search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple robbery"

    • மதுரை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு மர்ம மனிதர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியல்களை உடைத்து வெளியே தூக்கிச்சென்று பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப் இன்ஸ்பெக்டர் ஜெயா கஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கேமரா, எச்சரிக்கை மணி உடைக்கப்பட்டிருந்தன.
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 25-ந் தேதி இரவு பூஜைகளை முடித்து விட்டு கோவிலை அர்ச்சகர் பூட்டி கொண்டு சென்றுவிட் டார். நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க அர்ச்சகர் சென்றார்.

    அப்போது கோவிலில் பூட்டு, மூலவர் சன்னதி எதிரில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. பணம் எதுவும் திருட்டுப்போக வில்லை. கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை மணி ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன.கோவில் பூஜை அறையில் உள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஏகவள்ளி வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் செல்வி சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தார்.

    காரிமங்கலம் அருகே நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் ஒன்றியம் பேகாரஅள்ளியில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த மாதம் 17-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் தர்மபுரியை சேர்ந்த சபரி (வயது 40) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை கிராமமக்கள் கோவில் வழியாக சென்றனர். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கும்பாபிஷேகம் நடந்தவுடன் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. உண்டியலில் பல லட்சம் ரூபாய் இருந்து இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டு மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காரிமங்கலம் பகுதியில் மர்ம ஆசாமிகள் கோவில்களை குறி வைத்து தொடர்ந்து நகை, உண்டியல் பணத்தை திருடிச்செல்லும் துணிகர சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    நெற்குப்பை அருகே 2 கோவில்களில் உண்டியல்களை மர்ம மனிதர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை அருகே உள்ளது பரியாமருதுபட்டி. இங்கு புகழ் பெற்ற சேவுகமூர்த்தி ஆலயம் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார மக்கள் தினமும் வந்து காணிக்கை செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுவருடன் கூடிய உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து நெற்குப்பை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் வினோத், தனி பிரிவு போலீஸ்காரர் சரவணன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் கோவிலில் உடைத்து எடுக்கப்பட்ட உண்டியல் அருகே உள்ள கண்மாய்க்கரையில் கிடப்பது தெரியவந்தது.

    யாரோ மர்ம மனிதர்கள் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து கோவிலுக்குள் வந்துள்ளனர். அவர்கள் உண்டியலை பெயர்த்து எடுத்து வெளியே கொண்டு சென்று பணத்தை எடுத்து விட்டு கண்மாய்க்கரையில் உண்டியலை வீசிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இது குறித்து கோவில் தர்மகர்த்தா ஜெய்கணேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே அந்தப் பகுதியில் உள்ள நம்பர் பிள்ளையார் கோவிலிலும் உண்டியல் திருடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு அருகே அய்யனார்கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூரில் ஏரிக்கரை கூத்தபெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறும். இக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைப் பணத்தை திருவிழாவின்போது திறந்து எடுப்பது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி சென்றுவிட்டார். நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த ரூபாய் ஒருலட்சத்தை டவுசர் பொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடக்கூரில் கடந்த சில நாட்களாக டவுசர் கொள்ளையர்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி இவர் திருப்பூரில் ரெடிமேடு ஆடைகள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வனிதா இரவு வீட்டில் படுத்திருந்தபோது மர்மநபர் ஜன்னல் வழியாக அவர் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்து சென்றுவிட்டார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசி மற்றொரு வீட்டிலும், நர்சிடமும் டவுசர் கொள்ளையர்கள் நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் தொடர் திருட்டு நடந்து வருவதால் கொள்ளையர்களை போலீசார் கைது செய்து நகைகளை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரவாயலில் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

    போரூர்:

    மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயின்ட் அந்தோணி தேவாலயம் உள்ளது. இங்கு பாதிரியாராக ஏசுராஜ் உள்ளார். நேற்று இரவு பிரார்த்தனை முடிந்ததும் தேவாலயத்தின் கதவுகளை மூடிவிட்டு பாதிரியார் ஏசுராஜ், அருகே உள்ள தனது அறைக்கு சென்றார்.

