என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pappanchavadi"
புதுச்சேரி:
புதுவையில் இருந்து முருங்கப்பாக்கம் வழியாக வில்லியனூர் செல்லும் சாலையில் உள்ள பாப்பாஞ்சாவடி மெயின் ரோட்டில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜையை முடித்து விட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
இன்று காலை வழக்கம் போல் பூசாரி பூஜை செய்ய வந்த போது, கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கோவில் அமைந்துள்ள இடம் எப்போதும் வாகன போக்குவரத்து உள்ளதாகும். அப்படி இருக்க மர்ம நபர்கள் துணிகரமாக கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுவரை 8 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை நடந்துள்ளது போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், தேங்காய்திட்டு, பாப்பாஞ்சாவடி என ஒரு பகுதியையொட்டி உள்ள கோவில்களில் மட்டுமே உண்டியல் கொள்ளை நடந்துள்ளதால் இதில், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்