search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Therottam"

    • 23-ந்தேதி சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-வது நாளான நேற்று காலை பர்வத வர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்தார்.. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி திட்டக்குடி அருகே மேல தெருவில் உள்ள கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு இரவு பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஸ்ரீகோடிலிங்க ரவி சாஸ்திரி, குமார் சாஸ்திரி, கோவிலின் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அது போல் திருவிழாவில் 9-வது நாளான இன்று காலை 10 மணிக்கு மேல் அம்பாள் தேரோட்டம் நடைபெறுகின்றது. 23-ந்தேதி அன்று மதியம் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் ராம தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப் படியில் வைத்து சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 24-ந் தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 29-ந் தேதி அன்று கோவிலில் இருந்து சுவாமி அம்பாள்-பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா முடிவடைகின்றது.

    • தினமும் வீரட்டானேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
    • மூலவருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர தேர்த்திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வீரட்டானேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 8.15 மணியளவில் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் மட்டும் ஓம் சக்தி ஓம் சக்தி என பக்தி கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேரை மாட வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேரானது காலை 9.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

    இந்த விழாவில் பண்ருட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மகாதேவி, வேல்விழி, வியாபார சங்க பிரமுகர்கள் மோகன், வீரப்பன், ராஜேந்திரன், சபாபதி செட்டியார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 23-ந்தேதி சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 7-வது நாளான நேற்று இரவு 9 மணிக்கு பர்வத வர்த்தினி அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து வெள்ளித்தேரை ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து தொடங்கப்பட்ட வெள்ளி தேரோட்டமானது கோவிலின் 4 ரத வீதிகளை சுற்றி மீண்டும் கிழக்கு வாசல் பகுதிக்கு வந்தடைந்தது. திருவிழாவின் 9-வது நாள் நிகழ்ச்சியாக நாளை காலை 10 மணிக்கு மேல் அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந் தேதி மாலை 2 மணிக்கு மேல் தபசு மண்டகப்படியில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந் தேதி இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    • 21-ந்தேதி அம்பாள் தேரோட்டம் நடக்கிறது
    • 24-ந்தேதி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நடக்கிறது

    ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. இந்த நிலையில் 5-வது நாளான ஆடி அமாவாசையான நேற்று காலை 9 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் கோவிலில் இருந்து எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதை தொடர்ந்து பகல் 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஸ்ரீ ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளினார். இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 6-வது நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 7-வது நாளான நாளை(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகின்றது. 21-ந் தேதி அன்று அம்பாள் தேரோட்டம், 23-ந்தேதி அன்று பகல் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் தபசு மண்டகப் படியில் வைத்து சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 29-ந்தேதி அன்று காலை 6 மணிக்கு சுவாமி-அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • தேரோட்டம் 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • 24-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்ற 61-வது தலமாகும்.

    சிவபெருமான், அப்பர் பெருமானாகிய திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான், எமதர்மனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும் மீண்டும் வழங்கியதும், தேவலோக சப்த கன்னிகள் என்றும் அழியாத வரம் பெற்று கல்வாழைகளாக அவதரித்து ஆண், பெண் இருபாலரின் சகலதோஷங்களை நிவர்த்தி செய்து, எண்ணிய வரம் அளித்து அருள் புரிந்து வருவதுமான கி.பி. 6-ம் நூற்றாண்டை சார்ந்த பழமையான கோவில் ஆகும்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி, காலை 12.10 மணிக்கு விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாள் கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 12.55 மணிக்கு துணியில் ரிஷப வாகனம் வரையப்பட்ட கொடியினை மேளதாளங்கள் முழங்க, கோவில் குருக்கள் கொடி மரத்தில் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு கேடயத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.இன்று (சனிக்கிழமை) இரவு சேஷ வாகனத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு கிளி வாகனத்திலும், 17-ந்தேதி இரவு காமதேனு வாகனத்திலும், 18-ந்தேதி ரிஷப வாகனத்திலும், 19-ந்தேதி அன்ன வாகனத்திலும், 20-ந்தேதி யாளி வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 21-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சாமி எழுந்தருளுகிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 23-ந்தேதி நடராஜர் புறப்பாடும், 24-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் லட்சுமணன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 19-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29-ந் தேதி வரை விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.