    இந்தநிலையில் அதிகாலை 2 மணி அளவில் தேவாலயத்தின் உள்ளே இருந்து சத்தம் கேட்டு ஏசுராஜ் சென்றார். அப்போது அங்கிருந்த மர்ம வாலிபர் தப்பி ஓட்டம் பிடித்தார். தேவாலய கதவு பூட்டை உடைத்து புகுந்த கொள்ளையன் அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது.

    புதுக்கடை அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கடை:

    புதுக்கடையை அடுத்த செட்டியார் வளாகம் பணங்கால முக்கு பகுதியில் முத்தாரம்மன் கோவில், பத்தி ரேஷ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று கோவிலில் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் நடை சாத்தப்பட்டது. பின்னர் மறுநாள் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு நிர்வாகி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் சம்பவம் குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கோவில் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் மதிப்புள்ள 4 தங்க தாலிகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் அம்மன் சன்னதி ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையனின் ஒரு கைரேகை சிக்கியது.

    போலீசார் இந்த கைரேகையை கொண்டு பழைய குற்றவாளின் கைரேகைகளை ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

    சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளனவா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
    மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது53). இவர் அனுப்பானடி பஸ் நிலைய பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். ஜெயக்குமார் நேற்று காலை அதே பகுதியில் நடந்து சென்றார். அப்போது அம்பேத்கார் தெருவைச் சேர்ந்த போஸ் மகன் பிரவீன்குமார் (வயது20), தெய்வக்கனி தெருவைச் சேர்ந்த மச்சக்காளை மகன் மதியழகன் (21) ஆகியோர் மது குடிக்க பணம் தருமாறு ஜெயக்குமாரிடம் கேட்டனர். அவர் தரமறுக்கவே 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார், மதியழகனை கைது செய்தனர்.

    சிம்மக்கல் முத்து இருளாண்டி தெருவைச் சேர்ந்தவர் கோபி (34). இவர் நேற்று மதியம் கூடல்நகர்- பாலமேடு மெயின்ரோட்டில் நடந்து சென்றார். அப்போது கே.புதூர் சிங்காரவேலர் தெருவைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். கோபி இல்லை என கூறவே கொலை மிரட்டல் விடுத்து ரமேஷ்குமார் தப்பினார்.

    இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர்.

    எஸ்.எஸ்.காலனி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (37). டாக்டரான இவர் நேற்று மதியம் வீட்டு முன்பு செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென்று அருண் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினார். அதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    மதுரை நகரில் நாள் தோறும் இதுபோன்று வழிப்பறிகள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. ஆனால் போலீசார் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்களால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் வெளியில் நடமாடவே அச்சம் அடைந்துள்ளனர்.

    திருக்கனூரில் 2 கோவில்களில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர்- மண்ணாடிப்பட்டு மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஆத்மலிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சாமிதரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது போல் திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு தேவனாத பெருமாள் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல் பணத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    திருக்கனூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆண்டிப்பட்டி அருகே கோவிலில் சோலார் பேனல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு கண்டமனூர் சாலையில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலை கடமலைக்குண்டுவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் பராமரித்து இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் கதவை மூடிச் சென்றார். மறு நாள் காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த சோலார் பேனல் திருடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வரு‌ஷநாடு அருகே உள்ள தும்மக் குண்டுவைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 22), விக்னேஷ் (24) ஆகியோர் சோலார் பேனலை திருடியது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சோலார் பேனலையும் பறிமுதல் செய்தனர்.

    மெஞ்ஞானபுரம் அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ளது நங்கைமொழி கிராமம். இங்கு மந்திரமூர்த்தி என்ற இரட்டை சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை மேலராமசாமியாபுரத்தைச் சேர்ந்த தங்கவேல்(76) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த கோவில் பூசாரி உலகுபிள்ளை சம்பவத்தன்று வழக்கம் போல் இரவு 7மணிக்கு பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்று விட்டார். மறுநாள் காலையில் பூஜை செய்ய கோவிலை திறக்க சென்றபோது கோவில் கேட் உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி தங்கவேல் மெஞ்ஞானபுரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கொள்ளை சம்பவம் மூன்றாவது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆரணியில் விநாயகர் கோவில் உண்டியல் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி பாச்சா உடையார் தெருவில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு கோவில் வாளாகத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு கோவில் பூசாரி சுப்பிரமணியம் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டிச் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பூசாரி சுப்பிரமணியம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×