search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar chaturthi"

    • உச்சிஷ்ட கணபதி 4 கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் அம்பாளுடன் அருள் பாலிக்கிறார்.
    • திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமானது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரம் என்னும் பகுதியில் ஸ்ரீ மூர்த்தி விநாயகா் என்ற ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோவில் அமைந்துள்ளது.

    ராஜ கோபுரத்துடன் 8 நிலை மண்டபங்கள், 3 பிரகாரங்கள், கொடி மரத்துடன், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் விநாயகருக்கான தனித் கோவில் இதுவாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி 4 கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் அம்பாளுடன் அருள் பாலிக்கிறார். இதன் கட்டட அமைப்பும் பழமையும், சுற்றுச்சுவர்களின் தன்மையும், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில் என்பதை பறைசாற்றுகிறது.

    சித்திரை மாதத்தின் முதல் 3 நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது. சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் விநாயகா் சதுா்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி அங்குராா்ப்பணம், ரக்ஷா பந்தனம் போன்றவை கள் நடைபெற்றன.

    திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை சாந்திகள் நடைபெற்று யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமானது. தொடா்நது கொடிப்பட்டம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 8 மணிக்குள் கொடியேற்றம் நடை பெற்றது. பின்னா் கொடிக் கம்பத்திற்கு அபிஷேகம் நடைபெற்று கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    10 தினங்கள் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவில் காலையில் யாகசாலை பூஜைகள், சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெறு கின்றது. மாலையில் விநாயகா் மூஷிக வாகனத்தில் உலா வரும் நிகழ்வு நடைபெறுகின்றது. வருகிற 16-ந்தேதி 8-ம் திருநாளில் மூலவருக்கு 1008 தேங்காய் அலங்காரமும், மாலையில் பச்சை சாத்தி திருவீதி உலாவும் நடைபெறும்.

    வருகிற 18-ந் தேதி ஸ்ரீ விநாயகா் சதுா்த்தி விழாவும், தாமிரபரணி நதிக்கரையில் தீா்த்தவாாியுடன் திருவிழா நிறைவடைகின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

    • விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
    • மேலும் விவரங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின்மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயக சதுர்த்தி விழாவினைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு ேபாலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
    • விநாயகர் சதுர்த்தி வருவதால் அதிகளவில் வியாபாரிகள் பேரிக்காய்களை நேரடியாக வாங்கி செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர சீசன் காலங்களில் பிளம்ஸ், ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளும் விளைவிக்கப்படுகிறது. மேலும், மருத்துவ குணம் கொண்ட பேரிக்காய்களும் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து பேரிக்காய் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜாம் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் அதிகளவில் வாங்கி செல்லப்படுகிறது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அப்சர்வேட்டரி, வட்டக்கானல், பிரகாசபுரம், வில்பட்டி, பெருமாள் மலை, மன்னவனூர் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேரிக்காய் 2வது முறையாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 2 மாதங்கள் வரை இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில வாரங்களாக விலை குறைந்து இருந்த நிலையில் தற்போது வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விலை சற்று அதிகரித்துள்ளது.

    விநாயகர் சதுர்த்தி வருவதால் அதிகளவில் வியாபாரிகள் பேரிக்காய்களை நேரடியாக வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • வருகிற 18-ந்தேதிதான் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு வருகிற 18-ந்தேதி விடுமுறைவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு வருகிற 18-ந்தேதி விடுமுறைசென்னை:

    தமிழ்நாடு அரசு சார்பில் வருகிற 17-ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி வருகிற 18-ந்தேதிதான் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18-ந்தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    • சென்னை மாநகர் முழுவதும் சுமார் 2 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    • மற்ற பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் அந்தந்த பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    சென்னை மாநகர் முழுவதும் சுமார் 2 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர சிறிய சிலைகளையும் பொதுமக்கள் தங்களது பகுதி மற்றும் வீடுகளில் வைத்து வழிபடுவார்கள். இதுபோன்று சென்னையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட உள்ளன.

