search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள்"

    • மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
    • அடுத்த 10 ஆண்டுகளில் வனம், மரங்களின் பரப்பளவை 23.8 சதவீதம் முதல் 33 சதவீதமாக உயர்த்த முடிவு

    கோவை,

    கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 12.58 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

    பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்துப் பேசியதாவது: முதல்வரின் சிறப்புத் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் வனம், மரங்களின் பரப்பளவை 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

    அதன்படி, வனப் பகுதிகளில் காடு வளர்ப்பு, வனப் பகுதிகளுக்கு வெளியே மரம் நடுதல், விவ சாய நிலங்களில் விவசாய பயிர்களோடு வருமான வாய்ப்புகளை அதிகரிக்க மரம் வளர்த்தல், சமூக, பொது, தனியார் பங்க ளிப்போடு வளர்ந்து வரும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் பசுமை தமிழகம் ஆகிய பணிகள் பசுமை தமிழகம் இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

    அரசு, பொது இடங்களில் மரங்கள் வெட்டுவதை ஒழுங்குபடுத்தவும், பொது நிலங்கள், அலுவலகங்களில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட அளவில் பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கு வனத்துறை சார்பில் 10,42,538 மரக்கன்றுகள், மாநகராட்சி சார்பில் 50,000 மரக்கன்றுகள், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 75,462 மரக்கன்றுகள், தன்னார்வ அமைப்பு மூலம் 30,000 மரக்கன்றுகள்,தனியார் நாற்றாங்கால்கள் மூலம் 60,000 மரக்கன்றுகள் என மொத்தம் 12,58,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளின் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகரிக்கச் செய்து பசுமையை ஏற்படுத்தும் நோக்குடன் மாவட்டத்துக்கான இலக்கை விரைவாக எய்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், வனத்துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடவு செய்தலுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப் பட்டது. மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விளக்கக் காட்சி திரையிடப்பட்டது.

    இதில், மாவட்ட வன அலுவலர் நா.ஜெயராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் சி.பிரியங்கா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பஷீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் ஆலங்குடியில் 730 மரக்கன்றுகள் வழங்கும்
    • தேக்கு, செம்மரம், புங்கை, பலா, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

    ஆலங்குடி, 

    பிரதமர் மோடியின் 73 -வது பிறந்தநாள் விழாவை ஓராண்டு காலத்திற்கு கொண்டாட பா.ஜ.க. கட்சியினர் திட்டமிட்டு ள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோ ட்டை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் ஆலங்குடியில் 730 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுச்சூழல் தலைவர் முருகேசன் தலைமை வைத்தார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

    வடகாடு முக்கம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜெகதீசன் கலந்து கொண்டு தேக்கு, செம்மரம், புங்கை, பலா, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

    பொது மக்களுக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பயணிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை அக்கறையோடு வளர்க்குமாறு அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் ஓட்டுனர் அணி குமார், முத்துவேல் வாண்டையார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் விண்ணப்ப மனுவுடன் பட்டா, சிட்டா நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வனத்துறை அறிவுறுத்தல்
    • தேயிலை விவசாயிகளுக்கு சில்வர் ஓக் மரங்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்க ஏற்பாடு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். அங்கு தேயிலைக்கு இடையே ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் தேயிலை விவசாயிகளுக்கு சில்வர் ஓக் மரங்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்கிறது. எனவே அவர்கள் தோட்டக்கலை மற்றும் வனத்துறை சார்பில் இலவசமாக வழங்கப்படும் சில்வர் ஓக் நாற்றுகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் குன்னூர் வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகளை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் சில்வர் ஓக் மரக்கன்றுகள் மற்றும் தனியார் பட்டாநிலங்களில் ஒரு ஏக்கருக்கு 100 நாற்றுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்ப மனுவுடன் பட்டா, சிட்டா நகல்கள் மற்றும் பாஸ் போர்ட் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் முருகன் (செல்போன் எண்: 90471 43198), கோபாலகி ருஷ்ணன்: 94420 07872, ராஜ்குமார்: 94422 93969 மற்றும் வனக்காப்பாளர் ஞானசேகர்: 96299 80058 ஆகிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.

    • திருமண நிகழ்வுகளில் முகூர்த்தக்கால் இடும் நிகழ்வு இன்றளவும் நடைபெறும்.
    • ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள விஷ்ணு வனத்தில் 5 மரக்கன்றுகளை நட்டனர்.

