search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varanasi constituency"

    பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தவிர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதியை தேர்வு செய்ய பாஜக மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். #Loksabhaelections2019 #BJP #PMModi
    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது குஜராத் மாநிலம் வதேதரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    அந்த இரு தொகுதிகளிலும் மோடி வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இதையடுத்து வதேதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த மோடி, வாரணாசி தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். மீண்டும் 2-வது முறையாக வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட உள்ளார்.

    வாரணாசி தொகுதியில் மே 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதி தவிர மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி வி.வி.ஐ.பி. தொகுதி என்ற அந்தஸ்தைப் பெற்ற அதிர்ஷ்டமான தொகுதியாகும்.

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1991-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ச்சியாக 5 தடவை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூம் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்ற கோ‌ஷம் வலுத்து வருகிறது.

    விதிஷா தொகுதிக்கு இன்னும் பாரதிய ஜனதா வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Loksabhaelections2019 #BJP #PMModi
    பிரதமர் மோடி போட்டியிடவுள்ள வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #PMModi #BJP #PriyankaGandhi

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    இரு தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். வாரணாசி எம்.பி.யாக நீடித்தார்.

    இந்த தேர்தலில் அவர் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை.

    இறுதிக்கட்ட தேர்தல் மே 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான பெரும்பாலான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்து விட்டது.

    வாரணாசி தொகுதி தேர்தலும் 19-ந் தேதிதான் நடைபெறுகிறது. ஆனாலும், இதற்கான வேட்பாளரை மட்டும் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. நேற்று 18 தொகுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

    அதில், வாரணாசி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதிலும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

    காங்கிரஸ் ஏதோ ரகசிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும், இதனால் தான் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை வாரணாசி தொகுதியில் போட்டியிட வைக்க இருப்பதாகவும், கடைசி நேரத்தில் அவரை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

    பிரியங்கா இதுவரை நேரடி அரசியலில் ஈடுபடாத நிலையில் திடீரென கடந்த மாதம் அவர் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதி பொறுப்பும் வழங்கப்பட்டது.

    அங்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள பிரியங்கா பம்பரமாக சுழன்று வருகிறார். இவரது வருகையால் உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    பிரியங்கா கங்கை நதியில் 3 நாள் தொடர்ந்து படகு பயணம் செய்து நதிக்கரை ஓரம் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். அந்த பயணத்தை இறுதியாக வாரணாசியில் முடித்தார்.

    அப்போது வாரணாசி தொகுதி எம்.பி.யாக இருக்கும் மோடியை கடுமையாக விமர்சித்தார். அயோத்தியில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா மோடியை பற்றி காரசாரமாக பேசினார்.

    வாரணாசியில் மோடி 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ளார். இந்த 5 ஆண்டில் ஏதேனும் ஒரு கிராமத்துக்கு அவர் வந்திருக்கிறாரா? அவருக்கு வெளிநாட்டுக்கு செல்லத்தான் நேரம் இருக்கிறது. கிராம மக்களை சந்திப்பதற்கு நேரம் இல்லை என்று கூறினார்.

    வாரணாசியை குறி வைத்து அவர் பிரசாரம் செய்ததே அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்று கூறப்படுகிறது.

    மேலும் அவர் கடந்த 28-ந் தேதி தொண்டர்கள் மத்தியில் பேசும் போது, நான் வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டுமா? என்ற கேள்வியையும் கேட்டார்.

    ராகுல்காந்தியும் இது சம்பந்தமாக சூசகமாக தெரிவிக்கும் போது, பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது பற்றி அவரே முடிவு எடுத்து கொள்ளலாம் என்றார்.

    பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றால் அதை ராகுல்காந்தி உறுதியாக கூறி இருப்பார். ஆனால், இப்படி மழுப்பலாக சொல்லி இருப்பதால் பிரியங்கா போட்டியிடுவது உறுதி என்றே கூறப்படுகிறது.

    அவர் வாரணாசி வேட்பாளராக மனு தாக்கல் செய்யும் இறுதி நாள் அன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சூரஜ்வாலாவிடம் கேட்ட போது, இதுபற்றி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று கூறினார்.

    பாரதிய ஜனதா தலைவர் ஷா நவாஸ் உசேன் கூறும்போது, சில அனுமானமான வி‌ஷயங்கள் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. மோடியை எதிர்த்து போட்டியிட காங்கிரசுக்கு பொறுத்தமான வேட்பாளர் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறினார்.

    வாரணாசி தொகுதியில் கடந்த தேர்தலில் மோடி போட்டியிட்ட போது 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டு 2-ம் இடம் பிடித்தார். #PMModi #BJP #PriyankaGandhi

    வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பு அதாவது 25-ந்தேதி மோடி அங்கு பிரமாண்ட பேரணி நடத்துகிறார். #Loksabhaelections2019 #PMModi #Varanasi
    வாரணாசி:

    பிரதமர் நரேந்திரமோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

    இதில் இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் வாரணாசி தொகுதியில் மோடி வருகிற 26-ந்தேதி மனு தாக்கல் செய்கிறார்.

    வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பு அதாவது 25-ந்தேதி மோடி வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடத்துகிறார். அவர் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

    வாரணாசியில் உள்ள லங்காசிராசிலுவில் இருந்து தஷாவாடூத் வரை மோடி பேரணியாக சென்று பிரசாரம் செய்கிறார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், உ.பி.மாநில மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    26-ந்தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்த பிறகு மோடி மனு தாக்கல் செய்கிறார். #Loksabhaelections2019 #PMModi #Varanasi
    கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிரதமரை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவது உறுதி என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார். #TNFarmers #Ayyakannu #PMModi
    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பழனியப்பன், பட்டீஸ்வரன், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், 60 வயதான விவசாயிகளுக்கு மாதம் ரூ.6ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்ரக விதைகளை தடை செய்ய வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

    ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.

    விவசாயிகளின் கோரிக்கைகளை தேசிய கட்சிகள்தான் நிறைவேற்ற முடியும். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாத பா.ஜனதா அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளோம்.

    வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக 24-ந்தேதி வாரணாசி செல்ல இருக்கிறோம். வறுமையால் வாடும் விவசாயிகளால் வாரணாசி செல்வதற்கும், வேட்பு மனுதாக்கல் செய்வதற்கும் பணமில்லை. அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி, தனது கணவரின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய பணமில்லாததால் வெட்டியானுக்கு பணம் கொடுக்க வாரணாசியில் பிச்சை எடுத்தது போல, நாங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய டெபாசிட் பணத்திற்காக வாரணாசியில் பிச்சை எடுத்து அதனை கட்ட முடிவு செய்துள்ளோம்.

    வருகிற 6-ந்தேதிக்குள் விவசாயிகளை அழைத்து பிரதமர் நரேந்திரமோடியும், ராகுல்காந்தியும் பேச வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டும். வாக்குறுதி அளித்தால் போட்டியில் இருந்து விலகி கொள்வோம். இல்லையென்றால் பிரதமரை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவோம். அகோரி வேடத்தில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்வோம்.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இது பற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி எங்களின் கோரிக்கையை மோடி நிறைவேற்றாவிட்டால் வாரணாசியில் அவரை எதிர்த்து போட்டியிடுவது உறுதி என்றார். #TNFarmers #Ayyakannu #PMModi
    பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தலித் தலைவர் சந்திர சேகர் ஆசாத் போட்டியிட முடிவு செய்துள்ளார். #VaranasiConstituency #Modi
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் தலித் இன மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன.

    உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் கை ஓங்கிய போதெல்லாம் இந்த மேற்கு மண்டல பகுதி தலித் இன மக்கள்தான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

    உத்தரபிரதேச மாநில தலித் மக்களின் அடையாளமாக மாயாவதி திகழ்ந்து வரும் நிலையில், சமீப ஆண்டுகளாக சந்திரசேகர் ஆசாத் எனும் இளைஞரும் தலித் மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்றுள்ளார். இவர் “பீம் ஆர்மி” எனும் அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் லட்சக்கணக்கான தலித் இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த அமைப்பின் சார்பில் உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூரில் இருந்து டெல்லிக்கு மோட்டார்சைக்கிள் பேரணி நடத்த பீம்ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் ஏற்பாடு செய்து இருந்தார். கடந்த திங்கட்கிழமை சகரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் நகரில் இருந்து தலித் இளைஞர்களின் ஊர்வலம் தொடங்கியது. மறுநாள் செவ்வாய்க்கிழமை முசாபர்நகரில் அவர் பிரமாண்ட கூட்டத்தில் பேச இருந்தார்.

    இந்த நிலையில் சந்திரசேகர் ஆசாத் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அனந்த் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பிறகு சந்திரசேகர் ஆசாத்தை மீரட் நகர மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சந்திரசேகர் ஆசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு மண்டல பகுதிகளில் பதட்டம் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று மாலை திடீரென மீரட் நகருக்கு புறப்பட்டு வந்தார். அவருடன் ஜோதிர்ஆதித்ய சிந்தியா, ராஜ்பப்பர் ஆகியோரும் உடன் வந்தனர். மீரட் மருத்துவமனைக்கு சென்ற பிரியங்கா அங்கு பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை சந்தித்துப் பேசினார்.