    இந்த சிலைகளை 4 இடங்களில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வருகிற 18-ந்தேதி பூஜைக்காக வைக்கப்படும் சிலைகளை இந்து அமைப்பினர் ஒருவாரம் வைத்து பூஜை செய்வார்கள்.

    பின்னர் அந்த சிலைகளை 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க உள்ளனர்.

    இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

    நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்படும் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று மற்ற பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் அந்தந்த பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.

    விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் இந்து அமைப்பினருடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அடுத்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இறுதியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி தொடர்பாக பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி 20 ஆயிரம் போலீசார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
    • இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி விட்டு அதனை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ரசாயனம் கலப்பு இல்லாமல் விநாயகர் சிலைகளை செய்யவும், அதனை கரைக்கும் இடங்கள் குறித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 16 ஏரி, குளங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்பட லாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நகர் ஏரி (புட்லூர் ஏரி), கூவம் (ஈசா ஏரி) மப்பேடு, திருமழிசை, வெள்ளவேடு, ஊத்து கோடை குளம், சித்தேரி, ஊத்துக்கோட்டை, கொசஸ்தலையாறு, ஊத்துக்கோட்டை, காந்தி ரோடு குளம், திருத்தணி, வண்ணான் குளம், ஆர்.கே.பேட்டை, கரிம்பேடு குளம், பள்ளிப்பட்டு, பாண்டரவேடு ஏரி, பொதட்டூர்பேட்டை, பராசக்தி நகர் குளம், திருத்தணி, கனகமாசத்திரம், குளம் புலிகாட் ஏரி, திருப்பாலை வனம், ஏழு கண்பாலம், கும்மிடிப்பூண்டி, பக்கிங்காம் கால்வாய், காக்களூர் ஏரி, திருவள்ளூர் ஆகிய 16 ஏரி, குளங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விநாயகருக்கு அணிவிக்கும் நகைகளுக்கு மட்டும் ரூ.38.47 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.316 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது.

    மும்பை:

    மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியின்போது பல்வேறு இடங்களில் மண்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பூஜைக்கு பிறகு சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

    இதில் லால்பாக் ராஜா, கணேஷ்கல்லி, வடலா ஜி.எஸ்.பி. மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வார்கள்.

    ஆண்டுதோறும் பெரிய மண்டல்கள், தங்கள் மண்டல்களை காப்பீடு செய்வது வழக்கம். நடப்பாண்டு நகரின் பணக்கார விநாயகராக கருதப்படும் வடலா ஜி.எஸ்.பி. மண்டலுக்கு ரூ.360 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் விநாயகருக்கு அணிவிக்கும் நகைகளுக்கு மட்டும் ரூ.38.47 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மண்டல் ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு ரூ.289.50 கோடி அளவுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் கணிசமான தொகை காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஜி.எஸ்.பி. விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 66 கிலோ தங்கம், 295 கிலோ வெள்ளி நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.316 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது.

    • விநாயகர் சதுர்த்தியையொட்டி பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள்உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.
    • கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.

    நெல்லை:

    நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி(திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது.

    நெல்லை

    தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் வீடுகளிலும், பொதுவான சில இடங்களிலும் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். பின்னர் அவை மக்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

    நெல்லை மாவட்டத்திலும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டா டப்படும்.

    பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்கள், வீடுகள் மற்றும் கோவில்களில் ஆயிரக்கணக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது. அங்கு ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் சுமார் 15-க்கும் மேற்பட்ட வடமாநிலத்த வர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து சிலைகள் தயாரித்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு 3 அடி உயரம் முதல் 9 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்தபட்சமாக விநாயகர் சிலை ரூ.100 முதலும், அதிகபட்சமாக பெரிய சிலைகள் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படு கின்றன. கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.

