search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishwaroopam 2"

    தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசனுக்கு போட்டியாக அதில் பங்கு பெற்றவர்களே களமிறங்க இருக்கிறார்கள். #Kamalhaasan
    கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’. இதில் இவருடன் ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

    அன்றைய தினத்தில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண், ரைசா ஜோடியாக நடித்துள்ள ‘பியார் பிரேமா காதல்’ ரிலீசாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 

    கே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் உருவாகியுள்ளது. இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது.



    இந்நிலையில், இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். #Vishwaroopam2 #KamalHaasan #PyaarPremaKaadhal 
    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் 10-ல் ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக `விஸ்வரூபம்-2' ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

    சமீபத்தில் வெளியாகிய ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஔிபரப்பப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    முன்னதாக நேற்று படத்தில் இருந்து `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிள் நேற்று வெளியானது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan

    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் சாதி மதம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். கமல்ஹாசன் எழுதிய இந்த பாடலை சத்யபிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

    இந்தப் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான `நானாகிய நதிமூலமே', `ஞாபகம் வருகிறதா' உள்ளிட்ட 2 பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் 10-ல் ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கமல்ஹாசன் எழுதிய இந்த பாடலை சத்யபிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். 

    ஜிப்ரான் இசையில் வெளியாகிய `நானாகிய நதிமூலமே', `ஞாபகம் வருகிறதா' உள்ளிட்ட 2 பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan

    முதல் முறையாக நடிகர் கமல்ஹாசனும், பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானும் ஒரே திரையில் தோன்றுகிறார்கள். #KamalHaasan #SalmanKhan
    கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி உள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இப்படம் இந்தியில் இந்தியில் `விஸ்வரூப் 2' என வெளியாக இருக்கிறது. இயக்குனர் ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகின்றனர்.

    இந்தி வெளியீட்டுக்கான புரமோஷன் பணிகளில் தற்போது இறங்கி இருக்கிறார் கமல். இதற்காக சல்மான்கான் தொகுத்து வழங்கும் `தஸ் கா தம்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன். திரையில் இருவரும் இணைந்து தோன்ற இருப்பது இதுவே முதன் முறை.



    ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. #Vishwaroopam2
    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் 10-ல் ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் இந்தி பதிப்பிற்கான உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேநேரத்தில் ஜிப்ரான் இசையில் `நானாகிய நதிமூலமே', `ஞாபகம் வருகிறதா' உள்ளிட்ட பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் இந்தி பதிப்பை ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
    இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். 
    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan

    சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன் என்று கமல்ஹாசன் கூறியிந்த நிலையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் இருப்பது குறித்து கமல் விளக்கியுள்ளார். #KamalHaasan
    நடிகர் கமல்ஹாசன் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கேள்வி ‘விஸ்வரூபம்’ வெளியீட்டின்போது படத்தை ‘டிடிஎச்’சில் வெளியிடுவேன் என்றீர்கள். அதற்கு எதிர்ப்புகள் வந்தன. அந்தப் பிரச்னைகளின் நினைவுகள் இப்பவும் துரத்துகிறதா?

    பதில் இப்போது முன்னைவிடத் தெம்பாகவும் புரிந்தநிலையிலும் இருக்கிறேன். அது அரசியல் இடையூறுதான். யாரோ செய்யும் தொழிலில் நான் புகுந்துவிட்டதாக நினைத்து விட்டார்கள். நியாயமான வருமானம் வேண்டுமென்றால் தியேட்டர்களின் எண்ணிக்கை கூடவேண்டும். ஆந்திராவில் எல்லாம் அப்படித்தான். ஆனால் கள்ள மார்க்கெட் அது இது என்று சலவை செய்யும் இடமாகத் தமிழ் சினிமா இருப்பதை நான் விரும்பவில்லை.

    கேள்வி:- உங்கள் தொலை நோக்குப் பார்வையை உங்கள் துறைசார்ந்தவர்களே புரிந்துகொள்ளாதபோது எப்படி உணர்வீர்கள்?”

