search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varahi"

    • வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.

    அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

    இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும்.

    இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும்.

    அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.

    இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும் என்றார்.

    இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

    வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.

    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள்,

    அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.

    இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும்

    மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

    • தட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம்.
    • அம்பாள் சன்னதி எதிரிலுள்ள தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.

    தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், இலுப்பைக்குடியில் அமைந்துள்ளது. சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

    இங்குள்ள பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் எனப்படுகிறார். இரட்டை நாய் வாகன பைரவர் இருப்பது சிறப்பம்சம். தலவிநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர். நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.

    பைரவர் சன்னதி

    இத்தலத்து பைரவர், "சொர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. சொர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.

    வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது. பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.

    தான்தோன்றீஸ்வரர், சிறிய அளவிலேயே இருக்கிறார். அம்பாள் சவுந்தர்ய நாயகி சிலை திருவாசியுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட "நாய்க்கடி பலகை' இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

    சித்திரை பிரம்மோற்சவத்தின் போது கொங்கணர் புறப்பாடாகிறார். இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால், "இலுப்பைக்குடி' என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார்.

    சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, "சுயம்பிரகாசேஸ்வரர்' என்றும், `தான்தோன்றீஸ்வரர்' என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

    சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாக தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.

    பரிகாரங்கள்:

    குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடையுள்ள பெண்கள் வாராகிக்கு சந்தனக்காப்பு செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்து விசேஷ பூஜை செய்தும் வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

    திறக்கும் நேரம்:

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் ராஜாவாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள மங்கள வராஹி அம்மன் ஆலயத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.
    • தொடர்ந்து மகா சண்டி ஹோமத்தில் பூரணகுதி இடப்பட்டு, வராகி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.

    பரமத்திவேலூர்:Namakkal District News,

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் ராஜாவாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள மங்கள வராஹி அம்மன் ஆலயத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து மகா சண்டி ஹோமத்தில் பூரணகுதி இடப்பட்டு, வராகி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.

    விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை 3மணிக்கு விநாயகர் பூஜை, மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 64 பைரவருக்கு பூஜை மற்றும் 13 அத்திரியாகங்கள் பாராயணம் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மகா சண்டி ஹோம விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் பாண்டமங்கலம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும். வாராகி மாலையின் பொருளையும் படிப்பதால் கிடைக்கும் பயனையும் அறிந்து கொள்ளலாம்.
    வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும்.

    பகைமுடித்தல்:-

    வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
    சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவிஎங்கள்
    கருத்திற் பயிலும் வாராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
    பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறிகாணும் பகைத்தவர்கே...

    பொருள்:-

    வாராகியின் வல்லமை புரியாமல், அவள் வணங்கும் பக்தனை பகைத்து கொண்டால் இவள் பொருத்திருக்கமாட்டாள். ருத்திரனின் இயக்கம் இருக்கும் இந்த வாராகியாகப்பட்டவள், தன் பக்தனுக்கு தீங்கு இழைத்தவர்களை கண்டு கண்சிவந்து வெட்டி வீழ்த்துவாள் பொருத்திருக்கமாட்டாள் பக்தனை காப்பதில் அவ்வளவு  ஆவேசம்.

    பயன்:-

    வேண்டுமென்றே ஒருவர் நமக்கு தீங்கு செய்தால் அதை விலக்க இதை படிக்கலாம்.

    வாக்கு வெற்றி:-

    “பாப்பட்டசெந்தமிழ் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
    பூசப்பட்டதும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
    கூப்பிட்டது உன்செவி கேட்கலையோ? அண்ட கோளமட்டும்
    தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யானர்தெரு எங்குமே

    விளக்கம்:-

    பொதுவாக நம் தாய் தந்தை என்று தான் நாம் விரும்பி வணங்கும் தெய்வத்தை அழைக்கின்றோம். இது நமக்கும் நாம் வணங்கும் தெய்வத்திற்கும் உள்ள

    நெறுக்கத்தை காட்டுகின்றது. மேலும் செந்தமிழ் பாக்களால் உன்னை அர்ச்சித்ததெல்லாம் தீயில் எரிந்ததா புகழ்ந்து கூப்பிட்டது உன்  கமல செவிகளில்

    விழவில்லையோ? வானமுகடு வரை நெருப்பால் இந்த உலகம் அழிந்ததா என மனம் உருகி வேண்டுகின்ற வடிவத்தை சொல்லுகின்றது.

