search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரவாயலில் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை
    X

    மதுரவாயலில் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை

    மதுரவாயலில் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

    போரூர்:

    மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயின்ட் அந்தோணி தேவாலயம் உள்ளது. இங்கு பாதிரியாராக ஏசுராஜ் உள்ளார். நேற்று இரவு பிரார்த்தனை முடிந்ததும் தேவாலயத்தின் கதவுகளை மூடிவிட்டு பாதிரியார் ஏசுராஜ், அருகே உள்ள தனது அறைக்கு சென்றார்.

    இந்தநிலையில் அதிகாலை 2 மணி அளவில் தேவாலயத்தின் உள்ளே இருந்து சத்தம் கேட்டு ஏசுராஜ் சென்றார். அப்போது அங்கிருந்த மர்ம வாலிபர் தப்பி ஓட்டம் பிடித்தார். தேவாலய கதவு பூட்டை உடைத்து புகுந்த கொள்ளையன் அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது.

    Next Story
    ×