search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parking space"

    • வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது.இந்த வளா கத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வரும் வாதிகள் பிரதிவாதிகள் மற்றும்நீதிமன்ற பணியாளர்கள் தங்களின் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கரம் வாகனம் நிறுத்த வசதி மற்றும் வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் நடும் விழா இன்று விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இவ் விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரணிம்மா வரவேற்றார் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்ட பாணி கலந்துகொண்டு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகன நிறுத்த வசதிகளை திறந்து வைத்து . கார் நிறுத்துவதற்கானமுதல் டோக்கனை விழுப்புரம் மாவட்ட அரசு வக்கீல் சுப்பிரமணியிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயன் தரும் மரக்கன்றுகளையும் மூலிகை செடிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தண்டபாணி,சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் நட்டனர்.

    விழாவில் விழுப்புரம் மாவட்ட கிழமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி,விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி,விழுப்புரம் எஸ்.பி.சசாங் சாய், அரசு வக்கீல்கள் நாகராஜன் எம். எஸ். நட ராஜன்விழுப்புரத்தில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தயானந்தம், காளிதாஸ்,சண்முகம்,பத்மநாபன்,மூத்த வழக்கறிஞர்கள் இள ங்கோவன், ராஜாராமன், ராதாகிருஷ்ணன், மற்றும் நீதிமன்ற அலுவலக அலுவலர்கள்,தலைமை எழுத்துகள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    ×