search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Test Series"

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டித் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்குகிறது. #ENGvIND #TestSeries
    பர்மிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டித் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை (1-ந்தேதி) தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி சாதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    2007-ம் ஆண்டுக்கு பிறகு 2 முறை ஆடிய டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது. இதனால் இந்த முறை விராட்கோலியின் படை இங்கிலாந்து மண்ணில் ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடும்.

    11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு கேப்டன் கோலிக்கு கடும் சவாலாக இருக்கும்.

    தவான், புஜாரா மோசமான நிலையில் இருப்பது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தும். கோலி, முரளிவிஜய், ரகானே, ராகுல் ஆகியோரது பேட்டிங்கை பொறுத்து அணியின் நிலை இருக்கிறது.

    தொடக்க வீரர் வரிசையில் இருந்து தவான் கழற்றிவிடப்படலாம். முரளிவிஜய்யும், ராகுலும் தொடக்க வீரராக ஆடலாம்.

    இதேபோல விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக், ரிசப் பாண்ட் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம். தினேஷ்கார்த்திக் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடினார். மேலும் அனுபவம் வாய்ந்தவர். இதனால் அவருக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது.

    வேகப்பந்து வீரர் புவனேஸ்வர்குமார் ஆடாதது பாதிப்பே. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உடல் தகுதியுடன் இல்லை. இதனால் உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, முகமது‌ஷமி ஆகியோர் இடம் பெறுவார்கள்.

    சுழற்பந்து வீரர் தேர்வு தலைவலியை ஏற்படுத்தும். அஸ்வின், ஜடேஜா, குல்தீப்யாதவ் ஆகியோரில் இருவர் இடம் பெறுவார்கள். குல்தீப்யாதவ் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார் என்பதால் அவர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஜடேஜா நீக்கப்படலாம்.

    இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் நெருக்கடி கொடுக்கலாம். அவர் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர் ஆவார். 540 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதேபோல ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் போன்ற பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

    பேட்டிங்கில் கேப்டன் ஜோரூட், கூக், பட்லர், பேர்ஸ்டோவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக இருக்கும்.

    டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), முரளிவிஜய், தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, முகமது ‌ஷமி, குல்தீப்யாதவ், ‌ஷர்துல் தாகூர், பும்ரா.

    ஜோரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், மோயின் அலி, ஜோஸ் பட்லர், ஸ்டூவரட் பிராட், பென் ஸ்ரோக்ஸ், ஆதில் ரஷீத், ஜானி பேர்ஸ்டோவ், கூக், கீட்டன் ஜென்னிங்ஸ், சாம் குர்ரன், டேவிட் மலன், ஜேமி போர்ட்டர். #ENGvIND #INDvENG #TestSeries
    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் வடேகர், கபில்தேவ், டிராவிடுடன், விராட் கோலியும் இணைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvENG #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்து மண்ணில் இந்தியா 3 முறை மட்டுமே டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 1971-ம் ஆண்டு (1-0) அஜித் வடேகர் தலைமையிலும், 1986-ம் ஆண்டு (2-0) கபில்தேவ் தலைமையிலும், 2007-ம் ஆண்டு (0-1) டிராவிட் தலைமையிலும் கைப்பற்றி இருந்தது. இவர்களோடு விராட் கோலியும் இணைவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.



    இரு அணிகளும் நாளை மோதுவது 118-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 117 போட்டியில் இந்தியா 25 டெஸ்டிலும், இங்கிலாந்து 43 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 49 போட்டி ‘டிரா’ ஆனது. #INDvENG #ENGvIND #ViratKohli
    டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என அஸ்வின் கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்குகிறது.

    இதில் முதல் 3 போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று உள்ளனர். பொதுவாக இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாகவே இருக்கும்.

    இதனால் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவது சந்தேகம்தான். 3 பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யார் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    இங்கிலாந்து அற்புதமாக இடம். அங்கு சென்று விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் நல்ல அணியாக இருக்கிறோம். என்னை பொறுத்தவரை அங்கு சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நாம் செயல்படுவதுதான் முக்கியம்.

