search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Open"

    • நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
    • எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிங்கி ஹிஜிகடாவை எதிர்கொண்டார்.

    'வைல்டு கார்டு' வீரரான ரிங்கி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பின்னர் நடால் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களையும் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-2, 6-3, 6-3

    நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.

    செபாஸ்டியனுக்கு (அர்ஜென்டினா) எதிரான ஆட்டத்தில் 3-வது வரிசை யில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-5, 7-5, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.அப்போது செபாஸ்டியன் காயத்தால் வெளியேறினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா), சின்னெர் (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா) போன்ற முன்னணி வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கோல் பிக்கை எதிர்கொண்டார்.

    இதில் பெகுலா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்டெப் ஹென்ஸ் (அமெரிக்கா), யுலியா புதின் சேவா (ரஷியா) ஜூலி நெய்மா (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    11-வது வரிசையில் உள்ள எம்மா ரடுகானு (இங்கிலாந்து), முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார். பிரான்சை சேர்ந்த அலிசியா தோர்னெட் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரடுகானுவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதே போல 16-வது வரிசையில் உள்ள ஜெலீனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா), 24-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிஷ்மோவா (அமெரிக்கா), 25-வது வரிசையில் உள்ள எலீனா ரைபகினா (கஜகஸ்தான்), 32-வது இடத்தில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் கொலம்பிய வீரரிடம் தோற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. உலகின் 5-ம் நிலை வீரரான கிரீசைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கொலம்பியா வீரரான காலனைச் சந்தித்தார்.

    முதல் 2 செட்களை கோட்டை விட்ட சிட்சிபாஸ், மூன்றாம் செட்டை தனதாக்கினார். ஆனால் காலன் போராடி நான்காம் செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில், சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • முதல் சுற்றில் ஜார்ஜியா வீரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.
    • 1959 ஆண்டு சீன வீரர் மெய் ஃபூ சி, விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.

    நியூயார்க்:

    நடப்பாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் 31வது நிலை வீரரான ஜார்ஜியாவைச் சேர்ந்த நிகோலோஸ் பசிலாஷ்விலியை, சீன வீரர் வூ யிபிங் எதிர்கொண்டார்.

    22 வயதான வூ, முதல் சுற்றில் 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். கடந்த 1959 ஆண்டு விம்பிள்டன் போட்டியில் சீன வீரர் மெய் ஃபூ சி, ஒரு போட்டியில் வென்றிருந்தார்.

    அதன் பின்னர் சீன வீரர்கள் யாரும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சீன வீரர வூ யிபிங் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
    • சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனையிடம் தோற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    உலகின் 7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், உக்ரைன் வீராங்கனை டரியா ஸ்னைகுரை சந்தித்தார்.

    முதல் செட்டை கைவிட்ட ஹாலெப், இரண்டாம் செட்டை தனதாக்கினார். ஆனால் டரியா அதிரடியாக ஆடி மூன்றாம் செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில், சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • ஆண்டி முர்ரே முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தினார்.
    • ரஷியாவின் மெத்வதேவ் அமெரிக்க வீரர் ஸ்டீபன் கோஸ்லோவை வீழ்த்தினார்.

    நியூயார்க்:

    ஆண்டுதோறும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் மோதினார்.

    இதில், முர்ரே 7-5, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-2, 6- 4, 6- 0 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
    • இப்போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.

    நியூயார்க்:

    செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (35). உலக தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், வருகிற திங்கட்கிழமை தொடங்க இருக்கிற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜோகோவிச் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அமெரிக்க ஓபனில் விளையாட இந்த முறை என்னால் நியூயார்க்குக்கு பயணிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    • நியூயார்க் எனது டென்னிஸ் வாழ்க்கையில் அடிக்கடி திருப்பு முனையாக இருந்து இருக்கிறது.
    • 2016-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றதுடன் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தேன்.

    முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜெர்மனியை சேர்ந்த 34 வயது ஏஞ்சலிக் கெர்பர் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து இருக்கிறார். அத்துடன் அவர் கர்ப்பம் காரணமாக வருகிற 29-ந் தேதி நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.

