search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KK"

    • இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கே.கே’.
    • இப்படத்தின் முதல் பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ரெட்டச்சுழி, சாட்டை திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த யுவராஜா 'கெளுத்தி' என்ற திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து குழந்தைகளின் வாழ்வியலை கதைக்களமாக கொண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார்.


    கே.கே

    கலர் காத்தாடி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு 'கே.கே' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் பேபி.சஞ்சனா மற்றும் மிதுன் ஈஸ்வர் குழந்தை நட்சத்திரங்களாய் களமிறங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


    கேகே

    இப்பாடலை இயக்குனர் யுவராஜா எழுத, ஜித்தின் கே ரோஷன் இசையமைப்பில் விஜய் டிவி புகழ் ரிஹானா மற்றும் சர்வேஷ் பாடியுள்ளனர். மேலும், 'கே.கே' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலை 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்து செவகாட்டு சீமையிலே என்ற பாடலை பாடிய பின்னணி பாடகர் குரு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபல பின்னணி பாடகர் கேகே மரணத்திற்கு பல காரணங்கள் இருப்பதாகவும், அந்த கோணத்தில் விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
    பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (வயது 53), கொல்கத்தாவில் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    அவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. இவரது மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது மரணத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது. 

    கேகே
    கேகே

    குறிப்பாக அரங்கத்தில் நிரம்பி வழிந்த கூட்டம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கேகே இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் மொத்தமாக 3 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் அவரது நிகழ்ச்சி நடைபெற்ற போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாக கூறப்படுகிறது. கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைப்பதற்காக தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரங்கத்தில் அதிக வெப்பம் நிலவியுள்ளது. இதனால் கேகே-வுக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அரங்கத்தில் ஏசி வேலை செய்யவில்லை. இது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் அந்த கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ். #TNPL2018 #CSGvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 16-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிராக கோவை கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக் கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபிநவ் முகுந்த் 35 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். ஷாருக் கான் 45 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    அந்தோணி தாஸ் 21 பந்தில் 28 ரன்கள் சேர்க்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில்  பி அருண், ஹரிஸ் குமார் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சேஸிங் செய்து வருகிறது.
    எம்.சத்யமூர்த்தி இயக்கத்தில் மு.ரா.சத்யா - மானசா நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என்னோடு நீ இருந்தால்' படத்தின் விமர்சனம். #EnnoduNeeIrundhal
    வெளியூர் வரும் நாயகன் மு.ரா.சத்யா தனது நண்பன் பிளாக் பாண்டியுடன் தங்குகிறார். இவர்கள் இரண்டு பேரும் ரியல் எஸ்டேட் நிறுவனதத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பெங்களூரைச் சேர்ந்த நாயகி மானசா நாயர் சென்னை வரும் போது, நண்பர்கள் மூலமாக சத்யா - மானசா நாயர் சந்திப்பு நடக்கிறது. 

    பின்னர் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் மானசாவை ஒருபக்கமாக காதலிக்க ஆரம்பிக்கிறார் சத்யா. இந்த நிலையில், மானசாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக செய்தி கேட்டு அதிர்ச்சியாகிறார். நாட்டில் நடக்கும் தவறுகளின் பட்டியலை சேகரித்து வைக்கும் சத்யா, தவறு செய்பவர்களுக்கு கடுமையான தணடனை கொடுக்க வேண்டும் என்று மனநிலை உடையவர். 

    இப்படி இருக்க மானாசாவின் திருமணம் நின்றுவிடுகிறது. மானசாவுக்கு பார்த்த மாப்பிள்ளை தப்பானவர் என்ற தகவல் கிடைக்கிறது. இதையடுத்து மானசாவை சந்திக்க ஆசைப்படும் சத்யாவுக்கு மானசாவின் போன் கிடைக்கிறது. அதில் பேசும் மானசா, குறிப்பிட்ட நபர்களை சுட்டிக்காட்டி அவர்கள் தவறு செய்துள்ளதாகக் கூறி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாள். 



    இதையடுத்து சத்யா அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொள்கிறார். செய்திகளில் வரும் தவறுகள் உட்பட தவறு எங்கு நடந்தாலும் அதற்கு காரணமானவர்களை கொலை செய்கிறார். இந்த நிலையில், சத்யாவுக்கு விபத்து ஏற்பட அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அங்கு அவரை சோதனை செய்து பார்த்ததில் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டது தெரிகிறது. 

    கடைசியில், சத்யா சரியான மனநிலைக்கு வந்தாரா? தெரிந்து தான் கொலை செய்தாரா? நாயகியை கரம்பிடித்தாரா? அல்லது அவரது கொலை வேட்டை தொடர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் சத்யா, மானசா நாயர், பிளாக் பாண்டி, வெண்ணிற ஆடை மூர்த்தி என அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 



    தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கிறார் எம்.சத்யமூர்த்தி. படத்தின் கதைக்கு ஏற்ப திரைக்கதை விறுவிறுப்பு குறைவாக உள்ளது. படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். 

    கே.கே. இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மணி ஒளிப்பதிவில் காட்சிகளும் சுமாராக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `என்னோடு நீ இருந்தால்' கற்பனை. #EnnoduNeeIrundhal

    ×