search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வேளாண் பட்ஜெட்"

    • வாயு கசிவை கண்டறிந்ததும் 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
    • தொழிற்சாலையை ஆய்வு செய்து உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டனர்.

    சென்னை:

    எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது குறித்து வேல்முருகன், ஜெகன் மூர்த்தி, எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்கள்.

    இதற்கு சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தாக்கல் செய்த விவர அறிக்கையில் கூறி இருந்ததாவது:-

    இந்த உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் அங்கு குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன.

    வாயு கசிவை கண்டறிந்ததும் 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையை ஆய்வு செய்து உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டனர். அதன்படி உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    தற்போது விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூடம் 1986 பிரிவு 5-ன் கீழ் சுற்றுச்சூழல் இழப்பீடாக 5 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 888 ரூபாயை அந்த உர நிறுவனத்திடம் இருந்து ஏன் வசூலிக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடவாசல் பகுதியில் தயாராக உள்ள இடத்தை கொடுக்க பகுதி மக்கள் தயாராக உள்ளனர்.
    • குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் நிச்சயம் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில், குடவாசல் தொகுதியில் கல்லூரி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அவர் பேசுகையில், 'குடவாசல் தொகுதியில் 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரி கட்ட நடவடிக்கை மேற் கொண்டதாகவும், ஆனால் நீதிமன்ற வழக்கால் கட்ட முடியாமல் போய்விட்டது.

    குடவாசல் பகுதியில் தயாராக உள்ள இடத்தை கொடுக்க பகுதி மக்கள் தயாராக உள்ளனர். குடவாசலிலேயே அரசு கலைக்கல்லூரி இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'என்றார்.

    இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை குடவாசலில் இடம் கிடைக்காததால் அருகில் இருக்கக்கூடிய இடத்தில் கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    10 ஆண்டுகளாக என்ன செய்திருந்தீர்கள். குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் நிச்சயம் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.

    • 1300 வருடங்களுக்கு முன்பாகவே பல்கலைக் கழகம் வைத்து தத்துவம் பரப்பிய மண் காஞ்சி.
    • போதி தர்மரின் சீன பயணத்தில் மருத்துவ அறிவால் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார்.

    சட்டசபையில் இன்று, வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய எழிலரசன் எம்.எல்.ஏ., பழைய நகரமாகவும் உலக தத்துவவாதிகள் இருக்க கூடிய மண்ணாக காஞ்சிபுரம் இருந்து கொண்டிருக்கிறது. 1300 வருடங்களுக்கு முன்பாகவே பல்கலைக் கழகம் வைத்து தத்துவம் பரப்பிய மண் காஞ்சி.

    இங்கு அரச குடும்பத்தில் பிறந்த போதி தர்மரின் சீன பயணத்தில் மருத்துவ அறிவால் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். உலகமே அவரின் மருத்துவ அறிவு போதனைகளை பாராட்டி வருகிறது.

    மேலும், மதவாதம் மன நோயாக மாறி வரும் நிலையில் ஆன்மபலம் பெறுவதற்கு போதி தத்துவங்களையும் மருத்துவ அறிவையும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் காஞ்சியில் அரங்கம் அமைக்க வேண்டும் என்றார்.

    அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மீனாட்சி சொக்கநாதர் மற்றும் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
    • ராஜகோபுரம் கட்டுவதற்கு மண் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.

    சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில், மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள மீனாட்சி சொக்க நாதர் மற்றும் ஞானதண்டாயுத பாணி சுவாமி கோவிலுக்கு புதிய ராஜகோபுரம் கட்ட அரசு நடவடிக்கை மேற் கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    மீனாட்சி சொக்கநாதர் மற்றும் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது. மூன்று கால விமானம், சன்னதி என ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் திட்டபணிகள் மேற்கொள்ள பாலாலயம் தொடங்கப்பட உள்ளது.