    பதில்:- மாற்றங்கள் மெதுவாகத்தான் நடக்கும். எதிரில் இருப்பவனை மனிதனாகப் பார்க்காமல் இரையாகப் பார்த்த காலம் மாற எத்தனை லட்சம் வருடங்கள் கடந்தன? ‘சாதிகள் இல்லையடி பாப்பா’னு சொல்ல நன்றாக இருக்கிறது. ஆனால் மாற்ற முயற்சி பண்ணினால் ‘உங்க வீட்ல என்ன பண்றீங்க?’னு கேட்கிறார்கள். நான் எதற்கும் முன்னுதாரணமா இருக்கிறதைத்தான் விரும்புகிறேன். நீ பண்ணுனு சொல்ல மாட்டேன். நான் பண்றேன்னு பண்ணிக்காட்டுவேன். எல்லாரும் அதைப் புரிஞ்சு கூடவர தாமதம் ஆகத்தான் செய்யும்.”



    கே:- ரசிகர்கள் சினிமாவையும் அரசியலாகப் பார்ப்பது குறித்து?

    ப:- அண்ணாவின் ‘வேலைக்காரி’யில இருந்து, கலைஞரின் ‘பராசக்தி’யில இருந்து அப்படித்தானே. இப்போது இன்னும் அதிகமாகியிருக்கு. அது எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லாரும் கேள்வி கேட்கறாங்க. இந்த ‘எல்லாரும் விழித் திருத்தல்’தான் நான் எதிர்பார்த்தது.

    கே:- விஸ்வரூபம் 2 டிரெய்லர்ல தமிழ்ல வசனம் மாற்றியது எதிர்ப்புகளைத் தவிர்க்கவா?

    ப:- அப்படியெல்லாம் இல்லை. படம் பார்த்தா உங்களுக்குப் புரியும். தவிரவும் நம்ம வாக்கியத்தொடர் வேற. இந்தியில் வேற. அதுக்காகச் சில வசனங்கள் மாறலாம். அதுபோக டிரெய்லர்ல மிகக்குறைந்த நேரம்தானே. அதையெல்லாம் பெரிசு படுத்துவாங்கனு நினைக்கவில்லை. சோஷியல் மீடியா காலமில்லையா; அதான் சர்ச்சை ஆயிடுச்சு. ஆனால், நான் இதைவிட காட்டமாக அரசியல் பேசியிருக்கிறேன்; எழுதியும் இருக்கிறேன்.



    கே:- சபாஷ் நாயுடு எந்த நிலையில் இருக்கு? ‘சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன்’ என்று சொல்லும் உங்கள் படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் இருக்கே?”

    ப:- 40 சதவீதம் முடிஞ்சது. டைட்டிலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஆர்.ராதா சாதிக்கெதிரா அத்தனை பேசினவர். ஆனால் சாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு தான் வசனமே வைப்பார். பேர் வெச்சதாலேயே அதைக் கொண்டாடறதா அர்த்தமில்லை.

    கே:- உங்க அரசியல் வருகை எப்படி திடீர்னு நடந்தது?”

    ப:- எனக்கு சினிமா தான் எல்லாம்னு நினைச்சுட்டிருந்தேன். நான் சினிமாவில் நினைச்சதெல்லாம் செய்ய முடியலைங்கறது உண்மை. ஏன்னு யோசிச்சேன். அஸ்திவாரமே சரியா போடாம, சிகையலங்காரம் பண்ணிட்டிருக்கோம்னு தோணிச்சு. நான் அரசியலுக்கு வர்றது ‘ஹேராம்’லயே ஆரம்பிச்சது. ஆபத்து வருது, ஆபத்து வருதுன்னு ஒரு கட்டியம் கூறுதல் அதுல நடந்திருக்கும். அதுதான் இப்ப நடந்துட்டிருக்கு. நாடெங்கிலும் ஸ்ரீராம் அய்யங்கர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனையோ சாகேத்ராம்கள் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #KamalHaasan #Vishwaroopam2 #SabashNaidu

    கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் அவரது காதலரை பிரிந்துவிட்டதாக சில தகவல்கள் வெளியான நிலையில், சுருதி, அவரது காதலர் என இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். #Vishwaroopam2 #ShrutiHaasan
    கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் அரசியலிலும் இன்னொரு பக்கம் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சி, விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீடு, சபாஷ் நாயுடு, இந்தியன் 2 படங்கள் என சினிமாவிலும் கால் ஊன்றியபடியே உள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகிறதா' பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவர் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்று கமலிடம் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு பதில் அளித்து கமல் நான் சினிமாவை விட்டு விலகி போகமாட்டேன். நடித்தால்தான் சினிமாவா? உங்களில் ‘ஒருவனாக’ அமர்ந்து சினிமாவை பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அதை விடவும் ஒரு பெரிய பணியில் ஈடுபட விரும்புகிறேன்.

    எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழிவிடுவது தான் முதிர்ச்சி. என் முன்னோர்கள் அப்படித் தான் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது தியாகம் எல்லாம் இல்லை. “என் சீட்ல உக்காருன்னு” உத்தமவில்லன் படத்துல வர்ற காட்சியை பாலச்சந்தர்தான் எழுதினார். மறுபடியும் மறுபடியும் சினிமாவில் நடிக்கக் கேட்டு என்னை சஞ்சலப்படுத்தி விடாதீர்கள்”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சுருதிஹாசனின் காதலர் மைக்கேலும் கலந்துகொண்டார். சுருதிஹாசனும் லண்டனை சேர்ந்த நடிகரான மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாகவும், அவர்கள் காதலுக்கு கமல்ஹாசன் சரிகா இருவருமே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் செய்தி வந்தது. இடையில் இருவரும் பிரிந்ததாகவும் தகவல் வந்தது.

    இந்தநிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பாடல் வெளியீட்டில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஸ்ருதிஹாசன் மேடையில் பாடியதை மைக்கேல் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார். #Vishwaroopam2 #BiggBoss2 #ShrutiHaasan

    விஸ்வரூபம்-2 படத்தின் பாடல்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் சுருதியுடன் இணைந்து வெளியிட்டார் கமல் ஹாசன். #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து `நானாகிய நதிமூலமே' என்ற சிங்கிள் டிராக் ஒன்றை படக்குழு நேற்றுமுன்தினம் (ஜூன் 29-ந்தேதி) வெளியிட்டது. 

    ஜிப்ரான் இசையில், வைரமுத்து வரிகளில், கமல் பாடிய அந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களுடன் பேசுவார்.

    இன்று அந்த நிகழ்ச்சி தொடங்கியது. கமல்ஹாசன் தனது மகள் சுருதியுடன் கலந்துகொண்டார். அப்போது எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்களை வெளியிட்டார். தனது மகள் சுருதியுடன் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.  #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து `நானாகிய நதிமூலமே' என்ற சிங்கிள் டிராக் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. 

    ஜிப்ரான் இசையில், கமல்ஹாசன் எழுதி, பாடிய அந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கமலுடன் கவுசிகி, மாஸ்டர் கார்த்திக், சுரேஷ் ஐயர் பாடியுள்ளனர். 

    அத்துடன் அந்த பாடலின் முடிவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நானாகிய நதிமூலமே பாடல்:


    முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜூலையில் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

    இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan

    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று வருகிற ஜுன் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தில் கமலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan

    அரசியல் வேறு, சினிமா வேறு. இதை குழப்பிக் கொள்ளக் கூடாது, இந்த இரு வி‌ஷயத்திலும் மற்றவர்கள் குழப்பம் அடைந்தால், அதற்கு நான் பொறுப்பு ஏற்க இயலாது என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். #KamalHaasan #Viswaroopam2
    அரசியல் வேறு, சினிமா வேறு என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    இதற்கு முன்பு எனது சில படங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திட்டமிட்டு என் படங்களுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது அத்தகைய சூழ்நிலை இல்லை.

    முன்பு விஸ்வரூபம் படத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அரசியல் கலந்திருந்தது. இப்போதும் அதே மாதிரி அரசியல் கலக்குமானால் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன். இதற்காக நான் என்னை தயார்படுத்தியுள்ளேன்.

    விஸ்வரூபம் படத்தின் 2-வது பகுதி முதல் பகுதிக்கு தொடர்ச்சியாக உண்மையானதாக இருக்கும். வாசீம் முகம்மது காஷ்மீரி யார் என்பதை விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் தெளிவாக கூறியுள்ளோம்.



    இந்த படத்தை நான் எனது அரசியல் பயணத்துக்கு எந்த விதத்திலும் பயன்படுத்தி கொள்ளவில்லை. ஒரு வேளை நான் படம் தயாரித்திருந்தால் அதை செய்திருப்பேன். ஆனால் இதில் நான் அரசியல் செய்யவில்லை.

    என்னைப் பொறுத்தவரை அரசியல் வேறு, சினிமா வேறு. இதை குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்த இரு வி‌ஷயத்திலும் மற்றவர்கள் குழப்பம் அடைந்தால், அதற்கு நான் பொறுப்பு ஏற்க இயலாது.

    இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #Viswaroopam2

    ×