search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple robbery"

    மதுரை அருகே கோவில் உண்டியலில் பணம் திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் யோகேஸ்வரன். இவர் அங்குள்ள மந்தையம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

    நேற்று பூஜையை முடித்துவிட்டு கோவிலை அவர் பூட்டிச் சென்றார். அதன் பிறகு யாரோ உள்ளே நுழைந்து அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஊமச்சிக் குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொடிக்குளத்தைச் சேர்ந்த பிச்சை (வயது 17), கண்ணன் (17), மச்சக்காளை, விஜயன் ஆகியோர் இதில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிச்சை மற்றும் கண்ணனை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    ஆம்பூர் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் பணத்தை திருடி சென்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது. அதன் அருகிலேயே 9-வது தெருவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து முருகர் கோவில் கட்டினர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு முருகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    5 நாட்களுக்க முன்பு தான் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவில்லை.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி அருகே 2 கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி டவுன் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம தேவதை என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

    நகரில் போக்குவரத்து மிகுந்த இப்பகுதியில் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கோவில் மதில் சுவர் உள்ளே புகுந்து அங்குள்ள உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்து ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    அதேபோல் மும்மனி முத்து நகரில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து ஆயிரத்துக்கும் அதிகமான காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இரண்டு இடங்களுக்கும் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பொன்னேரி அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே கல்லூர் கிராமம் உள்ளது. இங்கு இருக்கும் காளி அம்மன் கோவிலில் கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள். நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூட்டப்பட்டது.

    இன்று காலை, கோவிலுக்கு சாமி கும்பிட சிலர் சென்றனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது.

    கோவில் இருந்த குத்து விளக்கு, வெள்ளி பூஜை பொருட்கள், பட்டுப் புடவைகள், ஆம்ளிப்பர், ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    திருவையாறில் விநாயகர் கோவிலில் உற்சவர் சிலை மற்றும் கலசம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு ஸ்ரீராம் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் கோவிலில் கோபுர கலசங்களை எடுத்து தனியாக கோவிலுக்குள் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோவில் குருக்கள் , பூஜை செய்ய வந்தார். அப்போது கோவிலில் இருந்த 2½ அடி உயர வெண்கல உற்சவர் சிலை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவிலில் இருந்த கலசமும் கொள்ளை போய் இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் உடைக்க முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து உற்சவர் சிலை மற்றும் கலசத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் பற்றி திருவையாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    உற்சவர் சிலை மற்றும கலசம் ஆகியவை கொள்ளை போய் இருப்பதால் சிலைகள் கடத்தல் கும்பலின் கைவரிசையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளிடம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த மகேந்திரபள்ளி ஊராட்சி வெட்டாற்றங்கரையில் காத்தாயி அம்மன்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வழக்கம் போல் பூஜை முடிந்ததும், இரவு பூஜாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நள்ளிரவு மர்மநபர்கள் கோவில் மதில் சுவர் வழியாக ஏறிகுதித்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலிலும் மர்ம நபர்கள் புகுந்து நேற்று இரவு உண்டியல் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். இரண்டு கோவில்களிலும் ரூ.50 ஆயிரம் வரை பணம் திருட்டு போய் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரிலும் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாப்பம்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ளது பாப்பம்பட்டி. இங்குள்ள ஜானகி நகரில் உள்ளது விநாயகர் கோவில். நேற்று இரவு பூஜைகளை முடித்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை சிறப்பு வழிப்பாட்டுக்காக பக்தர்கள் மற்றும் பூசாரி கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலில் இருந்த வேலால் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உண்டியலை பார்த்தபோது அதில் இருந்த காணிக்கை பணம் அனைத்தும் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும், இந்த ஆண்டு சுற்றுச்சுவர் கட்ட உண்டியல் திறப்படாமல் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர். அதில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் காணிக்கை இருந்திருக்கும் என்று கூறினார்.

    சேத்துப்பட்டு அருகே அம்மன் கோவில் உண்டியல் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே உள்ள கரிப்பூர் கிராமம் எல்லையில் அமைந்துள்ளது கருமாரியம்மன் கோவில். இந்த கோவில் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலில் வைக்கட்டிருந்த உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் கோவிலின் உண்டிலை உடைத்து அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு உண்டியலை கோவில் அருகே வீசி சென்றுவிட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் கோவில் உண்டியல் உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையர்கள் குறித்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

    பாளையில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை கோட்டூர் ரோட்டில் உச்சினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கோவில் கொடை விழா நடந்து முடிந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டதோடு, காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்தியிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு கோவிலில் வழிபாடு முடித்து அனைவரும் சென்று விட்டனர். நள்ளிரவு யாரோ மர்ம நபர் அங்கு வந்துள்ளான். கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அவன் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றான்.

    கொடை விழா முடிந்ததால் உண்டியலில் ஆயிரக் கணக்கில் பணம் சேர்ந்திருக்கும் என தெரிகிறது. அதை மர்ம நபர் அள்ளி சென்றான். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் முன்பக்க கதவும், உண்டியலும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தார்கள். கொள்ளை நடந்த கோவில் அருகே கண்காணிப்பு கேமிராக்கள் ஏதும் உள்ளதா? அதில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் 3 உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு சவுந்தர ராஜபெருமாள் கோவிலில் வருடம் முழுவதும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இக்கோவிலில் பரிகார மூர்த்தியாக விளங்கும் சொர்ண ஆகர்சன பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் நடக்கும் வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

    இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோவிலில் நாள் தோறும் அன்னதானமும் நடந்து வருகிறது. நேற்று ஆடி பூரம் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு வரை பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இன்று காலையில் அர்ச்சகர்கள் கோவிலுக்கு வந்தபோது 3 உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதில் இருந்த நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. கோவிலில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமிராவை வைத்து பதிவான வீடியோவை போலீசார் பார்த்தனர்.

    முகமூடி அணிந்த வாலிபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து கேமிராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுவரை இல்லாத சம்பவமாக தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் கொள்ளை நடந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி செக்காரகுடியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள பண்டாரசாமி கோவிலில் பூசாரியாக உள்ளார். நேற்று இவர் வழக்கம்போல் இரவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ. 10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த மணி உள்ளிட்ட பொருட்களும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அய்யப்பன் தட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பாப்பாஞ்சாவடியில் முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து முருங்கப்பாக்கம் வழியாக வில்லியனூர் செல்லும் சாலையில் உள்ள பாப்பாஞ்சாவடி மெயின் ரோட்டில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜையை முடித்து விட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

    இன்று காலை வழக்கம் போல் பூசாரி பூஜை செய்ய வந்த போது, கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கோவில் அமைந்துள்ள இடம் எப்போதும் வாகன போக்குவரத்து உள்ளதாகும். அப்படி இருக்க மர்ம நபர்கள் துணிகரமாக கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுவரை 8 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை நடந்துள்ளது போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், தேங்காய்திட்டு, பாப்பாஞ்சாவடி என ஒரு பகுதியையொட்டி உள்ள கோவில்களில் மட்டுமே உண்டியல் கொள்ளை நடந்துள்ளதால் இதில், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    ×