என் மலர்tooltip icon

    செய்திகள்

    வந்தவாசி அருகே 2 கோவில்களில் கொள்ளை
    X

    வந்தவாசி அருகே 2 கோவில்களில் கொள்ளை

    வந்தவாசி அருகே 2 கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி டவுன் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம தேவதை என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

    நகரில் போக்குவரத்து மிகுந்த இப்பகுதியில் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கோவில் மதில் சுவர் உள்ளே புகுந்து அங்குள்ள உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்து ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    அதேபோல் மும்மனி முத்து நகரில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து ஆயிரத்துக்கும் அதிகமான காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இரண்டு இடங்களுக்கும் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    Next Story
    ×