் சிறு கூறு நிறுவனங்களுக்கு 8 வாரங்கள் அவகாசம் அளித்து சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது ஆறுதலாக இருந்தாலும் நிரந்தர தீர்வாக அமையாது என தொழில் முனைவோர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து பெல் சிறு குறு தொழில் சங்க முன்னாள் தலைவரும், தமிழ்நாடு பாய்லர் அசோசியேசன் திருச்சி பிரிவு பொறுப்பாளருமான ராஜப்பா ராஜ்குமார் கூறும் போது, திருச்சியில்முன்பு 500 யூனிட்டுகள் 7 லட்சம் டன் உற்பத்தி என்ற நிலையில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் இருந்தது 2016 ம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்து தற்போது 50 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி குறைந்துவிட்டது. நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.சிறு குறு நிறுவனங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் வங்கிகள் அதைக் கேட்பதாக இல்லை.

    பேரிடர் காலத்தில் மத்திய அரசு வழங்கிய நிவாரணத்தால் சில நிறுவனங்கள் மூச்சு விடும் நிலைக்கு வந்தன. இருந்த போதிலும் நலிவடைந்துள்ள நிறுவனங்களை மீட்டெடுக்கவும், புத்துயிர் அளிக்கவும், புனரமைக்கவும் நிவாரணம் மற்றும் கடனுதவிகள் அவசியமாகிறது.இதற்கு உடனடியாக 4சதவீத வட்டியில் புதிய கடன்களை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவ்வாறு உதவிகள் கிடைத்தால் மட்டுமே நலிவடைந்த சிறு குறு தொழில்களை மீட்டெடுத்து தொழிலாளர்கள் வேலை இழப்பை தடுக்க முடியும் என்றார்.

    • திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ பெருமலை, மேல பெருமலை. குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெல் சாகுபடி வயலுக்கு தேவையான நீர் முறையாக வரவில்லை. இதனால் வயலில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலைக்கு சென்றது.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டடோர் ஊராட்சி மன்ற தலைவர்கள் வளர்மதி, முருகானந்தம், செல்வி ஆகியோர் தலைமையில் இன்று திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி கடை தெரு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இந்த திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் எடையூறு போலீசார் மற்றும் திருத்து றைப்பூண்டி உட்கோட்ட பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தை முடிவில் விரைவில் வயலுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    இதனால் இப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    • மாலை நேரங்களில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது
    • பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மழையில் குடை பிடித்தபடி சென்றனர்.

    கடலூர், ஜூன்.19-

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடிந்து 104 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலால் கடலூர் மாவட்டத்தில் மதிய வேலைகளில் அனல் காற்று வீசி வந்ததோடு இரவிலும் வெயிலின் தாக்கத்தினால் ஏற்பட்ட புழுக்கத்தால் வீட்டிற்குள் பொதுமக்கள் இருக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. 

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை 2- வது நாளாக நேற்று மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்து இன்று காலை வரை பெய்தது. விடிய விடிய பெய்த மழையினால் கடலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். மேலும் கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

    இந்த மழை கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காலை முதல் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மழையில் குடை பிடித்தபடி சென்றனர். 

    இதேபோல் காட்டுமன்னார்கோவில் பகுதியிலும் நேற்று இரவு முதல் காலை வரையில் மழை நீடித்தது. இந்த மழை காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள லால்பேட்டை, மாகொள்ளங்குடி, எடையார், ஆயங்குடி, அனக்கரை, வாணாமதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. புவனகிரி பகுதிகளிலும் நேற்று முதல் மழை பெய்தது. புவனகிரி சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மேலும் புவனகிரி சுற்றி உள்ள விவசாய நிலத்திலும் தண்ணீர் வரத்து வர தொடங்கியது. 

