search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னை தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
    X

    விழாவில் மரக்கன்று நட்டபோது எடுத்தப்படம்.

    அன்னை தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

    • வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அன்னை தொண்டு நிறுவனம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு, மேட்டுடையார் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பொன்.செந்தில் குமார் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உப கரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அன்னை தொண்டு நிறு வனம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு, மேட்டுடையார் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பொன்.செந்தில் குமார் தலைமை வகித்தார். அன்னை தொண்டு நிறுவன நிர்வாகி சி.ராதாசெல்வம் வரவேற்றார்.

    பெத்த நாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். செல்வம், க. சந்திரசேகரன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தனர். வனச்சரகர் திருமுருகன் மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் பராமரிக்க வேண்டிய முறை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    வருவாய் ஆய்வாளர் நீதிபதி, சமூக ஆர்வலர் தும்பல் ஜீவா ஆகியோர், அன்னை அறக்கட்டளை சார்பாக, 10 மாணவ- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர். இந்த விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், ஸ்ரீதேவி வெங்க டேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சுசீலா நன்றி கூறினார்.

    Next Story
    ×