    பயன்பாடு:-

    மிக பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கும்போது இப்பாடலை பாடி தற்காத்து கொள்ளலாம்.

    தேவி வருகை:-

    எங்கும் எரியக் கிரிகள் பொடிபட, எம்பகைஞர்
    அங்கம் பிளந்திட விண்மீன் கிழிந்திட ஆர்தெழுந்து
    பொங்கும் கடல்கள் சுவறிட சூலத்தை போகவிட்டு
    சிங்கத்தின் மீது வருவாள் வாராகி சிவசக்தியே

    விளக்கம்:-

    வாராகியின் கோபம் எப்படிபட்டது தெரியுமா? அன்னை வருகிறாள், மிகபெரிய உக்ர ரூபிணியாய் சிம்ம வாகனத்தில் ஏறி நின்றே வருகின்றாள். அவள்

    வருவதற்கு முன்பே அவள் சூலம் பாய்ந்து வருகின்றது. இந்த நிகழ்வு நடக்கின்றபோது, நெருப்பு பறக்கின்றதாம், மலைவெடித்து சிதறுகின்றதாம், பகைவர்கள்

    உடல் பிளந்து விழுகின்றார்கள். விண்ணும் மண்ணும் பிளக்கின்றது, கடல் வற்றிபோகின்றது. அவள் சக்திக்கு இது ஒரு விளக்கம்.

    பயன்:-

    உடல்நிலை பெரிதும் பாதிக்கின்றபோது இப்பாடலை படித்து பயன்பெறலாம்.

    ஆன்ம பூஜை:-

    ‘‘சக்தி கவுரி மகாமாயி ஆயிஎன் சத்துருவைக்
    குத்தி இரணக் குடலைப் பிடுங்கிக் குலாவிநின்றே
    இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
    நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே.

    விளக்கம்:-

    வாராகி தேவி சக்தி, கவுரி, மகாமாயி என்ற மூன்று தெய்வங்களின் வவானவள். அவள் தன் பக்தனுடைய சத்ருக்களை எப்படி சூரையாயிடுவாள் என

    மேற்கண்ட பாடல் விளக்குகின்றது. வாராகி தன் பக்தனை சோதித்த எதிரியை தன் கூரிய நகங்களால் குத்தி அவள் வயிற்றை கிழித்து பிடுங்கி வீசுகின்றாள். எட்டு திசைகளிலும் மலைகள் வெடித்து சிதறுகின்றது. அப்போது நளின நடையோடு வந்து அவள் குருதி கொண்டு தன் பக்தன் நெற்றியில் வெற்றி திலகமிடுவாள்.

    அமைதியை நோக்கி நாம் செயல்பட நினைத்தால் இப்பாடலை பிராயணம் செய்யலாம்.

    தேவி தாபணம்:-

    ‘‘நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
    நஞ்சணி கண்டத்தி நாராயணி தனை நம்புதற்கு
    வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை  உண்ணக்
    கொஞ்சி நடந்து வருவாள் வாராகி குலதெய்வமே....

    விளக்கம்:-

    தேவி கொஞ்சி அடிமேல் அடி எடுத்து வைத்து நட்ந்து வருகிறாள். எதற்கு, தன்னை வேண்டி நின்ற பக்தரை வருத்துபவரை வதம் செய்ய, அதற்கு ஏன் கொஞ்சி

    நடக்க வேண்டும், தன்னை வணங்கும் பக்தர்களை காக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில்தான் அவள் நஞ்சுடைய கண்டம் உடையவள் என்பது பொருள்.

    பயன்:-

    அன்பாக அன்னையை அழைக்கும் போது இதை பாடலாம்.