    இதேபோன்று மழையினால் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் கடந்த 7 மணி நேரமாக மின்தடையில் சிக்கி இருளில் மூழ்கிய கிராம மக்கள். மேலும் ராமநத்தம் சுற்றியுள்ள வாகையூர் பகுதியில் தொடர்ச்சியாக தினம் தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. இரவு நேரங்களில் மின்வெட்டு தொடர்வதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சிரமம் அடைந்து வருகின்றனர்.கோடை வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை கடலூர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

    • ஜமுனாவிற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
    • மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் கண்டக்காட்டை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஜமுனா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜமுனாவிற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த மே மாதம் 13-ந்தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண் டார். பலத்த தீக்காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்த்துசை பலனின்றி ஜமுனா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி ரெயில்வே பயிற்சிப் பள்ளியில் தங்கியிருந்தவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
    • அம்மை நோயா? மாநகராட்சியினர் ஆய்வு

    திருச்சி,

    திருச்சி ரெயில்வே பயிற்சி மையத்தில் தங்கியிருந்தவர்களில் சிலருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.ரெயில்வே பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு திருச்சியில் அமைந்துள்ள மண்டல ரெயில்வே பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுமார் 400 பேர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் அண்மையில், பயிற்சி மையத்தில் தங்கியிருந்த இருவருக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக பயிற்சி மையத்திலிருந்த சுமார் 10 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் பரவியது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோருக்கு ரெயில்வேதுறை சார்பில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரவர் விருப்பப்படி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இதுக்குறித்த தகவலறிந்த திருச்சி மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், நகர்நல அலுவலர் மணிவண்ணன் தலைமையில், ரெயில்வே பயிற்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர் களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில், கடும் வெயில்தாக்கம் மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி) யினால் ஏற்பட்ட கொப்புளங்கள் என்பதும், அம்மை நோய் இல்லையென்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பயிற்சி மையம் கிருமிநாசினிகள் தெளித்து தூய்மை படுத்தப்பட்டுள்ளது.

    • மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
    • பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிதிஉதவி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஒன்றியம், இனையாளூர் ஊராட்சி வடகரை புதுத்தெருவை சேர்ந்த விவசாயி எபி. இவரது வீடு மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட எபி குடும்பத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட தேசிய சட்ட உரிமை கழகம் சார்பில் நிதி உதவி, மளிகை பொருட்களை மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் வழங்கி ஆறுதல் கூறினார்.

    அப்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், துணை செயலாளர் வெங்கட்ராமன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சங்கீதா, மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதி என்கிற பாரதிராஜா, நகர மன்ற செயலாளர் மணி கண்ட பிரபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் லியாத்அலி, செம்பை ஒன்றிய செயலாளர் ஜாபர்சாதிக் , ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிறிய ரக ஈக்கள் மலர்களை சேதப்படுத்தி வருகின்றன
    • விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை

    திருச்சி, 

    திருச்சி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை (குண்டுமல்லி) பயிரிட்டுள்ளனர். குறிப்பாக போசம்பட்டி, பொடவூர், புலியூர், கோப்பு, வியாழன் மேடு, அயிலாடிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பயிர்கள் பூக்கள் பூக்கும் பருவத்தை எட்டி உள்ளது.இந்த நிலையில் சிறிய ரக ஈக்கள் மலர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் மலர் மொட்டுகள் சிவப்பு நிறமாகி அதன் பின்னர் பூக்கள் உதிர்து விடுகின்றன. மேலும் மொட்டுகளின் தரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இதன் காரணமாக மகசூல் மற்றும் வருமானம் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சிறுகமணியைச் சேர்ந்த கே.வி.கே. விஞ்ஞானிகள், மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் (சி.ஐ.பி.எம்.சி.) மற்றும் தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கண்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை தெரிவித்தனர். இதையடுத்து பூச்சிகளை கட்டுப்படுத்த போலியார் ஸ்ப்ரேயினை வார இடைவெளியில் தெளிக்க அறிவுறுத்தினர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
    • மீண்டும் பாதிப்பு தலைதூக்கி உள்ளது

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது 2 மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்க தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும் வீட்டு தனிமையிலும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

    • பல ஆயிரம் ெஹக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாதிப்படைந்துள்ளது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தமிழக காங்கிரஸ் கட்சி விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் பெய்த பருவம் தவறிய தொடர் கனமழையால் 80 சதவீதம் சம்பா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே அமைச்சர்கள் குழுவை ஆய்வு நடத்த கூறி நிவாரண தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    தமிழக அரசின் வேளாண்மைத் துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிக ளிலும் சம்பா சாகுபடி பயிரிடப்பட்ட அளவு, அறுவடைச் செய்யப்பட்ட அளவு மற்றும் பாதிக்கப்பட்ட அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த அளவீடுகள் எவ்வாறு எடுக்கப்பட்டதென தெரியவில்லை.