    பல்வேறு வடிவங்கள்

    அங்கு சிவன், பார்வதியுடன் கூடிய விநாயகர், லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்க ளிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணர்- ராதை, வெற்றி விநாயகர், எலி மற்றும் புலியின் மேல் அமர்ந்திருக்கம் விநாயகர், ராஜ விநாயகர், சுயம்பு விநாயகர் என பல வடிவங்களில் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறாக தயார் செய்யப்படும் சிலைகள் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    • விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தான் கொண்டாடப்படுகிறது.
    • செப்.17-ந்தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாளுக்கு முன்பாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

    விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தான் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அமாவாசையில் இருந்து நான்காவது நாளே சதுர்த்தி வரும். அதன் அடிப்படையில் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4-ம் நாளான செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இந்த விஷயத்தில் குழப்பம் தேவையில்லை என்று ஆற்காடு கா.வெ.சீத்தாராமைய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்க கணிதர் சுந்தர ராஜன் அய்யர் கூறி இருந்தார்.

    இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை செப்.18-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஏற்கனவே செப்.17-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்.18-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் செப்.17-ந்தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • ஒரு அடி முதல் 16 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது.

    செங்கோட்டை:

    விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், மண்பாண்ட அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை நிலையம் உள்ளது.

    இதில் புதிதாக விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திரா மாநிலம், புதுவை, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு காகித கூழ் வாட்டர் கலர் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொண்டு செங்கோட்டை பகுதிகளுக்கு விற்பனைக்காக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் தயாரித்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு ஒரு அடி முதல் 16 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது. இந்த சிலை ரூ.100 முதல் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சிலைகள் வடிவமைத்து உள்ளனர். இதனை வாங்குவதற்கு கேரளாவின் கொல்லம், புனலூர், திருவனந்தபுரம், கோட்டயம், தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது:-

    இந்தாண்டு வெளி மாநிலங்களில் இருந்து வரவழைப்பதற்கு பதிலாக நாங்கள் புதிதாக தயாரிக்கும் விநாயகர் சிலையானது எளிதில் கரைய கூடிய வகையில் பேப்பர்கூழ், ஜவ்வரிசி, கிழங்குமாவு, களிமண் போன்றவற்றால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது எங்களிடம் மூன்று முக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயன விநாயகர், நந்திகேஷ்வரா விநாயகர், கற்பக விநாயகர் திருப்பதி விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், சிங்கவாகன விநாயகர், எலி, நந்தி உள்ளிட் பல வடிவங்களில் அதாவது 30-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம். அவைகள் செங்கோட்டை பகுதிக்கு மட்டுமல்லாது, கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த மாதம் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது.
    • தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைக்காக வைக்கப்படுகின்றன.

    விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட பல்வேறு அமைப்பினரும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

    இதையடுத்து விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கொசப்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்ட போதிலும் பெரிய அளவிலான சிலைகளின் பாகங்கள் வெளியூர்களில் இருந்தே வரவழைக்கப்பட்டு ஒன்றாக்கி பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.

    திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பண்ருட்டி, கள்ளக்குறிச்சி பகுதிகளிலும் அதிக அளவில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.

    சென்னை பகுதியான எர்ணாவூர் கிரிஜா நகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். 3 அடியில் இருந்து 10 அடி உயரம் வரையிலான சிலைகள் இங்கு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் வெளியூர்களில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். எர்ணாவூரில் மட்டும் தற்போது 300 சிலைகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிலைகளின் தலை, கைகள், உடல் பகுதி உள்ளிட்டவைகளை ஒன்றாக்கி வர்ணம் தீட்டி அதனை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    அடுத்த மாதம் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. அன்று தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைக்காக வைக்கப்படுகின்றன. பின்னர் இந்த சிலைகள் ஒரு வார காலம் வைத்து பூஜை செய்யப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினர் தற்போதே தொடங்கியுள்ளனர். இந்து முன்னணி மற்றும் பாரத் இந்து முன்னணி அமைப்பினர் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நேற்று நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் 2 அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்களது அமைப்புகளின் சார்பில் சென்னையில் தனித்தனியாக 5 ஆயிரம் சிலைகளை வைக்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் சென்னையில் மட்டும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் 10 ஆயிரம் சிலைகளை வைத்து பூஜை செய்ய உள்ளனர்.

    இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் பக்தன்ஜி, முருகானந்தம், கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, மணலி மனோகர், இளங்கோவன் மற்றும் விழா கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    செப்டம்பர் 18-ந்தேதி தொடங்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமரிசையாக நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 17-ந்தேதி அன்று விழாக் குழுவினர் அனைவரும் காப்பு கட்டி விரதம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட இடையூறுகள் விநாயகர் பெருமான் அருளால் நல்ல முறையில் தீர்ந்தன. எனவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக இந்து சமுதாய திருவிழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் மைய கருத்து "அன்னைத் தமிழைக் காக்க, ஆன்மீகத்தை வளர்ப்போம்" என்பதாகும். இக்கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்து முன்னணியினர் முடிவு செய்துள்ளனர்.

    இதேபோன்று பாரத் இந்து முன்னணி அமைப்பின் ஆலோசனை கூட்டம் தலைவர் ஆர்.டி.பிரபு தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பான முறையில் பூஜைகள் செய்து 24-ந்தேதி கடலில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் வைக்கக்கூடிய விநாயகர் சிலைக்காக சென்னை புளியந்தோப்பு பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படுகிறது. வட சென்னை மாவட்டத்தில் வைக்கக்கூ டிய விநாயகர் சிலையும், ஆர்.கே.நகர் தொகுதியில் ஒன்று கூடி காசிமேடு கடற்கரையிலும், தென் சென்னை மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் திருவேற்காடு பகுதிகளில் வைக்கக்கூடிய விநாயகர் சிலைகள் நீலாங்கரை கடற்கரையிலும் கரைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    • திரு வலம்- வலம் வந்த விநாயகர் திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்
    • மதுரை-முக்குறுணி பிள்ளையார் திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்

    பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது. அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

    விநாயக பெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்று துளசி பல்லாண்டு காலம் தவம் இருந்தாள். எப்போது என்னை மணம் முடிப்பீர்கள் என்று விநாயகரை கேட்டுக்கொண்டே இருந்தாள்.

    இதனால் கோபம் அடைந்த விநாயக பெருமான் துளசியை பார்த்து நீ ஒரு செடியாக மாறக் கடவது என்று கூறினார். இதை கேட்ட துளசி மனம் வருந்தினாள். விநாயகரை பார்த்து என்னை இப்படி சபித்து விட்டீர்களே, ஒரு நாளேனும் உங்கள் திரு மேனியை நான் தாங்கியிருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

    அவளது வேண்டுகோளை விநாயகர் ஏற்றுக்கொண்டார். விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் என் திரு மேனியில் நீ தங்கி இருக்கலாம் என்று வரம் கொடுத்தார். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜையின்போது விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.

    பிள்ளையார் சிறப்பு பெற்ற தலங்கள்

    எல்லா ஆலயங்களிலும் விநாயகருக்கு தனி இடம் உண்டு. ஆனாலும் பிள்ளையார் சிறப்பாக வீற்றிருக்கும் தலங்கள் பல உள்ளன. அவை வருமாறு:-

    திருவாவடு துறை-அழகிய விநாயகர்

    திருவையாறு-ஓலமிட்ட விநாயகர்

    விருத்தாசலம் ஆழத்து பிள்ளையார்

    திருச்சி - உச்சி பிள்ளையார்

    திருக்கடவூர்-கள்ள வாரண பிள்ளையார்

    திரு முருகன் பூண்டி -கூப்பிடு பிள்ளையார்

    வேதாரண்யம்-சிந்தாமணி கணபதி

    கீழ்வேளூர்-சுந்தர கணபதி

    அன்பிலாத்துறை -செவி சாய்த்த பிள்ளையார்

    திரு நள்ளாறு-சொர்ண விநாயகர்

    செங்காட்டாங்குடி-கணபதீஸ்வரர்

    திரு வலம்- வலம் வந்த விநாயகர்

    திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்.