    நீண்ட டெஸ்ட் தொடரில் உத்வேகத்தை தொடர்ந்து காட்டுவது மிக முக்கியம். அதை செய்து காட்டி விட்டால் நல்ல பயன் அளிக்கும். நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
    பார்படாஸ் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WIvSL #SLvWI #BarbadosTest

    பார்படாஸ்:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாஸ் நகரில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 69.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. வெஸ்ட் இண்டீசின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி திணறியது. இதனால் அந்த அணி 154 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

    இதன்மூலம் 50 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினால் வெஸ்ட் இண்டீஸ் அணி 31.2 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்து 93 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கெமார் ரோச் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி பந்துவீச்சில் சுரங்கா லக்மல், கசுன் ரஜிதா அகியோர் தலா 3 விக்கெட்களும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனுஷ்கா குணதிலகா, மகிலா உடவட்டே ஆகியோர் களமிறங்கினர். மகிலா டக்-அவுட் ஆனார். அதன்பின் தனஞ்ஜெயா டி சில்வா களமிறங்கினார். குணதிலகா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் டி சில்வாவும் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.



    அதன்பின் களமிறங்கிய ரோஷன் சில்வா 1 ரன்னிலும், நிரோஷன் டிக்வெல்லா 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதனாமாக விளையாடிய குசால் மெண்டிஸ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டை தவிற அடுத்த ஐந்து விக்கெட்களையும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 81 ரன்களுக்கு ஆறு விக்கெட்களை இழந்தது. 

    அதைத்தொடர்ந்து தில்ருவான் பெரேரா, குசால் பெரேரா ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இறுதியில் இலங்கை அணி 40.2 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தில்ருவான் பெரேரா 23(68), குசால் பெரேரா 28(43) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற செய்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஹோல்டர் 5 விக்கெட் வீழ்த்தினார். 



    இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகன் விருதும், ஷேன் டவ்ரிச் தொடர்நாயகன் விருதும் வென்றனர். #WIvSL #SLvWI #BarbadosTest
    பார்படாசில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு சுருண்டது. #WIvsSL #TestSeries
    பார்படாஸ்:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முன்னணி ஆட்டக்காரர்கள் சொதப்பியதால் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் சிறிது தடைபட்டது.

    அதன்பின் ஜோடி சேர்ந்த ஷேன் டாவ்ரிச் மற்றும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி 115 ரன்கள் சேர்த்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை கடந்தது. ஷேன் டாவ்ரிச் 71 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 74 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 69.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டும். கசின் ரஜிதா 3 விக்கெட்டும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. வெஸ்ட் இண்டீசின் சிறப்பான ப்ந்து வீச்சால் இலங்கை அணி திணறியது.



    அந்த அணியின் நிரோஷன் டிக்வெலா 42 ரன்களும், குணதிலகா 29 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் இலங்கை அணி 59 ஒவர்களில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டும், ஷனோன் காப்ரியல் 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஆனால் இலங்கை அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர்.

    இதனால் முதலில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது. 56 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கடைசி வரிசை பேட்ஸ்மேனான கீம்ர் ரோச் ஓரளவு தாக்குப்பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 28.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

    இத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது. எனவே இந்த டெஸ்டில் இலங்கை அணி எளிதில் வெற்றி பெறும் என தெரிகிறது. #WIvsSL #TestSeries
    இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #WIvsSL #TestSeries
    பார்படாஸ்:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் களமிறங்கினர். இலங்கை அணியினரின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் விரைவில் அவுட்டாகினர்.

    பிராத்வைட் 2 ரன்னிலும், ஸ்மித் 2 ரன்னிலும் பாவெல் 4 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ஹோப் 11 ரன்னிலும், ரோஸ்டன்சேஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.

    வெஸ்ட் அணி 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.



    மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஷேன் டாவ்ரிச் மற்றும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி 115 ரன்கள் சேர்த்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை கடந்தது. ஷேன் டாவ்ரிச் 71 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 74 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 69.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டும். கசின் ரஜிதா 3 விக்கெட்டும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது. #WIvsSL #TestSeries
    இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் திணறி வருகின்றனர். மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. #WIvsSL #TestSeries
    பார்படாஸ்:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் களமிறங்கினர். இலங்கை அணியினரின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் விரைவில் அவுட்டாகினர்.

    பிராத்வைட் 2 ரன்னிலும், ஸ்மித் 2 ரன்னிலும் பாவெல் 4 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ஹோப் 11 ரன்னிலும், ரோஸ்டன்சேஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது அணியின் எண்ணிக்கை5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.

    வெஸ்ட் அணி 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஷேன் டாவ்ரிச் 36 ரன்களும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 16 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். 

    இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல், கச்ன் ரஜிதா ஆகியொர் 2 விக்கெட்டும், லஹிரு குமரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். #WIvsSL #TestSeries
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக இலங்கை அணி கேப்டன் சண்டிமல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஐசிசி நிராகரித்துள்ளது. #DineshChandimal #BallTampering #ICC

    பார்படோஸ்:

    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது.

    2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டத்திற்கு இலங்கை வீரர்கள் களம் இறங்க தயாராக இருந்த நிலையில், போட்டி நடுவர்கள் இலங்கை நிர்வாகத்திடம் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி (கேப்டன் சண்டிமல்) பந்தை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேறு பந்துடன் நீங்கள் பந்து வீச வேண்டும் என்று கூறினார்கள்.

    இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் களம் இறங்க மறுத்துவிட்டனர்.



    சுமார் ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை வீரர்கள் களம் இறங்கினார்கள். சண்டிமல் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக போட்டி நடுவர் அவருக்கு 100 சதவிகித அபாரத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தார். இதை எதிர்த்து சண்டிமல் மேல்முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்த மைக்கேல் பெலோஃப்-ஐ ஐசிசி அறிவித்தது.

    இந்நிலையில், சண்டிமலின் மேல்முறையீட்டை மைக்கேல் பெலோஃப் நிராகரித்துள்ளார். சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பின்னர் இதை அவர் தெரிவித்தார். இதனால் இன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இன்றைய போட்டியில் சண்டிமலுக்கு பதிலாக சுரங்கா லக்மல் கேப்டனாக களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாவது போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின்போது சுமார் ஒன்றரை மணிநேரம் தாமதமாக களமிறங்கியதற்காக சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் மீது  குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #DineshChandimal #BallTampering #ICC
    வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய இலங்கை அணி கேப்டன் தினேஷ் சந்திமல் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.

    இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி கேப்டன் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். 



    விசாரணையின் முடிவில் சந்திமல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக விளையாடப்பட உள்ளது.

    மேலும் போட்டிக்கான மொத்த ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே தென்னாப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering
    செய்ண்ட் லூசியா நகரில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. #WIvSL #SLvWI

    செய்ண்ட் லூசியா:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் சந்திமால் 119 ரன்கள், குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் 5 விக்கெட்களும், கெமார் ரோச் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். 


    13 விக்கெட்கள் வீழ்த்திய ஷனான் கேப்ரியல்
     
    இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்மித் 61 ரன், டவ்ரிச் 55 ரன், சேஸ் 41 ரன் எடுத்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் லஹிரு குமாரா 4 விக்கெட்களும், கசுன் ரஜிதா 3 விக்கெட்களும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 47 ரன்கள் முன்னிலை பெற்றது. 

    இதையடுத்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 89 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்திருந்தது. அகிலா தனஞ்ஜெயா 16 ரன்களுடனும், சுரங்கா லக்மல் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 342 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்கள் வீழ்த்தினார். கெமார் ரோச் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 296 ரன்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயித்தது. 



    இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிரத்வெய்ட், தெவான் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். ஸ்மித் 1 ரன்னிலும், அதன்பின் வந்த கெய்ரான் பவல் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ரஜிதா வீசிய 3-வது ஓவரில் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து பிரத்வெய்ட் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். 