    அடக்குதல்:-

    ‘‘மதுமாமிசம் தனைத் தின்பாள் இவாளன்று மாமறையோர்
    அதுவே உதாசினம் செய்தி டுவார் அந்த அற்பர்கள் தம்
    கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடிதடித்து
    விதிர்வானில் வெட்டி எறிவாள் வாராகி என் மெய்தெய்வமே..

    விளக்கம்:-

    வாராகி அன்னை ஆவேசமிக்க தெய்வம், அவளது தன்மை புரியாமல் அவளை அலட்சியம்  ஏளனம் செய்தாலோ அவர்கள் வாயடைத்து ஊமையாய் மாறுவர். மேலும் இரண்டு கூறுகளாக அவர்களை வெட்டி எரிந்து விடுவாள் என்பது பொருள்.

    பயன்:-

    எதிர்ப்புகளை எளிதில் வெல்லலாம்.

    அம்பிகை காட்சி:-

    ‘‘ஐயும் கிலியும் என்று தொண்டர் போற்ற அரியபச்சை
    மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
    கையும், பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
    வையம் துதிக்க வருவாள் வாராகி மலர்கொடியே...’’

    விளக்கம்:-

    மனதை மகிழ்விக்கும் பச்சை நிறதிருமேனி, கருணை பெருகும் விழிகள், பிரம்பு, கபாலம், சூலம், ஏந்திய திருகரங்கள், இப்படி வெளிப்படுத்துகிறாள். அதுவும் ஐம்

    கலௌம் என்ற பீஜ மந்திரங்களாக மனம் மொன்றித் துதிக்கின்ற அன்பர் முன்காட்சி கொடுக்கின்றாள்.

    பயன்:-

    அம்பிகையை அழைக்க இப்பதிகத்தை பாடலாம்.

    காக்கும் வடிவம்:-

    தாளும் மனமும் தலையும் குலையத் தரியவர்கள்
    மாளும் படிக்க வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
    கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
    வாளும் கட்கமும் சூலமும் ஏந்திவரும் துணையே

    விளக்கம்:-

    வாராகியை மனமொன்றி துதிக்கும் பக்தன் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் வெற்றி சங்கு ஒலிக்க வாளும், சூலமும் தாங்கியவர்களாக துணைக்கு

    வருகிறாள் வாராகி அவளைப் போற்றி பணியும் அன்பர்களுக்கு நவக்கிரகங்களாலோ  பகைவராலோ பயமில்லை, ஏனெனில், வாராகியின் அருள்

    பெருங்கவசமாய் காத்து நிற்கும்.

    பயன்-:--

    தன்னைதற்காத்து கொல்ல இந்த பதிகம் பாடலாம்.

    அன்னையின் அருள்:-

    வரும்துணை என்று வாராகி என்றன் அன்னையை  வாழ்த்தி நிதிம் பொருந்தும் தகைமையம் பூணாதவர்  புலால் உடலை பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும் விருந்துண்ண பட்டுகிடப்பர் கண்டீர், உடற் வேறுபட்டே

    விளக்கம்:-

    உயிர்துணையாக விளங்கும் அருந் தில் நாயகி வாராகியை பாடிப்பரவுதலே பிறவிபயன். அதை செய்யாதவர்கள் அனைவரும் வெறும் தோல் போர்த்திய உடன் கூடுகள், அந்த  உடற்கூடுகள் பருந்து, கழுகு, பேய் மற்றும் பூதங்களின் விருந்தாகும்.

    பயன்:-

    இதை பாடினால் அன்னை அருள் எளிமையாக கிடைக்கும்.
    வாராகி அன்னைக்கு லட்சோப அதர்வன சித்திமந்திரம் இருந்தாலும், அவள் கூப்பிட்ட உடன் அகம் மகிழ்ந்து ஓடிவந்து நிற்பது ‘வாராகிமாலை’ எனும் அற்புத பாமாலைதான்.
    எந்த ஒரு வழிபாடு செய்யும்போதும் அந்த தெய்வங்களுக்கு உரிய மிகவும் பிடித்த மந்திரப்பாடல்களை நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது. ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பாடல் பாடியே அவர்களை மகிழ்வித்தே நம் முன்னோர்கள் சித்தர்கள் கண்கொள்ளா காட்சி கண்டு முக்தி பெற்றனர்.