    ஆசாத்திடம் உடல் நலம் விசாரித்த பிரியங்கா, நீண்ட நேரம் மருத்துவமனையில் இருந்தார். தலித் மக்களுக்காக போராடி வருவதற்காக ஆசாத்துக்கு பிரியங்கா பாராட்டு தெரிவித்தார். பிறகு மருத்துவமனை வளாகத்தில் பிரியங்கா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தலித்துகள் மீது அராஜகமாக நடந்து கொள்கிறது. தலித் இளைஞர்களின் குரல்கள் கேட்கப்படுவது இல்லை. அவர்களை நசுக்கவே மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டுகின்றன.

    மத்திய அரசால் வேலைவாய்ப்பை உருவாக்க இயலவில்லை. அதை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்கள் மீது பாய்கிறார்கள். மத்திய அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்பது தெரியவில்லை.

    தலித் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை நான் சந்தித்து பேசியதில் எந்த அரசியலும் இல்லை. அதுபற்றி நான் பேச விரும்பவும் இல்லை.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    இதையடுத்து பீம்ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்து இருப்பது உறுதியாகி உள்ளது. பிரியங்காவின் இந்த நடவடிக்கை காரணமாக மாயாவதி பக்கம் இருக்கும் தலித் இளைஞர்கள் வாக்குகளை காங்கிரஸ் பக்கம் திருப்ப முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே பீம்ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    வாரணாசி தொகுதியில் நான் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன். இந்த தடவை மோடியை வாரணாசியில் வெற்றி பெற நான் விடமாட்டேன்.

    மோடி அரசுக்கு எதிரான எனது போராட்டங்களுக்கு ஆதரவு தருவதாக பிரியங்கா கூறியுள்ளார். எனது உடல் நலம் பற்றியும் அவர் விசாரித்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பீம்ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை பிரியங்கா சந்தித்து பேசியதால் உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோடியை எதிர்த்து சந்திரசேகர் ஆசாத் களம் இறங்கினால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    சந்திரசேகர் ஆசாத்தின் நெருங்கிய நண்பர், சகரன் பூரைச் சேர்ந்த இம்ரான் மசூத் ஆவார். சமீபத்தில் இம்ரான்மசூத்தை சந்திரசேகர் சந்தித்து பேசினார்.

    அதன்பிறகே சந்திரசேகர் டெல்லியில் பேரணி நடத்தும் திட்டத்தை அறிவித்தார். எனவே சந்திரசேகர் ஆசாத் தொடங்கிய போராட்டத்துக்கு காங்கிரஸ் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சந்திரசேகர் ஆசாத்தை வாரணாசியில் நிறுத்தி தலித் மக்களின் வாக்குகள் மூலம் மோடியை தோற்கடிக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால்தான் சந்திரசேகர் ஆசாத்தை பிரியங்கா சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது. #VaranasiConstituency #Modi
    உத்தரபிரதேச சுற்றுப் பயணத்தின் போது தனது தேர்தல் பணிக்கு உட்பட்ட வாரணாசி எம்.பி. தொகுதிக்கும் பிரியங்கா காந்தி செல்கிறார். #Congress #PriyankaGandhi
    லக்னோ:

    பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 41 எம்.பி. தொகுதிகளை இவர் கவனிப்பார்.

    தீவிர அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தி 4 நாட்கள் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தார். பேரணி மூலம் மக்களை சந்தித்தார். ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுடன் இணைந்து மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார்.

    இந்த நிலையில் மீண்டும் உத்தரபிரதேசத்தில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். வருகிற 28-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக அவரது சுற்றுப் பயணம் அமைகிறது.

    உத்தரபிரதேச சுற்றுப் பயணத்தின் போது தனது தேர்தல் பணிக்கு உட்பட்ட வாரணாசி எம்.பி. தொகுதிக்கும் பிரியங்கா காந்தி செல்கிறார். இது பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும்.

    வாரணாசி செல்லும் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் வாரணாசி தொகுதியில் மோடி செயல்படுத்திய திட்டங்கள் குறித்து கேட்டறிகிறார். பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். அங்கு வாகனம் மூலம் பேரணியாக சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

    வாரணாசி வருகையின் போது காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும் குஷிநகரில் வி‌ஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்திக்கிறார். கும்பமேளாவையொட்டி அலகாபாத்தில் அவர் புனித நீராடுவார் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

    பிரியங்கா காந்தி வருகையால் வாரணாசி தொகுதி காங்கிரசார் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதன் மூலம் அவர்கள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பிரகாஷ் ஜோஷி தெரிவித்தார். #Congress #PriyankaGandhi
    வாரணாசி தொகுதியில் எதிர்ப்பு வலுத்துள்ளதால் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ஒடிசாவின் புரி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. #BJP #PMModi #Varanasi #ParliamentElection
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது குஜராத்தில் உள்ள வதோதரா, உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

    இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நிறுத்தப்பட்டிருந்தார். அவரை மோடி 1 லட்சத்து 79 ஆயிரத்து 739 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தார். இதனால் வாரணாசி தொகுதியை மோடி தக்க வைத்துக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து வாரணாசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன. கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்டங்கள் வாரணாசியில் நடைபெற்றன.

    வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தில் மோடி, அந்த தொகுதி மக்களுக்காக ஏராளமாக செய்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடந்தபோது அது வாரணாசியில் எதிரொலித்தது.

    வாரணாசி முழுக்க மோடியை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், “மோடியே வாரணாசியை விட்டு வெளியேறு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் வாரணாசியில் மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து 2014-ம் ஆண்டு தேர்தலில் கெஜ்ரிவாலை நிறுத்தியது போல இந்த தடவையும் வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அவர்களுக்கு கை கொடுக்கும் வகையில் சத்ருகன்சின்கா முன் வந்துள்ளார்.

    அவர் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ள அவர் விரைவில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இணைய உள்ளார். எனவே அவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் மோடியை எதிர்த்து களம் இறங்க உள்ளார்.

    வாரணாசியில் மோடியை எதிர்த்து சத்ருகன்சின்கா போட்டியிட்டால் அது பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. வாரணாசி தொகுதியில் சத்ருகன்சின்காவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது.

    அதற்கு முக்கிய காரணம் சத்ருகன் சின்கா, “பனாரசி பாபு” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வாரணாசி தொகுதியில் சத்ரு கன்சின்காவின் “சாயத்ஸ்” இன மக்கள் கணிசமான அளவுக்கு இருக்கிறார்கள். அவர்கள் சத்ருகன் சின்காவுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    இது மோடிக்கு 2014-ம் ஆண்டு கிடைத்த வாக்குகளை சரிய செய்யும். இது மோடிக்கு சிக்கலை உருவாக்கும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    வாரணாசி தொகுதியில் சத்ருகன் சின்கா மூலம் கடும் போட்டி ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதால் பிரதமர் மோடி வேறு தொகுதிக்கு மாற முடிவு செய்துள்ளார். மிக எளிதாக வெற்றி பெறக் கூடிய பாதுகாப்பான தொகுதி எது என்று அவர் ஆய்வு செய்து வருகிறார்.

    சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் போட்டியிடலாமா என்றும் அவர் ஆலோசித்து வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் என்பதால் வேறோரு மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


    உத்தரபிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பா.ஜ.க. வுக்கு எதிரான அலை வீசுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்த பிறகு பா.ஜ.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

    எனவே உத்தரபிரதேசத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு செல்ல பிரதமர் மோடி விரும்புவதாக கூறப்படுகிறது. அதன்படி பல தொகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    ஒடிசா மாநிலம் புரி தொகுதியில் களம் இறங்கலாமா? என்று மோடி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்துக்கள் நிறைந்த புரி தொகுதியில் நிற்பது மிக, மிக பாதுகாப்பானது என்று மோடி நம்புகிறார். எனவே புரி தொகுதியில் மோடி போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #BJP #PMModi #Varanasi #ParliamentElection
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக மிகவும் வலுவான வேட்பாளரை களம் இறக்க சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆய்வு செய்து வருகிறார். #ShatrughanSinha #bjp #pmmodi

    வாரணாசி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்த போது உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத்தில் உள்ள வதேதரா ஆகிய இரு தொகுதிகளில் மோடி போட்டியிட்டார்.

    இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர் வாரணாசி தொகுதி பதவியை வைத்துக் கொண்டு, வதேதரா தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.

    வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட மோடி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதை கருத்தில் கொண்டே அவர் வாரணாசி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி அமல்படுத்தி வருகிறார்.

    வாரணாசி தொகுதி பாரம்பரியமாக பா.ஜ.க. வின் கோட்டையாக திகழ்வதால் அங்கு மீண்டும் களம் இறங்குவதே பாதுகாப்பானது என்று மோடி கருதுகிறார். ஆனால் சமீபத்தில் குஜராத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக வாரணாசியில் மோடிக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    வாரணாசி தொகுதியில் பல இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது.


    வாரணாசியில் மோடிக்கு எதிராக மிகவும் வலுவான வேட்பாளரை களம் இறக்க சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆய்வில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்காவை வரும் தேர்தலில் மோடியை எதிர்த்து களம் இறக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பிரதமர் மோடிக்கும் சத்ருகன் சின்காவுக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. சத்ருகன் சின்கா உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்காததால் அவர் மோடியின் ஒவ்வொரு திட்டத்தையும் மிக, மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    விரைவில் அவர் பா.ஜ.க. வில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. அவர் சமாஜ்வாடி கட்சியில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலின் போது அவரை வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட வைத்தால் மோடிக்கு கடும் சவாலை உருவாக்க முடியும் என்று வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. #ShatrughanSinha #bjp #pmmodi

    ×