search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே அய்யனார்கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை
    X

    ஒரத்தநாடு அருகே அய்யனார்கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

    ஒரத்தநாடு அருகே அய்யனார்கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூரில் ஏரிக்கரை கூத்தபெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறும். இக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைப் பணத்தை திருவிழாவின்போது திறந்து எடுப்பது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி சென்றுவிட்டார். நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த ரூபாய் ஒருலட்சத்தை டவுசர் பொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடக்கூரில் கடந்த சில நாட்களாக டவுசர் கொள்ளையர்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி இவர் திருப்பூரில் ரெடிமேடு ஆடைகள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வனிதா இரவு வீட்டில் படுத்திருந்தபோது மர்மநபர் ஜன்னல் வழியாக அவர் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்து சென்றுவிட்டார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசி மற்றொரு வீட்டிலும், நர்சிடமும் டவுசர் கொள்ளையர்கள் நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் தொடர் திருட்டு நடந்து வருவதால் கொள்ளையர்களை போலீசார் கைது செய்து நகைகளை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×