என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதியவர் மர்ம சாவு
- கடந்த 2 நாட்களாக முகமது பாரூக் வீட்டை வீட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
- கடந்த 2 நாட்களாக முகமது பாரூக் வீட்டை வீட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் அண்ணாநகரை சேர்ந்தவர் முகமதுபாரூக் (வயது 72).
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
முதியவர் முகமது பாரூக்கின் மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் முகமதுபாரூக் வீட்டில் தனியாக கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
அவருக்கு உடல்நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முகமதுபா ரூக்கை அவருடைய சகோ தரர் வீட்டுக்கு சென்று உடல்நிலை விசாரித்து விட்டு வந்துள்ளார்.
இதனை யடுத்து கடந்த 2 நாட்களாக முகமதுபாரூக் வீட்டை வீட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே வல்லம் பஸ் நிலையம் அருகே கடை வைத்திருக்கும் ஒருவர் முகமதுபாரூக்கை சந்திப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் திறந்திருந்தன.
உள்ளே சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியுள்ளது. வீட்டில் டி.வி ஓடி கொண்டு இருந்தது. அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டினுள் முகமதுபாரூக் பிணமாக கிடந்ததை பார்த்து சத்தம் போட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இது குறித்து வல்லம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அதில் முகமதுபாரூக் இறந்து 2 நாட்களாகி இருக்கும் என்பதால் உடல் துர்நாற்றம் வீசி உள்ளதாக சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமதுபாரூக் உடல்நிலை பாதிப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்