    ஷாய் ஹோப் 115 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ரோஸ்டன் சேஸ் 13 ரன்களில் கிளீன் போல்டானர். இந்த இரண்டு விக்கெட்களையும் சுரங்கா லக்மல் எடுத்தார். பிரத்வெய்ட் ஆட்டமிழக்காமல் இருக்க, எதிர்முனையில் வந்த ஷான் டவ்ரிச் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினர்.



    அப்போது மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்திற்கு பின் ஆட்டம் தொடங்கியது. அதன்பின் மீண்டும் குறைந்த வெளிச்சம் காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. பிரத்வெய்ட் 59 ரன்களுடனும், ஹோல்டர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் இந்த ஆட்டம் டிரா ஆனது. இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்கள் வீழ்த்திய வெஸ்ட்இண்டீஸ் அணியின் ஷனான் கேப்ரியல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    அடுத்த போட்டி, பார்படோசில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்க உள்ளது. #WIvSL #SLvWI
    வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. #WIvSL #SLvWI

    செய்ண்ட் லூசியா:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் சந்திமால் 119 ரன்கள், குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் 5 விக்கெட்களும், கெமார் ரோச் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். 

    இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 53 ரன்களுடனும், ஹோப் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெட்ஸ்இண்டீஸ் அணி 300 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்மித் 61 ரன், டவ்ரிச் 55 ரன், சேஸ் 41 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் லஹிரு குமாரா 4 விக்கெட்களும், கசுன் ரஜிதா 3 விக்கெட்களும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 47 ரன்கள் முன்னிலை பெற்றது. 



    இதையடுத்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் பெரேரா, மஹிலா உடவாட்டே ஆகியோர் களமிறங்கினர். பெரேரா 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கசுன் ரஜிதா களமிறங்கினார். இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. மஹிலா உடவாட்டே 11 ரன்களுடனும், ரஜிதா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 

    நேற்று இலங்கை அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. மஹிலா உடவாட்டே 19 ரன்னிலும், ரஜிதா டக்-அவுட்டும் ஆகினர். அதன்பின் வந்த தனஞ்ஜெயா டி சில்வா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து குசால் மெண்டிஸ், தினேஷ் சந்திமல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சந்திமல் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் மெண்டிஸ் உடன் ரோஷன் சில்வா ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். அரைசதம் அடித்த மெண்டிஸ் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஷன் 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த நிரோஷன் டிக்வெல்லா 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 89 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 287 ரன்கள் முன்னிலை பெற்றது. அகிலா தனஞ்ஜெயா 16 ரன்களுடனும், சுரங்கா லக்மல் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் 6 விக்கெட்டும், கெமார் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #WIvSL #SLvWI
    வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. #WIvSL #SLvWI

    செய்ண்ட் லூசியா:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் சந்திமால் 119 ரன்கள், குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் 5 விக்கெட்களும், கெமார் ரோச் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். 

    இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 53 ரன்களுடனும், ஹோப் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.



    இந்நிலையில், நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஹோப் 19 ரன்னிலும், ஸ்மித் 61 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ரோஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரிச் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். டவ்ரிச் அரைசதம் கடந்தார். சேஸ் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    அரைசதம் அடித்த டவ்ரிச் 55 ரன்களில் அவுட் ஆனார். இதுதவிர ஜேசன் ஹோல்டர் 15 ரன்களும், கெமார் ரோச் 13 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்க தவறினர். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 100.3 ஓவரில் 300 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி பந்துவீச்சில் லஹிரு குமாரா 4 விக்கெட்களும், கசுன் ரஜிதா 3 விக்கெட்களும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 47 ரன்கள் முன்னிலை பெற்றது. 

    இதையடுத்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் பெரேரா, மஹிலா உடவாட்டே ஆகியோர் களமிறங்கினர். பெரேரா 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கசுன் ரஜிதா களமிறங்கினார். இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.  

    மஹிலா உடவாட்டே 11 ரன்களுடனும், ரஜிதா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஷனால் கேப்ரியல் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் இன்னும் 13 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. #WIvSL #SLvWI
    ×