    பல ஆயிரம் ெஹக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டு குறிப்பிட்ட அளவுகளுக்குள் மட்டுமே பாதிப்படைந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது போல பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு அதிகாரிகள் உண்மையாக நேரடிக் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதை உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ. 2 ஆயிரம் செலவு செய்து குளத்தில் மையத்தில் உள்ள தண்ணீரை இறைத்து விட்டால் பாதிப்பு இருக்காது.
    • கூட்டத்தில் வைத்துள்ள 4 தீர்மானங்களை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கவில்லை.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாந கராட்சி கூட்டம் நடந்தது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-

    குடிநீர் கட்டணத்துக்கு 2 முறை பில்போடப்படுவது ஏன் ?, மாநகரின் பைராகி தோப்பில் உள்ள குளத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்கி தெருக்களில் தண்ணீர் ஓடுகிறது.

    மழைக்காலத்தில் குளத்தில் இருந்து மெயின் ரோட்டை கடந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டது.

    இதைப்போல ரூ.2 ஆயிரம் செலவு செய்து குளத்தில் மையத்தில் உள்ள தண்ணீரை இறைத்து விட்டால் பாதிப்பு இருக்காது. ரூ.2 ஆயிரம் கூடசெலவு செய்ய மாநகராட்சியில் நிதி இல்லையா.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்த 3 கழிவறைகளில் தற்போது 2 கழிவறைகள் மூடப்பட்டுள்ளது.

    இதனால் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே மூடப்பட்டுள்ள கழிவறைகளை திறந்துவிட வேண்டும் என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    மாநகராட்சி அவசரக்கூ ட்டத்தில் வைத்துள்ள 4 தீர்மானங்களை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கவில்லை. இந்த தீர்மானங்களுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

    மாநகராட்சி முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கொசுவை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது வீடுதோறும் கொசு வலைகள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்.

    மாநகராட்சியில் போதிய வரிவசூல் கிடைத்து விட்டதால் கவுன்சிலர்களின் குறைகள் படிப்படியாக தீர்க்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் என்ஜினீயர் லலிதா, நகர் நல அலுவலர் பிரேமா மற்றும் மாநகரட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
    • வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.

    சீர்காழி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.

    இதனால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    பாதிப்பு குறித்து தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு ஆய்வு செய்து இரண்டு வட்டங்களிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கினார்.

    வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.

    இந்தத் தொகை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எந்த வகையிலும் போதாது.

    தமிழக முதல்வர் நடப்பு ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களுக்கும் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 15 வருவாய் கிராமங்களுக்கும், கொள்ளிடம் ஒன்றியத்தில் 43 வருவாய் கிராமங்களக்கும் பயிர் காப்பீடு வழங்கப்படவுள்ளது சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் 153 வருவாய் கிராமங்களில் 87 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே நடப்பு ஆண்டு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.

    இதனால் மீதமுள்ள 65 வருவாய் கிராம விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் ஆகையால் மீதமுள்ள 65 கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி நடப்பாண்டு பயிர் காப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கு.
    • முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஈசானிய தெருவில் அமைந்துள்ளது.

    இந்த குப்பை கிடங்கில் விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கிங் செய்து எரிபொருளாக பயன்படுத்த அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதற்கும் அபாயகரமான கழிவுகளை முறையான பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கும் குப்பைகளை அரைத்து உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் நகராட்சி மூலம் வாங்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார்.

    நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் புதிய எந்திரங்களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பாஸ்கரன், பாலமுருகன், முபாரக் அலி, ராமு, ரமாமணி, ராஜசேகர், ஜெயந்தி பாபு, கிருஷ்ணமூர்த்தி ராஜேஷ், நிர்வாகிகள் பந்தல்முத்து, திருச்செல்வன், மதியழகன், வெற்றி, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×