search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL 2018"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் கோவை கிங்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது காஞ்சி வீரன்ஸ். #TNPL2018 #VKVvLKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 20-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கோவை கிங்ஸ் அணியும், காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணியினர் பேட்டிங் தேர்வு செய்தனர். அந்த அணியின் பாபா அபராஜித் 41 ரன்களும், அருண் 29 ரன்களும், தீபன் லிங்கேஷ் 16 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர்.

    இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளனர்.

    கோவை கிங்ஸ் சார்பில் அஜித் ராம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது. காஞ்சி வீரன்ஸ் அணியினரின் பந்து வீச்சில் சிக்கி திணறினர்.

    கோவை கிங்ஸ் சார்பில் அஷ்வின் வெங்கட்ராமன் 35 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 21 ரன்களும் ரவிகுமார் ரோஹித் 18 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், கோவை கிங்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    காஞ்சி வீரன்ஸ் சார்பில் ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 3 விக்கெட்டுகளும், திவாகர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #VKVvLKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிராக ஆட்டத்தில் 175-ஐ சேஸிங் செய்து மதுரை பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது. #TNPL2018 #TWvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி திருச்சி வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவரில் 59 ரன்கள் சேர்த்தனர். பரத் ஷங்கர் 29 ரன்னும், மணி பாரதி 33 ரன்கள் எடுத்தனர்.

    4-வது வீரராக களம் இறங்கிய சுரேஷ் குமார் அவுட்டாகாமல் 26 பந்தில் 42 ரன்னும், அடுத்து வந்த சத்தியமூர்த்தி சரவணன் 28 பந்தில் 52 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழக்கவும் திருச்சி வாரியர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களம் இறங்கியது. அருண் கார்த்திக், டி ரோஹித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோஹித் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அருண் கார்த்திக் உடன் தலைவன் சற்குணம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி திருச்சி பேட்ரியாட்ஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தது. தலைவன் சற்குணம் 36 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    இவர் அவுட்டாகும்போது மதுரை பாந்தர்ஸ் 12.1 ஓவரில் 127 ரன்கள் குவித்தது. அதன்பின் 47 பந்தில் 49 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    ஷிஜித் சந்திரன் (2), ஜெகதீசன் கவுசிக் (9), அபிஷேக் தன்வர் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரர் அருண் கார்த்திக் 45 பந்தில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 80 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக நிற்க மதுரை பாந்தர்ஸ் 18.2 ஓவரில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்தது 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    தூத்துக்குடி அணிக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் தோல்விகளில் இருந்து பாடம் படித்து, வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார். #TNPL2018
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் நேற்று சென்னையில் நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய தூத்துக்குடி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங்பதானி கூறியதாவது:-
     

    இதற்கு முன் நடந்த 4 போட்டிகளை விட இந்த போட்டியில் பவர்பிளேயில் சிறப்பாக பேட்டிங் செய்தோம். பவர் பிளேயில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்தோம். இதுவே முந்தைய போட்டிகளில் நிறைய விக்கெட்டுகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்த ரன் குவிக்க முடியவில்லை.

    சேப்பாக்கம் மைதானத்தில் 180 ரன்களுக்கு மேல் குவித்தால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. கடுமையாகப் போராடியும் அந்த ஸ்கோரை எங்களால் எட்ட முடியவில்லை.

    முருகன் அஸ்வின் விளையாடுவது மிக நன்றாக உள்ளது. இந்த சீசன் முழுக்க அவர் எங்களுக்கு மிகவும் சிறப்பான பங்களிப்பு தருகிறார். இதுபோல, எம்.சித்தார்த் பந்து வீச்சில் முடிந்தவரை ஆதரவாக இருக்கிறார். ஒரு குழுவாக நாங்கள் இன்னும் ஒத்துழைக்க வேண்டும். தோல்விகளில் இருந்து பாடம் படித்து, வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது. முதல் போட்டியில் இருந்தே வெற்றி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதனை சரி செய்வோம்.

    போட்டி முடியும் நேரத்தில், பந்து வீசுவது மிக சிரமமாக இருந்தது. மழை வந்து நின்ற உடனே போதிய ஓய்வின்றி உடனே மீண்டும் போட்டியை தொடங்கிவிட்டனர்.