    இது குறித்து ஏஞ்சலிக் கெர்பர் தனது டுவிட்டர் பதிவில், 'அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். ஆனால் இறுதியாக கர்ப்பமாக இருப்பதை சுட்டிக்காட்டி இருவருக்கு எதிராக ஆடுவது நியாயமான போட்டியாக இருக்காது என்பதால் விலக முடிவு எடுத்தேன்.

    அடுத்த மாதத்தில் இருந்து ஒரு டென்னிஸ் வீராங்கனையாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதில் இருந்து ஓய்வு எடுக்க இருக்கிறேன். ஆனால் இது மிகச்சிறந்த காரணத்துக்காக என்று நம்புகிறேன். நான் உங்கள் எல்லோரையும் தவற விடுகிறேன். நியூயார்க் எனது டென்னிஸ் வாழ்க்கையில் அடிக்கடி திருப்பு முனையாக இருந்து இருக்கிறது.

    இதனால் இந்த வருடமும் வித்தியாசமாக இருக்காது என்று உணர்கிறேன். இங்கு 2016-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றதுடன் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தேன். இதனால் நியூயார்க்குக்கு எனது மனதில் எப்போதும் சிறப்பு வாய்ந்த இடம் உண்டு. புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கிறேன். அதே நேரத்தில் உற்சாகமாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது.
    • இந்தப் போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.

    புதுடெல்லி:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.

    இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக இந்தியாவின் முன்னணி வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சானியா மிர்சா கூறுகையில், கனடாவில் இரு வாரங்களுக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினேன். அப்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதனால் சில வாரங்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே யு.எஸ். ஓபன் தொடரில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    சானியா மிர்சா 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இரட்டையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாத்தை வென்றதன் மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மூன்று இடத்திற்குள் முன்னேறியுள்ளார் ஜோகோவிச். #Djokovic #NaomiOsaka
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இது அவரின் 14-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இந்த சாம்பியன் பட்டம் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல் மூன்று இடத்திற்குள் வந்துள்ளார். நடால் முதல் இடத்திலும், ரோஜர் பெடரர் 2-வது இடத்திலும் உள்ளனர்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா செரீனா வில்லியம்சை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதன்மூலம் 12 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் 26-வது இடத்தில் இருந்து 16-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் பெனால்டி வழங்கிய கோபத்தில் நடுவரை திருடன் என்று செரீனா வில்லியம்ஸ் திட்டியுள்ளார். #USOpen #SerenaWilliams
    அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். அவர் 2 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

    முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.

    2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்தார். இதனால் செரீனா பல முறை கோபத்தில் நடுவரை திட்டி தீர்த்தார். அவர் கூறியதாவது:-

    நான் மோசடி எதுவும் செய்யவில்லை. பயிற்சியாளர் என்ன சிக்னல் கொடுத்தார் என்று நான் பார்க்கவில்லை. நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். திருடர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் தான் என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இந்த விளையாட்டில் ஆண்களை விட பெண்களிடம் நடுவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேறுபாடானது. வீராங்கனைகளுக்கு சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்களின் உரிமைக்காக நான் போராடுகிறேன்.

    இவ்வாறு 36 வயதான செரீனா தெரிவித்தார்.

    இதற்கிடையே அவரது பயிற்சியாளர் சைகை மூலம் சிக்னல் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தான் கொடுத்த சைகையை செரீனா பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். #USOpen #SerenaWilliams
    அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    நியூயார்க்:

    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இன்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவும், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்சும் மோதினர்.

    இதில், 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.



    இதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இந்த போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஒசாகா. 

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ஜப்பானின் ஒசாகாவும் மோதுகின்றனர். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் மேடிசன் கெய்ஸ் கர்லா சுவாரஸ் நவர்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #USOpen2018
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இன்று நடைபெற்ற பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் 14-ம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ் - 30-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் கர்லா சுவாரஸ் நவர்ரோ பலப்பரீட்சை நடத்தினார்.

    சொந்த மண்ணில் விளையாடிய மேடிசன் கெய்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த ரசிகர்கள் முன்னிலையில் அசத்திய கெய்ஸ்க்கு முன் நவர்ரோவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதனால் கெய்ஸ் 6-4, 6-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


    நவர்ரோ

    நவர்ரோ காலிறுக்கு முந்தைய சுற்றில் மரியா ஷரபோவாவையும், அதற்கு முன் 6-ம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியாவையும் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×