search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN assembly"

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
    • 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரியில் 2 கோடி மதிப்பீட்டில் சூரியத்தோட்டம் அமைக்கப்படும்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

    தென்காசி மாவட்டத்தில 1 கோடி மதிப்பீட்டில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்.

    உதகையில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்ய ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு.

    முந்திரி சாகுபடிப் பரப்பை அதிகரிக்க ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.

    மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    மிளகாய்ப் பயிர் ஊக்குவிப்புத் திட்டம் ரூ.3.67 கோடி நிதி ஒதுக்கீடு.

    மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு.

    10 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நேரடி விற்பனை மையங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி.

    26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு.

    பவர் டில்லர்களின் மானியத் தொகை ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

    207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.32.9 கோடி நிதி ஒதுக்கீடு.

    தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலி உருவாக்க ரூ.50 லட்சம் நிதி.

    புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.28.82 கோடி நிதி ஒதுக்கீடு.

    10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    மழை நீர் சேகரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    வேளாண் இயந்திரங்களை பரவலாக்குவதற்கான தொழில்நுட்பக் கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    10 மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடமாடும் உலர்த்திகள் வாங்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு.

    நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் குறித்து செயல்விளக்கம் அளிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

    5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்கள், 8 மஞ்சள் வேகவைக்கும் இயந்திரங்கள் அமைக்க ரூ.2.12 கோடி நிதி

    பெரம்பலூரில் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும்.

    100 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளை புதுப்பிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.

    10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
    • விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * உற்பத்தி திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.

    * நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பரிசளிக்க ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் விவசாயிகளுக்கு பரிசு.

    * மாற்றுப்பயிர் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட ரூ.12 கோடி மானியம்.

    * 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 2,482 ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள் உருவாக்கிட ரூ.2.48 கோடி நிதி ஒதுக்கீடு.

    * பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

    * விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீடு.

    * விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு.

    * புதிய கரும்பு ரக விதைகளை மானியத்தில் வழங்கிட ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு.

    * சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் உயர்த்த ரூ.12.40 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.

    * ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு.

    * கன்னியாகுமரியில் 2 கோடி மதிப்பீட்டில் முல்லைப்பூங்கா அமைக்கப்படும்.

    * தஞ்சாவூரில் 2 கோடி மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • 100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
    • சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * சீவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.

    * உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * விவசாயிகள் கூடுதல் லாபம் பெற 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

    * பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 2482 ஊராட்சிகளை அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த ரூ.200 கோடி நிதி.

    * பயறு பெருக்குத் திட்டம், 4.75 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்திட ரூ.40.27 கோடி நிதி ஒதுக்கீடு.

    * துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

    * எண்ணெய் வித்துப்பயிர்களின் சாகுபடியை 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்கம் செய்திட, ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

    * எள் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் 25,000 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

    * சூரியகாந்தி சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டம் 12,500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

    * வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி பரப்பு விரிவாக்கத்திட்டத்திற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.

    * நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில் 50,000 ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

    * ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15,280 கிராமங்களில் அறிமுகம்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
    • ஆடாதொடா, நொச்சி தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    * தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழை பயிர் சேதத்திற்கு விரைவில் 208.20 கோடி நிதி வழங்கப்படும்.

    * 2023-24ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    * முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" 2024-25ம் ஆண்டில் இந்த திட்டம் 22 இனங்களுடன், 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

    * 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண் புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்

    * நிரந்தர மண்புழு உரத்தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம்.

    * மண்வளம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழ் மண்வளம் இணைய தளம் வாயிலாக உரப்பரிந்துரை வழங்கப்படும்.

    * 37,500 ஏக்கர் களர், அமில நிலங்களைச் சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள், 2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

    * ஆடாதொடா, நொச்சி தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தியை மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    • சென்னை, கோவை, மதுரையில் ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • விருதுநகர், சேலத்தில் ரூ.2483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். பழங்குடி மக்களின் மொழி வளங்களை ஆவணப்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னை, கோவை, மதுரையில் ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும். சுகாதார மையங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு 1000 பேருக்கு 6 மாத உறைவிடப்பயிற்சி தரப்படும்.

    மகளிர் வேலைவாய்ப்பை பெருக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். தஞ்சையில் ரூ.120 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். அனைத்து சிப்காட் பகுதிகளிலும் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். விருதுநகர், சேலத்தில் ரூ.2483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.
    • சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக, வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய வடசென்னை வளர்ச்சித் திட்டம்" எனும் புதிய முயற்சியை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் வாட்டர் பேசின் சாலையில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்புகள். எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்தர சிகிச்சைப்பிரிவு, ராயபுரத்தில் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய கட்டடங்கள், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தளங்கள், 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்பயிற்சி நிலையம், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டேரி. வில்லிவாக்கம், பாடி ஏரிகளை சீரமைத்தல். 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 பள்ளிகளைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    சென்னை மாநகராட்சி வடசென்னை பகுதிகளில் மக்கள்தொகை மற்றும் அவற்றுக்கான பெருகிவரும் தேவைகளை நிறைவுசெய்ய சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்புக் குழாய்கள், கழிவுநீர் இறைக்கும் நிலையங்கள், உந்து குழாய்கள் மற்றும் உபகரணங்களின் செயல்திறன் போதுமானதாக இல்லை. எனவே, வடசென்னைப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு கழிவுநீரைத் திறம்பட அகற்றுவதற்கும், நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.

    சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தக் கனவுத் தொழிற்சாலையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள், படத் தயாரிப்புக்குப் பிந்தைய பதவிகளுக்கான கட்டமைப்புகள், படப்பிடிப்பிற்குத் தேவையான கட்டமைப்புகள், அரசு தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின்படி அரசு நிர்வாக வடிவமாக செயல்பட்டு வருகிறது.
    • நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும், அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின்படி அரசு நிர்வாக வடிவமாக செயல்பட்டு வருகிறது. சமூக நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து மக்களுக்குமான சமநீதி, சமநிதியை வழங்கி தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேக பயணத்தை உறுதி செய்துள்ளது. நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் அறிவிப்பும் ஈரமுள்ளதாக இதயமுள்ளதாக இருக்கிறது.

    7 பெரும் கனவுகளை முழுமையாக நிறைவேற்றும்போது இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழும் காலம் விரைவில் ஏற்படும். நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும், அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது.

    நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு... நாளை முதல் அது நனவாக வேண்டும்.

    அனைத்து துறை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • சென்னையில் உள்ள குறளகம் நவீனப்படுத்தப்படும்.
    • ரூ.60 கோடியில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    நகராட்சி நீர்வளம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.25,858 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மெரினா கடற்கரை, கடலூர் சில்வர் பீச், விழுப்புரம், மரக்காணம், நாகை, ராமேசுவரம் உள்பட 8 கடற்கரைகள் மேம்படுத்தப்படும். பிராட்வே பஸ் நிலையம் மேம்படுத்தப்படும்.

    பழங்குடியினரை மேம்படுத்த ரூ.1000 கோடியில் தொல்குடி என்ற திட்டம் அமல்படுத்தப்படும். 2 ஜவுளிப் பூங்காக்கள் மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பெரம்பலூர், எறையூர், பாடலூரில் சிப்காட் வளாகத்திற்கு தேவையான நீரை வழங்க கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அயோத்தி தாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்.

    1000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கப்படும். சென்னையில் உள்ள குறளகம் நவீனப்படுத்தப்படும்.

    பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோவில்களில் ரோப்கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    சமூக பாதுகாப்பு துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும்.

    கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி உள் நோக்கு இல்லம் அமைக்கப்படும்.

    தூண்டில் வளைவுகள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்படும். கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

    உள்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றை திறம்பட செயல்படுத்த பெயர் மாற்றம் செய்யப்படும். நீதியரசர் சந்துரு பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த துறையில் சீர்திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.60 கோடியில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும்.

    சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரியில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும். இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ராமநாதபுரம் பிரப்பன் வலசையில் அமைக்கப்படும்.

    இளைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணர பேச்சு, பாட்டு, இசை, நடனம் என போட்டிகள் நடத்தப்படும். 500 புதிய மின்சார பஸ்கள் வாங்கப்படும்.

    நூலகம், குடும்ப பார்வையாளர்கள் அறை, பூங்கா, மைதானத்துடன் இல்லம் அமைக்கப்படும்.

    இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்து நடந்து 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை உயர்த்தப்படும்.

    தமிழ்நாடு சந்தித்த பேரிடர்களுக்கான நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதிலும் மத்திய அரசு கால தாமதம் செய்கிறது. இயற்கை பேரிடர்களால் தமிழக அரசின் நிதி நிலையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ரூ.665 கோடியில் 14 புறவழிச்சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

    தஞ்சை செங்கிப்பட்டி அருகே ரூ.120 கோடியில் 300 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    சிப்காட் பூங்காவில் உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல், தோல் அல்லாத காலணிகள் ஆலை அமைக்கப்படும்.

    ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்திடும் சட்டமசோதா நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும்.

    வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டும் மாநில அரசின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு 3 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.

    மதி இறுக்கம் உடையோருக்கான உயர் திறன் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும். பேரிடர்களால் நிதி நெருக்கடியை சந்தித்த போதிலும் வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி அளித்து உள்ளோம்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு துறைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் வந்து கொண்டுதான் இருக்கிறது.
    • மாநில அரசின் வருவாய் உயர்ந்தாலும், பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கனவு பட்ஜெட் கானல் நீர்... மக்களுக்கு பயன் தராது. நிதி நிலை அறிக்கையில் வார்த்தை ஜாலம் உள்ளது.

    * வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல் தடுப்பணைகள் கட்டும் திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.

    * தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிப்பு.

    * தமிழகத்தின் கடன் 8 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

    * கடன் பெறுவதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * வரவு- செலவு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

    * பல்வேறு துறைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் வந்து கொண்டுதான் இருக்கிறது.

    * மாநில அரசின் வருவாய் உயர்ந்தாலும், பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    * இருக்கும் நிதியை வைத்து சிறப்பான ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    புதுமைப்பெண் திட்டத்தை விரிவுபடுத்த ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வரும் நிதியாண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை சீரமைக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.7590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்.

    பணிபுரியும் மகளிருக்காக கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படும். 15 ஆயிரம் திறன்மிக்க வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது.
    • தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் தமிழ் நூல்களை இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள் வெளியிடப்படும். மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    ×