search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi temple robbery"

    தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி செக்காரகுடியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள பண்டாரசாமி கோவிலில் பூசாரியாக உள்ளார். நேற்று இவர் வழக்கம்போல் இரவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ. 10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த மணி உள்ளிட்ட பொருட்களும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அய்யப்பன் தட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×