    அதேபோலதான், நீங்கள் அன்னையின் வரலாறுகளை அவள் மகிமைகளை தெரிந்து கொண்ட பிறகு அவள் அருளை பெற உங்கள் மனம் துடிக்கின்றது என நான் அறிவேன். வாராகி அன்னைக்கு லட்சோப அதர்வன சித்திமந்திரம் இருந்தாலும், அவள் கூப்பிட்ட உடன் அகம் மகிழ்ந்து ஓடிவந்து நிற்பது ‘வாராகிமாலை’ எனும் அற்புத பாமாலைதான். இது பகை அல்லல் அகற்றும் பாமாலை, இந்த வாராகி மாலை-யை மாலை நேரத்தில் யார் பாடி அன்னையை வழிபடுகிறார்களோ அவர் நிச்சயம் வெற்றியாளீ ஞானியே, இந்த வாராகி மாலையில் 32 பாடல்கள் அடங்கி உள்ளது.

    இந்த 32 பாடல்களும் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு மிகப்பெரிய சிறப்புகளையும், நல்ல வாழ்வையும் அளிக்கவல்லது. வாராகி அருள்பெற இந்த வாராகி மாலை ஒன்றே போதுமானது. உலகம் நலம்பெற, என் மக்கள் வாழ்வு வளம்பெற அன்னை அருள் ஆட்சி செய்யட்டும் என்றுதான் இந்த மாபெரும் பொக்கிஷத்தை உங்களுக்கு விளக்கத்தோடு வழங்குகிறேன்.
    அனைவரும் இதனை படித்து சகலபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும். அதுவே என் அன்னை வாராகியின் இலக்கு.

    வாராகி மாலை

    1. அன்னை வடிவம்

    இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
    குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம்
    திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
    மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே...

    பொருள்: நவரத்தினம் அனைத்தும் அன்னைக்கு அவள் உடலுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது. செவிகள் -குழை, திருவடிகள் புஷ்பராகம்,  இரண்டு கண்கள் நீலகல், கரங்கள் -கோமேதகம், நகம் -வைரம், சிரிப்பு -முத்து பவளம் போன்ற இதழ். திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போல் ஒளிரும் மேனியுடையதாகும்.

    பயன்படுத்தும் முறை : அன்னையை வழிபடும்போது அவளை நம்மோடு இணைய விண்ணப்பம் செய்யும் முதல் பாடல்.

    2. அருள்காட்சி வடிவம்

    தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது
    ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே
    ஆராதனை செய்து அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால்
    வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே

    பொருள்: வாராகி யந்திர வடிவம் இது. முக்கோணம், அறுகோணம், வட்டம், சுற்றிலும் தாமரைத்தளம், மத்தியில் பீஜம், இதை முறையாக எழுதி வாராகியை வழிபட வாராகி ‘வாலை’ திரிபுர சுந்தரியாக எழுந்து நமக்கு ‘அட்டமா சித்திகளை’ வழங்குவாள் என்று பொருள்.

    பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வழிபாட்டிற்காக அன்னையை நம் முன் அமரவைக்க இப்பாடலை பாட வேண்டும்.

    3. பக்தியின் உச்சம் :

    மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு
    கை சிரத்து ஏந்திப் ப-லால் நீணம் நாறக் கடித்து உதறி
    வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து
    பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே.

    பொருள்: தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி. அதுவும் தூயவர்களை -அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் துன்புறுத்தினால் அன்னை கோபம் கொள்கிறாள். அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார். அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பணிபவர்களும் இந்த தண்டனையை ஏற்க வேண்டியதுதான். பகைவர் உடலை தன் கூரிய நகங்களால் கிழித்து கூரிய கொம்புகளாக குத்தி குருதி குடிப்பாள். எனவே வாராகி வழிபாடு மிகவும் கட்டுப்பாடு உரியது. விளையாட்டல்ல என எச்சரிக்கப்படுகிறது.