    ஆடுகளத்தில் ஈரம் நன்றாக காயவில்லை. இதனால் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல கிரிப் கிடைக்கவில்லை. இது வெற்றியை கணிசமாக பாதித்தது. தூத்துக்குடி அணி நன்றாக ஆடினாலும் எங்கள் வெற்றி பாதிக்க, மழையும் ஒரு முக்கிய காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPL2018 #JTPvCSG
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியின் 18-வது ‘லீக்’ ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (28-ந்தேதி) நடக்கிறது. இதில் கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கவுசிக் காந்தி தலைமையிலான டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. அந்த அணி திருச்சி வாரியர்ஸ் (31 ரன்), மதுரை பாந்தர்ஸ் (26 ரன்), காரைக்குடி காளை (47 ரன்), கோவை கிங்ஸ் (53 ரன்) ஆகியவற்றிடம் தோற்று இருந்தது.

    இழந்த பெருமையை மீட்கும் வகையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் 4 ஆட்டத்திலும் சேசிங்கில் தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ வெல்லும் பட்சத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம்.

    முன்னாள் சாம்பியனான டூட்டி பேட்ரியாட்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 2 ஆட்டத்தில் அந்த அணி காஞ்சி வீரன்ஸ் (48 ரன்), கோவை கிங்ஸ் (11 ரன்) வீழ்த்தியது. 3-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் முறையே மதுரை பாந்தர்ஸ் (7 விக்கெட்), திண்டுக்கல் டிராகன்ஸ் (4 விக்கெட்) அணிகளிடம் தோற்றது.

    ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் டூட்டி பேட்ரி யாட்ஸ் இருக்கிறது.

    நடப்பு சாம்பியனும், முன்னாள் சாம்பியனும் மோதுவதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1, ஸ்டோர் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது காரைக்குடி காளை. #TNPL2018 #RTWvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 17-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருச்சி வாரியர்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதின.

    டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. காரைக்குடி அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் திருச்சி வாரியர்ஸ் சிக்கியது.

    அந்த அணியினரின் சஞ்சய் 28 ரன்களும், சுரேஷ்குமார், மணிபாரதி ஆகியோர் 22 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 19.5 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    காரைக்குடி காளை சார்பில் மோகன் பிரசாத் 3 விக்கெட்டும், யோ மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. ஆதித்யாவும் அனிருதாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    இந்த ஜோடி 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆதித்யா 17 ரன்களில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அனிருதா வெளியேறினார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் யோ மகேஷ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதனால் காரைக்குடி அணி 19.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

    திருச்சி வாரியர்ஸ் அணியின் சுரேஷ்குமார் 4 ஓவரில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #RTWvKK
    தொடர்ந்து 4-வது தோல்வியை அடைந்து இருப்பது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் நாங்கள் இன்னும் ஒரு குழுவாக செயல்படவில்லை எனவும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் முருகன் அஸ்வின் கூறியுள்ளார். #TNPL2018 #CSG
    நெல்லை:

    3-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் நேற்று நெல்லையில் நடந்த 16-வது ‘லீக்’ ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த கோவை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தது. ஷாருக்கான் 59 ரன்னும், அபினவ் முகுந்த் 34 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 18 ஓவரில் 105 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் கோவை கிங்ஸ் 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கோவை அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ந்து 4-வது தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

    தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் முருகன் அஸ்வின் கூறியதாவது:-

    தொடர்ந்து 4-வது தோல்வியை அடைந்து இருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தனிப்பட்ட அணியில் ஒவ்வொரு வீரரும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் நன்றாக செயல்பட்டு இருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னும் ஒரு குழுவாக செயல்படவில்லை. இது தான் தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

    முதல் இன்னிங்சில் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஒரு ஒவருக்கு 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தோம். 4 விக்கெட் கைப்பற்றினோம். ஆனால் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களில் கொஞ்சம் ரன்கள் குவித்திருக்க வேண்டும் அதனை நாங்கள் சரியாக செய்யவில்லை. இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய சாதகமாக இருக்கிறது. அதனால் தான் சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய ஆதிக்கம் செலுத்தினர்.

    அதே நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர்களும் சரியான இடத்தில், வித்தியாசமான முயற்சி எடுக்கும்போது அவர்களாலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPL2018 #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. #TNPL2018 #CSGvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 16-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக கோவை கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    கோவை அணியின் ஷாருக் கான், அபிநவ் முகுந்த் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் 34 ரன்களும், ஷாருக் கான் 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இறுதியில், அந்தோணி தாஸ் 28 ரன்கள் சேர்க்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில்  பி.அருண், ஹரிஸ் குமார் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்கியது. சூப்பர் கில்லீஸ் அணியில் முருகன் அஷ்வின் அதிகமாக 34 ரன்கள் எடுத்தார். சசிதேவ் 23 ரன்கள் எடுத்தார்.

    மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் சூப்பர் கில்லீஸ் அணி 18 ஓவரில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து 53 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஷாருக் கான் தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #CSGvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ். #TNPL2018 #CSGvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 16-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிராக கோவை கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக் கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபிநவ் முகுந்த் 35 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். ஷாருக் கான் 45 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    அந்தோணி தாஸ் 21 பந்தில் 28 ரன்கள் சேர்க்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில்  பி அருண், ஹரிஸ் குமார் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சேஸிங் செய்து வருகிறது.
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நெல்லையில் இன்று இரவு நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்சை எதிர்கொள்கிறது. #TNPL2018 #ChepaukSuperGillies #KovaiKings
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் நெல்லை சங்கர் நகரில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

    கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை ஆடிய 3 லீக் ஆட்டங்களிலும் (திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளைக்கு எதிராக) தோல்வியையே சந்தித்துள்ளது. அதே சமயம் அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணியை வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகளிடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி கோவை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.



    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை பொறுத்தவரை எஞ்சிய 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். எனவே இன்றைய ஆட்டம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு வாழ்வா?-சாவா? போட்டியாகும். அதனால் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கும்.

    நெல்லை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. எனவே முந்தைய ஆட்டத்தில் நன்றாக செயல்பட்ட மணிகண்டன், அஜித்ராம், ராஜேஷ் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் கோவை கிங்ஸ் அணி களம் இறங்கும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், எம்.அஸ்வின் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் சுழலுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    இந்திய ‘ஏ’ அணிக்கு தேர்வாகியிருந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் முதல் 3 ஆட்டங்களில் ஆடவில்லை. தற்போது தாயகம் திரும்பி விட்டாலும் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்திலும் அவர் விளையாட வாய்ப்பில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறையும், கோவை கிங்ஸ் அணி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #TNPL2018 #ChepaukSuperGillies #KovaiKings
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்து மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. #TNPL2018 #KVvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 15-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் காஞ்சி வீரன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், டி ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    அருண் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சற்குணம் 40 பந்தில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். டி ரோகித் 30 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 20 பந்தில் 27 ரன்களும், அபிஷேக் தன்வார் 10 பந்தில் 22 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது.

    காஞ்சி வீரன்ஸ் சார்பில் தீபன் லிங்கேஷ், திவாகர் ஆகியோர் 3 விக்கெட்டும், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 2விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் களமிறங்கியது. ஆனால் மதுரை பாந்தர்ஸ் அணியின் துல்லிய பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    காஞ்சி அணியில் விஷால் வைத்யா 31 ரன்களும், பாபா அபராஜித் 29 ரன்களும், மோகித் ஹரிஹரன் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் 34 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து மதுரை பாந்தர்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது தலைவன் சற்குணத்துக்கு வழங்கப்பட்டது.
    #TNPL2018 #KVvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸ்க்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ். #TNPL2018 #KVvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 15-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் காஞ்சி வீரன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடு வருகின்றன. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், டி ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அருண் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டி ரோகித் உடன் தலைவன் சற்குணம் ஜோடி சேர்ந்தார். சற்குணம் 40 பந்தில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். டி ரோகித் 30 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.



    அதன்பின் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 20 பந்தில் 27 ரன்களும், அபிஷேக் தன்வார் 10 பந்தில் 22 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தினார். #TNPL2018 #KV
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 22-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆன மோகித் ஹரிகரன் (வயது 18) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்தில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களம் இறங்கியது. 19.1 ஓவரிலேயே சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது காஞ்சி வீரன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மோகித் ஹரிகரன் பார்வையாளர்களின் கவனைத்தை ஈர்த்தார். இதற்கு காரணம் இரண்டு கைகளாலும் பந்து வீசியதுதான்.

    இடது கை பேட்ஸ்மேன் பேட்டிங் செய்யும்போது வலது கையாலும், வலது கை பேட்ஸ்மேன் பேட்டிங் செய்யும்போது இடது கையாலும் பந்து வீசி அசத்தினார். 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்த இவர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. என்றாலும் அனைத்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்.
    ×