    இதை முன்னிட்டு கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமரம் மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. கொடியேற்ற பூஜைகளை உதயகுமார், சிவமணி உள்ளிட்ட குருக்கள் செய்தனர்.

    நேற்று இரவு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை அம்பாள் தங்க பல்லக்கில் வீதி உலாவும், இரவு தங்க காமதேனு வாகனத்திலும் வீதி உலாவும் நடைபெறுகிறது. 17-ந் தேதி ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 21-ந் தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியாக அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    விழாவின் 11-ம் திருநாளான 23-ந் தேதி தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 24-ந் தேதி இரவு 7:30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக ராமநாதசாமி-பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. 29-ந் தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் தங்ககேடயத்தில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகிறது.

    • விழா நாட்களில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
    • தேரோட்டத்ததையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந்ஆதிநாராயண சுவாமி கோவிலில் ஆனிமாத தேரோட்டத் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. திருவிழாவின் 8-ம் நாளான கடந்த 7-ந் தேதி பரிவேட்டை விழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 11-ம் நாளான நேற்று நடந்தது.

    இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அய்யா நாராயணசுவாமி தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் இலவசமாக மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி தேர் நிலைக்கு வந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • அன்னதானம் வழங்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளன்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டார். பின்னர் அங்குள்ள பால் கிணற்றின் அருகே மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயணசுவாமி பரிவேட்டையாடினார்.

    இதன் அடையாளமாக கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் அம்பு எய்தினார். அதன் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    • இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும்.

    நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சிங்காராவேலவரை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதில் கந்தசஷ்டி விழா தேரோட்டமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும். விழாவின் 5-ம் நாள் தேரோட்டம் நடக்கும். அன்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளுவார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்படும்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வர். நான்கு வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை வந்தடையும். தேர் அசைந்தாடி வரும் காட்சி பிரமிப்பாக இருக்கும்.தேரோட்டத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சிக்கல் கிராமத்தில் குவிவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டும் கந்தசஷ்டி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்று சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • இரவு 8 மணியளவில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் சுவாமி என்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி காலை 7.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மையப்பன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தேர் அலங்கார மண்டகப்படிதாரர் எஸ்.தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினர் சார்பில், தேர் வடம் தொடுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மதியம் 1.50 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து 5 மணி அளவில் நிலையம் வந்தடைந்து.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 250 போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் செய்திருந்தனர்.

    10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி அளவில் இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் தெப்ப திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் முருகன் ஆலோசனையின் பேரில், கோவில் நிர்வாக அலுவலர் கார்த்திசெல்வி மற்றும் உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    • புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
    • 6-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் 12 நாட்கள் விழா முடிவடைகிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தது. கடந்த 29-ந்தேதி நாச்சியார் திருக்கோலம், ஊஞ்சல் சேவை, 30-ந்தேதி யானை வாகனம், நேற்று முன்தினம் சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனமும், நேற்று வேடுபறி உற்சவமும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்ட வாகன தேரில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து பக்தர்கள் தேரை இழுத்து செல்வார்கள். இதை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளார்கள்.

    அதன்பிறகு கோபுர வாசலில் தீர்த்தவாரி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) திருமஞ்சனமும், மாலையில் துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம், துவஜா அவரோஹணம், பூர்ணாகுதி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 6-ந்தேதி (வியாழக்கிழமை) காலையில் திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் 12 நாட்கள் விழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ராகு தோஷ நிவர்த்தி தலமாக இக்கோவில் விளங்குகிறது.
    • இன்று இரவு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாகூரில் உள்ள திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாதசாமி கோவில், மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகவும். மேலும் 6 மங்கலங்களும் பொருந்திய தலமாகவும், ராகு தோஷ நிவர்த்தி தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அன்னவாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணம், ஓலை சப்பரத்தில் ரிஷப வாகன பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கைலாச வாகனத்தில் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் தேரில் எழுந்தருளியிருந்த தியாகேசப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னா் தேரோட்டம் நடந்தது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற துணை தலைவர் செந்தில்குமார், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் அசோக்ராஜா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) நடராஜர் புறப்பாடு தீர்த்தம் கொடுத்தல், பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு தீர்த்தம் கொடுத்தல், இரவு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    ×