    பயன்பாடு: எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.

    4. சக்தியின் வெளிப்பாடு

    படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    அடிக்கும் இரும்பு தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
    குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலையிட்டு குலாவிமன்றில்
    நடிக்கும் வாராகி பதினாலு உலகம் நடுங்கிடவே...

    பொருள்: தவறிழைக்காத வாராகி பக்தர்கள், இன்னலுக்கு உட்பட்டால் அதற்கு காரணமானவர் பெறும்  தண்டனை கடுமையானது. தேவியின் தண்டம் (தடி) அவர்களை அடித்து தும்சம் செய்யும். பக்தரை காக்கும் பேரரணாக தேவி வெளிப்படுவாள் என்று உணர வேண்டும்.

    பயன்பாடு: வீண்பழி நாம் பெறும்போது இப்பாடலை பாடி, நன்மை பெறலாம்.

    5 வெற்றி பெற செய்யும் விதம்:-

    “நடுங்காவகை அன்பர் நெஞ்சினில் புக்கவர் நண்ணவளரக் கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திடும் பாரக் காங்கையின் மீதே ரத்த திலகமிடும் தொடும் கார் மனோன்மணி, வாராகி நீலி தொழிலிதுவே...

    பொருள்:

    ஸ்ரீ வாராகி, தாந்த்ரீக பூஜையில் இடம் பெறுபவர்களுக்காக ஸ்ரீ மனோன் மணியையும், காளியையும் அனுப்பி, தன் பக்தனின் மனதில் ஏற்படும் பயத்தை விலக்கி, பகைவர்களை வீழ்த்தி ரத்தத் திலகம் இடுமாறு செய்கிறாள். “வாராகி” நீலி என்றால் பகை முடிப்பது என்று பொருள்.

    பயன்பாடு:

    மனதில் பயம் ஏற்படும் போது இப்பாடலை பாடி நன்மை பெறலாம்.

    6. பயம் போக்க:

    “நாசபாடுவர் நடுங்கப்படுவவர் நமன்கயிற்றால்
    வீசபடுவர் விளையும்படுவர் இம்மேதினியோர்
    ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
    வாசப் புதுமலர்த் தேனாள் வாராகியை வாழ்த்திலரே.

    பொருள்:

    இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று அடுத்தடுத்து பலரும் துன்பப்பட்டு நடுங்குகிறார்கள், என்ன காரணம்? புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் இப்படிப்பட்ட துன்பங்கள் ஏற்படுகின்றது.

    பயன்பாடு: துன்பம் படும் நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.

    7. வாராகியை வழிபடுவோர் யார்?

    “வாலை புவனை திரபுரை மூன்றும் இவ்வகையத்தில்
    காலையும் மாலையும்  ச்சியும் ஆக எக்காலத்துமே
    ஆலயம் எய்தி வாராகி தன் பாதத்தை அன்பில் உள்ளி
    மாயைன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே...

    அணிமா, மகிமா, லகிமா உள்ளிட்ட எட்டு சித்தகளையும் அளிப்பவள், வாலை எனப்படும் பாலா, சகல சவுபாக்கியங்களையும் தருபவள் ஸ்ரீ வாராகி : பகைவர்களை அழித்து வெற்றி அருள்பவள் திரிவுர பைரவி, இந்த மூலவராகவும் காலை, மாலை உச்சிப் பொழுதுகளில் திகழ்கிநாள் ஸ்ரீ வாராகி, அதனால் திருத்தாள்களை திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள்.

    பயன்:-

    இதை பாடினால் மும்மூர்த்தி அருள் கிடைக்கும்.

    (1) இப்பாடல்களை தினசரி பாடி வழிபடுவோர்களுக்கு எல்லா வகையான பலன்களும் அளவற்ற செல்வமும் திரண்டு கிடக்கும். அதுவரை என் அன்னை வாராகி உங்களை காக்கட்டும். ஓம் வாராகியே போற்றி....! போற்றி....!
    ×