search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கனூரில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை
    X

    திருக்கனூரில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை

    திருக்கனூரில் 2 கோவில்களில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர்- மண்ணாடிப்பட்டு மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஆத்மலிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சாமிதரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது போல் திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு தேவனாத பெருமாள் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல் பணத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    திருக்கனூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×