search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar statues"

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இரவு நிலக்கோட்டை ஒன்றியத்தில் 115 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்த பின்னர் நாளை சதுர்த்திவிழா கொண்டாடப்படும்.
    • 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா 5 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நடத்தப்பட்டு அணைப்பட்டியில் சிலைகள் கரைக்கப்படும்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பகுதியில் இந்து முன்னணி சார்பாக நிலக்கோட்டை, கொடை ரோடு, விளாம்பட்டி, அணைப்பட்டி, அம்மையநாயக்கனூர், சிலுக்குவார் பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஊர்வலம் தொடங்கப்பட்டு விநாயகர் சிலைகள் நிலக்கோட்டை நால்ரோடு வந்து அடையும். அங்கு இந்து முன்னணி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் மொத்தம் 115 சிலைகள் கலந்து கொள்வதாக இந்து முன்னணி மதுரை கோட்ட பொறுப்பாளர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இரவு நிலக்கோட்டை ஒன்றியத்தில் 115 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்த பின்னர் நாளை சதுர்த்திவிழா கொண்டாடப்படும். அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி 115 கிராமங்களிலும் காலை முதல் ஊர்வலம் கிளம்பி நிலக்கோட்டை நால்ரோடு வந்தடைந்து

    அங்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் அணைப்பட்டி வைகை ஆற்றில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்படும் என தெரிவித்தார். இதை போன்று தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் ஆன்மீக சேவா சங்கம் சார்பாக சிலுக்குவார் பட்டி, கரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்காக சிலைகளை தயார் செய்து வருகின்றனர்.

    இது குறித்து விஸ்வ ஹிந்து பரிசத் மாவட்டச் செயலாளர் ராஜாராம் கூறியதாவது:- நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார் பட்டி யில் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் , மற்றும் ஆன்மீக சேவா சங்கமம் இணைந்து 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா 5 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நடத்தப்பட்டு அணைப்பட்டியில் சிலைகள் கரைக்கப்படும் என தெரிவித்தார்.

    • சென்னை மாநகர் முழுவதும் சுமார் 2 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    • மற்ற பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் அந்தந்த பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    சென்னை மாநகர் முழுவதும் சுமார் 2 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர சிறிய சிலைகளையும் பொதுமக்கள் தங்களது பகுதி மற்றும் வீடுகளில் வைத்து வழிபடுவார்கள். இதுபோன்று சென்னையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட உள்ளன.

    இந்த சிலைகளை 4 இடங்களில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வருகிற 18-ந்தேதி பூஜைக்காக வைக்கப்படும் சிலைகளை இந்து அமைப்பினர் ஒருவாரம் வைத்து பூஜை செய்வார்கள்.

    பின்னர் அந்த சிலைகளை 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க உள்ளனர்.

    இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

    நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்படும் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று மற்ற பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் அந்தந்த பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.

    விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் இந்து அமைப்பினருடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அடுத்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இறுதியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி தொடர்பாக பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி 20 ஆயிரம் போலீசார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • பொன்காளியம்மன் கோவில், அஞ்சலக வீதி, வடுக பாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • பல்லடம் நகர் முழுவதும் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டும் வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பொன்காளியம்மன் கோவில், அஞ்சலக வீதி, வடுக பாளையம், உள்ளிட்ட இடங்களில் சுமார் 100க்கும்மேற்பட்ட விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதற்கிடையே பல்லடம் போலீசார்,விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு அளித்தும், பல்லடம் நகர் முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

    ×