search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தியது காரைக்குடி காளை
    X

    டிஎன்பிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தியது காரைக்குடி காளை

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது காரைக்குடி காளை. #TNPL2018 #RTWvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 17-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருச்சி வாரியர்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதின.

    டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. காரைக்குடி அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் திருச்சி வாரியர்ஸ் சிக்கியது.

    அந்த அணியினரின் சஞ்சய் 28 ரன்களும், சுரேஷ்குமார், மணிபாரதி ஆகியோர் 22 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 19.5 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    காரைக்குடி காளை சார்பில் மோகன் பிரசாத் 3 விக்கெட்டும், யோ மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. ஆதித்யாவும் அனிருதாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    இந்த ஜோடி 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆதித்யா 17 ரன்களில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அனிருதா வெளியேறினார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் யோ மகேஷ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதனால் காரைக்குடி அணி 19.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

    திருச்சி வாரியர்ஸ் அணியின் சுரேஷ்குமார் 4 ஓவரில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #RTWvKK
    Next Story
    ×