    பாண்டிச்சேரி- மணக்குள விநாயகர்

    திரு விடை மருதூர்-படித்துறை விநாயகர்

    திருநாரையூர்-பொல்லா பிள்ளையார்

    திருவெண்ணைநல்லூர்- பொள்ளா பிள்ளையார்

    திருவாரூர்- மாற்றுரைத்த பிள்ளையார்.

    மதுரை-முக்குறுணி பிள்ளையார்

    திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்

    பிள்ளையார் பட்டி-கற்பக விநாயகர்

    விநாகர் சதுர்த்தி கொண்டாடுவது எப்படி?

    ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகரின் அவதார தினமாக அவரது பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவர் பூலோகத்திற்கு வந்து தனது பக்தர்களை நேரடியாக காண்பார் என்பது ஐதீகம்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிலைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி முதல் நாள் மாலையோ அல்லது விநாயகர் சதுர்த்தி அன்றோ வாங்கி வர வேண்டு ம். சுடாத களி மண்ணால் ஆன விநாயகர் பொம்மைகளை வாங்கி வருவது சிறப்பு.

    ஒரு பலகையை சுத்தப்படுத்தி அதில் கோலமிட்டு அதில் பிள்ளையாரை அமர வைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் காலையிலே எழுந்து குளிக்க வேண்டும்.

    பஞ்சினால் செய்த மாலையை இடையிடையே சிவப்பு நிறம் இருக்குமாறு குங்குமம் தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

    அருகம்புல். எருக்க மாலை போன்றவற்றை வாங்கி வைத்து கொள்ளவேண்டும். பூக்கள், அட்சதை, குங்குமம், ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும் தேங்காயும் மிக முக்கியம். எனவே கொழுக்கட்டை தயார் செய்து வைத்து கொள்ளவேண்டும். கொழுக்கட்டை குறைந்த பட்சம் 21 இருக்க வேண்டும். உப்பு கொழுக்கட்டை, சுண்டல், அப்பம் ஆகியவைகளை தயார் செய்து வைத்துக்கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    பூஜை தொடங்கும் முன் விநாயகர் சிலையில் குண்டு மணியை பதித்து கண் திறந்து சந்தனம், குங்குமம், திருநீறு பொட்டு இடவேண்டும். பின்னர் பூப்போட்டு எருக்கு மாலை அணிவிக்க வேண்டும். ஒரு தாம்பளத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் வைக்க வேண்டும்.

    அதோடு விளாம் பழத்தை வெல்லத்தோடு கலந்து பழ பச்சடியும் வைக்க வேண்டும்.கணேச பஞ்ச ரத்தினம், விநாயகர் அகவல் சொல்ல வேண்டும்.பின்னர் ஓம் சித்தி விநாயக நம, ஓம் ஸ்ரீமகா ஹணபதியே நம என்று சொல்லி தூப தீபங்கள் காட்டி அனைவரும் வணங்க வேண்டும்.

    எல்வோரும் வணங்கியதும் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டைகளையும் இதர பலகாரங்களையும் நிவேதனம் செய்யவேண்டும் நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களை முதலில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதையடுத்து பெரியவர்கள் உண்ண வேண்டும். இரவு சந்திர தரிசனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று இரவு சந்திரனை தரிசித்தால்தான் பூஜை முழுமை பெறும்.

    இதையடுத்து மறு நாளான பஞ்சமி அன்றோ அல்லது 2 நாட்களுக்கு பிறகோ சஸ்டி அன்று புனர் பூஜை செய்யலாம். தூப தீபம் காட்டி மந்திரம் சொல்லி வணங்கி சிறிது பால் அல்லது பாயாசம் நிவேதனம் செய்து விநாயகர் சிலையை வடக்கு பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் சிலையை எடுத்து சென்று கடலிலோ அல்லது நதியிலோ குளத்திலோ கரைக்க வேண்டும்.

    ×