    பல்லடம்:

    தமிழரின் இயற்கை சார்ந்த பண்பாடு உலகின் மிகச்சிறந்த பண்பாடுகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்தது. தமிழர் திருமண நிகழ்வுகளில் மரம் வைத்து இயற்கை அன்னையை வழிபாடு செய்தல் கொங்குப் பகுதிகளில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருமண நிகழ்வுகளில் முகூர்த்தக்கால் இடும் நிகழ்வு இன்றளவும் நடைபெறும்.

    முந்தைய காலங்களில் இல்லற வாழ்வில் இணையும் இணையர் மரங்களை நட்டு வழிபாடு செய்தல் வழக்கம். நாளடைவில் இந்த நிகழ்வு பெயரளவில் திருமண அரங்குகளில் மர குச்சிகளை வைத்து பூஜை செய்யும் நிகழ்வாக சுருங்கிவிட்டது. இந்த நிலையில் பல்லடம் அருகே புதுமணத் தம்பதிகள் திருமணத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு இயற்கை வழிபாடு செய்த சம்பவம் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் ராமசாமி. இவருக்கும் இவரது உறவினர் மனிஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்களது திருமண விழா நிகழ்வாக கரடிவாவி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள விஷ்ணு வனத்தில் 5 மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மரக்கன்றுகளை வணங்கி இல்லற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புதுமணத் தம்பதிகள் மரக்கன்று நட்டு இயற்கை வழிபாடு செய்ததை அங்குள்ள பெரியவர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • சத்குரு பிறந்த நாளையொட்டி 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது.
    • இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சத்குரு பிறந்த நாளையொட்டி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக ஈஷாவால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 132 விவசாய நிலங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது. நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் வகையிலும் காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் கடந்த 2020 ஆண்டில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 2 லட்சத்திற்கும் அதிகமமான மரங்கள் நடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1.10 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 34 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே உள்ள பூசலபுரம் கிராத்தில் ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன், கிராம அலுவலர் ஜெயராணி ஆகியோர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்றுகள் நடும் விழாவில் மொத்தம் 175 மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 22 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    காங்கயம்:

    காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 22 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக காங்கயம் ஸ்ரீவராஹி கேட்டேட் டவுன்சிப் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது துளிகள் அமைப்பு நிர்வாகிகள், ஸ்ரீவராஹி ரியலிட்டி குரூப் (எஸ்.வி.ஆர்.குரூப்) நிர்வாகிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில் 175 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஸ்ரீவராஹி கேட்டேட் டவுன்சிப் குடும்ப உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 75 உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
    • கிராம ஊராட்சிகளில் உள்ள ரிசர்வ் சைட், பூங்கா உள்ள இடங்களில் கூட இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்

    திருப்பூர்,ஆக.27-

    நாட்டின் 75வது சுதந்திர தினம் கடந்த ஆண்டு 2021ல் நிறைவு பெற்றது; ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில், மக்களின் கலாசாரம், பண்பாடு, முற்போக்கு சிந்தனை உள்ளிட்டவற்றை பிரசாரமாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல், நீர், கலாசார பெருமை, சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியம் உள்ளடக்கிய மேம்பாடு, ஒற்றுமை ஆகிய கருப்பொருளை முன்வைத்து இந்த இயக்கம் நடத்தப்பட்டது.

    கடந்த 2021 மார்ச் 12ல் துவங்கி 75 வார இயக்கமாக நடத்தப்பட்ட இந்த இயக்கம் கடந்த 15ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதன் நினைவாக ஒவ்வொரு ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 75 உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவை ஊராட்சிகள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்தந்த ஊராட்சிகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர், மரம் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களை இணைத்து மரக்கன்று நடும் திட்டத்தை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

    கிராம ஊராட்சிகளில் உள்ள ரிசர்வ் சைட், பூங்கா உள்ள இடங்களில் கூட இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்.

    • மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்.
    • தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில், மாதிரி உணவு தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி , பையர்நத்தம் அரசு மருத்துவ மனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்.

