என் மலர்
நீங்கள் தேடியது "நிறுத்துமிடம்"
- மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் கிடையாது.
- பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பம் இன்றுடன் (20.07.2025) முடிவடைவதையொட்டி வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கண்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் இன்றுடன் (20.07.2025) முடிவடைகிறது.
இதனையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி நிறுத்திக் கொள்ளலாம்.
இது தொடர்பான புகார்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது."
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- ஸ்ரீரெங்கத்தில் 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பப்ட்டுள்ளது
- இந்து சமயஅறநிலையத்துறைக்கு மேயர் அனுப்பினார்
திருச்சி:
ஸ்ரீரங்கத்தில் வருடந்தோறும் அனைத்து நாட்களிலும் திருவிழா நடப்பதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர்.
இதில் பக்தர்கள் கார், வேன் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து கோயிலின் மதில் சுவர் அருகே உத்திரவீதிகளில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் வாகனங்களை நிறுத்த மாற்று இடத்திற்கு மாநகராட்சி நிர்வாக முடிவு செய்தது. அதற்கான இடம் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதில் பஞ்சக்கரை கொள்ளிடக்கரையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடம் இருப்பதும் அதனை கேட்டு பெற்று பிரமாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் :-
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதாலும், பக்தர்கள் வந்து செல்லும் வாகனங்கள் கோவிலின் மதில்சுவர் அருகே நிறுத்தப்படுவதாலும் சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் வரும் கார், வேன், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு பஞ்சக்கரை
யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடக்கரையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் சுமார் 5 ஏக்கர் இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், மேயர் அன்பழகன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறையினரு க்கு கடிதம் எழுதி உள்ளனர். விரைவில் அனுமதி கடிதம் வந்த பினனர் பணிகள் துவங்கி பிரமாண்ட வாகன நிறுத்துமிடம் கட்டப்படும்.