    ராஜகோபுரம் கட்டுவதற்கு மண் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது. தொடர் நடவடிக்கையாக அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் ராஜகோபுரம் கட்டப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்ற ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்பது பற்றி வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உணவு தந்துதவும் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண்மை நிதி நிலை அறிக்கை அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்ற பெருமையைத் தவிர, இந்த நிதிநிலை அறிக்கையால் பயனேதும் இல்லை என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இது குறித்து எவ்விதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னை மரத்திலிருந்து 'நீரா' போன்ற பதநீர் இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது தென்னை விவசாயிகளிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோன்று, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றிற்கு 4,000 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே.

    கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மண் வளமே அழியும் அளவுக்கு மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

    இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024-2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்திற்காக, சென்ற ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2,337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 562 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பதிலை வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் எடுத்துரைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு அரசு சார்பில் செய்யப்படாததால், அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கான இழப்பீட்டினை வழங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    சென்ற ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்பது பற்றி வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
    • நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது.

    * 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

    * டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    * உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கிறது பாஜக அரசு.

    * உழவர்களின் மேன்மைக்கு திட்டங்களை தீட்டுகிறது திமுக அரசு.

    * உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.

    * உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம்.

    * பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    * கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம்.

    * உழவர்கள் மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை. தொழில்துறையை போல் அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களில் இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உணரலாம்.

    * மக்களை மட்டுமல்ல, மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியத்துக்காக ரூ.18 கோடி ஒதுக்கப்படும்.
    • தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    ஊட்டச்சத்து மிகுந்த சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற குறுதானியங்கள் ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால், 25 மாவட்டங்களைக் கொண்டு ஏற்கனவே இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    2023-2024-ஆம் ஆண்டு முதல் 2027-2028-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் இரண்டு மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2024-2025-ஆம் ஆண்டிலும் 65 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    மாநில அளவில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணைய் வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025-ம் ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    2023-2024-ம் ஆண்டு முதல், தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிர்ம விவசாயிக்கான "நம்மாழ்வார் விருது" வழங்கப்பட்டு வருகிறது. 2024-2025-ம் ஆண்டிலும் உயிர்ம விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியத்துக்காக ரூ.18 கோடி ஒதுக்கப்படும்.

    2024-2025-ம் ஆண்டில், பலன் தரும் பருத்தி சாகுபடித் திட்டம் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இதனால், பருத்தி உற்பத்தி தமிழ்நாட்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேல்களாக உயரும்.

    பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் அதிகம் பாதிப்படைந்த தூத்துக்குடி மாவட்டத்தில், மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்காக 14 கோடியே 55 இலட்சம் ரூபாய், 9,988 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக உடனடியாக வழங்கப்பட்டது. 2024-2025-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

    தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    2024-2025-ம் ஆண்டில் 2 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 232 கோடியே 50-லட்சம் ரூபாய் ஒன்றிய நிதியுடன், 54 கோடியே 73 லட்சம் ரூபாய் மாநில நிதியை ஒருங்கிணைத்து 773 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும.

    தோட்டக்கலைப் பயிர்களில் எந்திரங்களின் பயன்பாடு மிகவும் இன்றியமையாததாக உள்ள நிலையில் நிலம் சீர் செய்தல் முதல் அறுவடை பின்செய் மேலாண்மை வரையில் பயன்படுத்தப்படும் கருவிள், எந்திரங்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட, கண்காட்சி ன்று நடத்தப்படும். இதனால் விவசாயிகள், தோட்டக்கலை தொழில் முனைவோர்கள், அலுவலர்கள் ஆகியோர் பயன் அடைவர். இக்கண்காட்சி 10 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில நிதியில் நடத்தப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.
    • அறுவடை கரும்புக்கு நிதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை வளாகத்தில் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.

    * வேளாண் பட்ஜெட்டில் 60 சதவீதம் திட்டங்கள் மத்திய, மாநில அரசு பங்களிப்பு என அறிவிப்பு.

    * வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.

    * தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது.

    * அறுவடை கரும்புக்கு நிதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

    * வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
    • பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலனில்லை.

    * பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்துள்ளனர்.

    * நெல், கரும்பு குறித்து தி.மு.க. வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    * தி.மு.க. ஆட்சியில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் குறுவை சாகுபடி சேர்க்கப்படவில்லை.

    * குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது.

    * குறுவை சாகுபடி விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக இயக்க நடவடிக்கை தேவை.

