search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Rice"

    • அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
    • பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உதிரியாக வடித்த சாதம் - 1½ கப்,

    கேரட்- 2

    பீட்ரூட் - 1 பெரியது

    பெரிய வெங்காயம் - 1.

    பச்சை மிளகாய் - 2,

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிது,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிது,

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பீட்ரூட்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், பச்சைமிளகாய், உப்பு, கேரட், பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு வேக வைக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் உதிராக வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ் ரெடி.

    • காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியை விடக் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
    • கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    காடை - 4

    சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்

    வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 5

    புதினா இலை - 50 கிராம்

    கொத்தமல்லித்தழை - 50 கிராம்

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    தயிர் - 50 மில்லி

    தேங்காய்ப்பால் - 100 மில்லி

    பட்டை - 2

    ஏலக்காய் - 2

    கிராம்பு - 4

    பிரிஞ்சி இலை - ஒன்று

    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 100 மில்லி

    நெய் - 50 மில்லி

    பிரியாணி மசாலா செய்ய :

    பட்டை - 2

    ஏலக்காய் - 4

    கிராம்பு - 6

    பூண்டு - 50 கிராம்

    இஞ்சி-1 துண்டு

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

    சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்க வேண்டும்.

    அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து அது குழையும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு, பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்க காடை பிரியாணி தயார்.

    அவலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவல், காய்கறிகள் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - அரை கப்,
    வெங்காயம் - 1,
    கெட்டி அவல் - 2 கப்,
    தக்காளி - 2,
    தேங்காய் பால் - அரை கப்,
    கரம்மலாசா தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்).

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

    வித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காராமணி சேர்த்து வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - ஒன்றரை கப்,
    காராமணி - அரை கப்,
    வெங்காயம் - 1 ,
    தக்காளி - 1,
    சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும்.

    சாதத்தை உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    அடுத்து வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும். பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குதிரைவாலியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி - 1 கப்
    தண்ணீர் - 2 1/4 குவளை
    நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
    கிராம்பு - 2 எண்ணிக்கை
    கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    மிளகு - 8 எண்ணிக்கை
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    தேங்காய் துருவல் - கப்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :


    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சமைப்பதற்கு முன்னர் குதிரைவாலி அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி போன பிறகு, 10 நிமிடங்கள் கழித்து திறக்கவும். சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி சில நிமிடங்கள் ஆற விடவும்.

    மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அது சூடானதும் கிராம்பு, கடலைப் பருப்பை போட்டு, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கிய பின் மிளகைப் பொடித்து வாணலியில் போடவும்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து கிளறவும்.

    பின்னர் வேகவைத்த சாதத்தை இந்தக் கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விடவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி.

    குறிப்பு:

    இதே செய்முறையில் குதிரைவாலிக்கு பதிலாக, வரகு, திணை மற்றும் சாமை போன்ற சிறுதானியங்களையும் பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் சேர்த்து வெள்ளை நிறத்தில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ,
    பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
    (பட்டை - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, கருப்பு ஏலக்காய் - 1, சீரகம் - 1½ டீஸ்பூன், ஜாதிக்காய் - 1, பிரியாணி இலை - 2) (ஒரு துணியில் கட்டி வைத்துக்கொள்ளவும்)
    மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்,
    சோம்பு - 1/4 டீஸ்பூன்,
    மிளகு - 1/4 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 5,
    பெரிய வெங்காயம் - 2,
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
    தயிர் - 1/2 கப்,
    எலுமிச்சம்பழம் - 1,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய், நெய் - 1/2 கப்.



    செய்முறை :


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணியில் கட்டி வைத்த மசாலாவினை அதில் போட்டு கல் உப்பு, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து நன்றாக வேக விடவும்.

    பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், சோம்பு, மிளகு போட்டு தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் வேக வைத்த சிக்கன் மசாலாவினை நன்றாகப் பிழிந்து வெளியே எடுத்துவிடவும்.

    பின் சிக்கனை வெங்காயத்துடன் சேர்த்து அதனுடன் அரிசி, தனியா தூள், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து பிறகு கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து தம் போட வேண்டும்.

    இப்பொழுது சுவையான கமகமக்கும் வெள்ளை சிக்கன் பிரியாணி தயார்.

    இதனுடன் சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் கிரேவி வைத்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். இன்று ஒடியல் கூழை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாக காயவைத்து கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவை (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகையாகும்.

    தேவையான பொருட்கள் :

    ஒடியல் மா - 1/2 கிலோ
    மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
    நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
    இறால் - 1/4 கிலோ
    சின்ன சின்ன கணவாய்கள், நெத்தலி மீன் கருவாடு - 100 கிராம்
    காராமணி - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
    பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
    ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
    அரிசி - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 10 இரண்டாக பிளந்தது
    செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
    பழப்புளி - 100 கிராம்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    காராமணியை நன்றாக ஊறடிவைத்து கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீன், நண்டு, கருவாடு, இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒடியல் மாவை ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2 மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும்.

    காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

    பழப்புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

    இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.)

    அதனுள் கழுவிய அரிசி, ஊறவைத்த காராமணி, பலாக்கொட்டைகள், மீன் துண்டுகள், மீன் தலைகள், நண்டு, இறால், நெத்திலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

    அனைத்தும் நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

    சூப்பரான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நண்டில் சூப், வறுவல், கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நண்டு - 400 கிராம்
    தக்காளி - 2
    பாசுமதி அரிசி - 300 கிராம்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன்
    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    தேங்காய் பால் - கால் கப்
    தயிர் - 4 ஸ்பூன்
    கரம் மசாலா - அரை ஸ்பூன்
    பட்டை - 2
    ஏலக்காய் -5
    அன்னாசிப்பூ - 2
    மல்லித்தூள் - 1 ஸ்பூன்
    எலுமிச்சை - 1
    நெய், எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, ப.மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும்

    பின்னர் தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேக விடவும்.

    நண்டு நன்றாக வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் தம் கட்டி இறக்கினால் சுவையான நண்டு பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    பல்வேறு வகையான வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காயை வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்
    பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - ஒரு கப்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    புளித்தண்ணீர் - 2 கப்
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    தக்காளிச் சாறு - கால் கப்
    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 5
    தனியா - ஒரு டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    சின்னவெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்தரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

    பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

    வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை போட்டு வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

    புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் புதினா, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - 2,
    மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    மாங்காய் தூள் - அரை டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை:

    அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு பாதியளவு வெந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

    உருளைக்கிழங்கு வெந்ததும் கரம் மசாலாதூள், தனியாதூள், மிளகாய்தூள், சீரகத்தூள், மாங்காய் தூள் சேர்த்து நன்கு வதக்கி நெய், சாதம், கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    சூப்பரான உருளை மசாலா ரைஸ் ரெடி.

    குழந்தைகளுக்கு இதன் ருசி மிகவும் பிடிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர், புதினா சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்
    பன்னீர் - 200 கிராம்
    புதினா - 1 கட்டு
    கிராம்பு - 4
    பட்டை - 1 இன்ச்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 4 கப்



    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

    தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 300 கிராம்
    முட்டை  - 3
    வடித்த சாதம் - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு



    செய்முறை:

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.

    இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.

    கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×