    மேலும் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில், மாதிரி உணவு தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு பல்சுவை உணவுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பையர் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவகாமி செல்வம், பள்ளி ஆசிரியர்கள், சுகாதார மைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
    • 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

    மண்டல இணை இயக்குனர் நடராஜன் தலைமையில் துணை இயக்குனர் அருண் பாலாஜி மற்றும் பசுமை தமிழகம் இயக்கத்தின் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ் கண்ணன் முன்னிலையில் 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்ட வனத்துறையால் வழங்கப்பட்ட வாகை,சீமை அகத்தி, கொடுக்கா புளி உள்ளிட்ட மரக்கன்றுகளை திருச்செங்கோடு செங்குந்தர் கலை, அறிவியல் கல்லூரியைச் சார்ந்த என்.எஸ். எஸ் மற்றும் என்.சி.சி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர்கள் சசிகுமார், சதீஷ்குமார் ஆகியோரும், கல்லூரியின் என்.சி.சி அலுவலர் ராமசாமி, என்.எஸ். எஸ் திட்ட அலுவலர் மைதிலி மற்றும் கால்நடை மருத்துவத் துறையினரும் கலந்து கொண்டனர்.

    • சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதினம் மற்றும் கிராம உதயம் வெள்ளி விழா ஆண்டு குறித்து சிறப்புரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் தனி அலுவலர் கணேசன், பேச்சியம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நெல்லை:

    கிராம உதயம் சார்பாக 77-வது சுதந்திர தினம் மற்றும் கிராம உதயம் 25-வது வெள்ளிவிழா தினத்தை முன்னிட்டு 250 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்ச்சி கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் நடைபெற்றது.

    கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதினம் மற்றும் கிராம உதயம் வெள்ளி விழா ஆண்டு குறித்து சிறப்புரையாற்றினார்.

    கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் தனி அலுவலர் கணேசன், பகுதி பொறுப்பா ளர்கள் முருகன், பாலசுப்பிர மணியன், மரியமிக்கேல் ஜீவா, பேச்சியம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் கிராம உதயம் 25-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கிராம உதயம் அனைத்து தன்னார்வ தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது.இந்த வளா கத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வரும் வாதிகள் பிரதிவாதிகள் மற்றும்நீதிமன்ற பணியாளர்கள் தங்களின் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கரம் வாகனம் நிறுத்த வசதி மற்றும் வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் நடும் விழா இன்று விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இவ் விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரணிம்மா வரவேற்றார் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்ட பாணி கலந்துகொண்டு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகன நிறுத்த வசதிகளை திறந்து வைத்து . கார் நிறுத்துவதற்கானமுதல் டோக்கனை விழுப்புரம் மாவட்ட அரசு வக்கீல் சுப்பிரமணியிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயன் தரும் மரக்கன்றுகளையும் மூலிகை செடிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தண்டபாணி,சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் நட்டனர்.

    விழாவில் விழுப்புரம் மாவட்ட கிழமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி,விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி,விழுப்புரம் எஸ்.பி.சசாங் சாய், அரசு வக்கீல்கள் நாகராஜன் எம். எஸ். நட ராஜன்விழுப்புரத்தில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தயானந்தம், காளிதாஸ்,சண்முகம்,பத்மநாபன்,மூத்த வழக்கறிஞர்கள் இள ங்கோவன், ராஜாராமன், ராதாகிருஷ்ணன், மற்றும் நீதிமன்ற அலுவலக அலுவலர்கள்,தலைமை எழுத்துகள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அன்னை தொண்டு நிறுவனம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு, மேட்டுடையார் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பொன்.செந்தில் குமார் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உப கரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அன்னை தொண்டு நிறு வனம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு, மேட்டுடையார் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பொன்.செந்தில் குமார் தலைமை வகித்தார். அன்னை தொண்டு நிறுவன நிர்வாகி சி.ராதாசெல்வம் வரவேற்றார்.

    பெத்த நாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். செல்வம், க. சந்திரசேகரன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தனர். வனச்சரகர் திருமுருகன் மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் பராமரிக்க வேண்டிய முறை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    வருவாய் ஆய்வாளர் நீதிபதி, சமூக ஆர்வலர் தும்பல் ஜீவா ஆகியோர், அன்னை அறக்கட்டளை சார்பாக, 10 மாணவ- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர். இந்த விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், ஸ்ரீதேவி வெங்க டேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சுசீலா நன்றி கூறினார்.

    ×