    * நீரின்றி காய்ந்த சம்பா, தாளடி சாகுபடி பயிரால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * பாதிப்புக்குள்ளான விளைநிலங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    * காவிரி நதிநீர் பங்கீடு முறையாக பெறாத காரணத்தால் டெல்டா விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

    * பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரும்புப் பயிரில் உயர் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து எக்டருக்கு 111 மெட்ரிக் டன் உற்பத்தித்திறனுடன் தமிழ் நாடு, தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
    • நடப்பாண்டில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளுக்கிடையிலும், 114 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அப்போது அவர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் 7,705 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை, 23,237 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும், 3,587 ஏக்கர் பரப்பளவில் பழ மரக்கன்றுகள், மரங்கள் முதலியவையும் நடப்பட்டு, தரிசு நிலங்கள் நிரந்தர சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

    2020-2021-ம் ஆண்டில் 89 லட்சத்து ஆறாயிரம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்றபயிர் பரப்பு, 2022-2023-ஆம் ஆண்டில் 95 லட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

    இயற்கை இடர்ப்பாடுகளினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட, 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 4,436 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் விதைப்பு பொய்த்தல் இனத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 2022-2023, 2023-2024-ம் ஆண்டுகளில் பயிர் இழப்பு ஏற்பட்ட அதே ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    தமிழ்நாட்டில், கடந்த 2022-2023-ம் ஆண்டில், தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, மாண்டஸ் புயல், வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, பருவம் தவறிப் பெய்த மழை, வறட்சி, கடந்த மார்ச் 2023-ல் பெய்த ஆலங்கட்டி மழை ஆகிய இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்கு, 380 கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

    குறுவைப் (காரீப்) பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்பு, மிச்சாங் புயல், மக்காச்சோளப்பயிரில் ஏற்பட்ட மகசூல் இழப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம் விவசாயிகளுக்கு 118 கோடியே 77 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கோடை மழை, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழை குறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, தென் மாவட்டங்களில் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

    2022-2023-ம் ஆண்டு 35 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கராக இருபோகச் சாகுபடிப் பரப்பு உயர்ந்துள்ளது. கரும்புப் பயிரில் உயர் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து எக்டருக்கு 111 மெட்ரிக் டன் உற்பத்தித்திறனுடன் தமிழ் நாடு, தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.

    நடப்பாண்டில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளுக்கிடையிலும், 114 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2023- 2024-ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியினை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ. நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்களை தூர்வார ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.
    • வேளாண் துறைக்கு மட்டும் மொத்தம் ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

    * காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ. நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்களை தூர்வார ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.

    * பசுந்தீவன ஊடுபயிர் செய்து பால் உற்பத்தியை உயர்த்திட 5,000 ஏக்கர் பரப்பிற்கு ரூ.2 கோடி மானியம்.

    * மீன் தீவன ஆலை போன்ற திட்டங்களுக்காக ரூ.4.60 கோடி மானியம்.

    * பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு.

    * தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு.

    * 7 மாவட்டங்களில் வறட்சித் தணிப்பிற்கான சிறப்பு உதவித்திட்டத்திற்கு ரூ.110.59 கோடி நிதி ஒதுக்கீடு.

    * பனை சாகுபடியினை ஊக்குவிக்க, 10 லட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத்துறை மூலம் நடவு செய்யப்படும்.

    * 200 பனைத்தொழிலாளர்களுக்கு பயிற்சி, உரிய கருவிகள் வழங்க ரூ.1.14 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

    * வேளாண் துறைக்கு மட்டும் மொத்தம் ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • இணைய வழி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
    • 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகளை நடத்த 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * 100 விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * இணைய வழி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    * வேளாண் வணிக மேம்பாட்டிற்காக 770 தீவிர விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

    * பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு

    * பண்ணை வழி வர்த்தகத்தை ஊக்கப்படுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு.

    * 100 சேமிப்பு கிடங்குகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

    * புத்தாக்க நிறுவனங்களை ஊக்கப்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

    * 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகளை நடத்த 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

    * விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை இனி விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை என பெயர் மாற்றம்.

    * கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு.

    * பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு.

    * ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    ×