search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து"

    • செல்லூர் மேம்பாலத்தில் நாளை 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
    • திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளையம் செல்லலாம்.

    மதுரை

    மதுரை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    மதுரை செல்லூர் தத்தனேரி ெரயில்வே மேம்பாலத்தில் ஆரப்பாளை யம் செல்ல கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தை இணைக்கும் பணிகள் நடை பெறுவதால் செல்லூர் மேம்பாலத்தில் நாளை 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    எனவே திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பா ளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளை யம் செல்லலாம்.

    கோரிப்பாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஏ.வி. பாலம், யானைக்கல் சந்திப்பு சிம்மக்கல் ரவுண்டாணா தமிழ்சங்கம் ரோடு வழியாக ஆரப்பாளையம் - செல்ல லாம்.

    மறுமார்க்கமாக தமிழ்சங்கம் ரோடு - சிம்மக்கல் ரவுண்டாணா யானைக்கல் சந்திப்பு புதுப்பாலம் சந்திப்பு வலது புறம் திரும்பி -கோரிப்பா ளையம் சந்திப்பை அடைய லாம்.

    திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் அத்தியாவசிய கனரக வாகனங்கள் (பால் வண்டி, ரேசன் பொருட்கள், பெட் ரோல் லாரிகள்) மட்டும் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது - குரு தியேட்டர் சந்திப்பு காளவாசல் சந்திப்பு இடது, அரசரடி சந்திப்பை அடைந்து தமிழ் சங்கம் ரோடு வழியாகவும் அல்லது பாத்திமா கல்லூரி சந்திப்பு இடது கூடல்நகர் ெரயில்வே மேம்பாலம்- புதுநத்தம் சாலை ஆனையூர் அய்யர் பங்களா சந்திப்பு வழியாக வும் மற்றும் மூன்றுமாவடி சந்திப்பு அழகர்கோவில் சாலை வழியாகவும் கோரிப்பாளையம் செல்ல லாம்.

    திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்கு சக்கர வாகனங்கள் செல்லூர் பாலம் வரும் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் தத்தனேரி வழியாக பாலம் ஸ்டேசன் ரோட்டை அடைந்து கோரிப்பாளையம் பகுதிக்கு செல்லலாம்.

    மறுமார்க்கமாக கோரிப்பாளையம் சந்திப்பி லிருந்து செல்பவர்கள் செல்லூர் பாலம் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் அடியில் சர்வீஸ் சாலையில் சென்று - சப்வே வழியாக தத்தனேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலையை அடைந்து அம்மா பாலம் சந்திப்பு வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
    • இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுகிறது.

    இரணியல்:

    திங்கள்நகர்-நெய்யூர்-அழகிய மண்டபம் செல்லும் சாலையில் இரட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுவதால் இரட்டை ரெயில்வே மேம்பால பணிகள் நடை பெறும் இடத்தை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் கடந்த 26-ந்தேதி பார்வை யிட்டு வாகனங்கள் மாற்று பாதையில் செல்லவும் பணிகளை சுமார் 40 நாட்களில் விரைந்து முடிக்கவும் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், ரெயில்வே துணை முதன்மை பொறியாளர் பமிலா, குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    இந்நிலையில் நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, திங்கள் நகரில் இருந்து திருவிதாங்கோடு, அழகிய மண்டபம் செல்லும் வாகனங்கள் திங்கள்நகர் ரவுண்டானா, இரணியல் சந்திப்பு, ஆழ்வார்கோவில், தக்கலை வழியாகவும், அழகிய மண்டபம், திரு விதாங்கோட்டில் இருந்து திங்கள்நகர் செல்லும் வாகனங்கள் திரு விதாங்கோடு, வட்டம், ஆழ்வார் கோவில், இரணி யல் சந்திப்பு திங்கள் நகர் வழியாகவும் செல்லும்படி ஒருவழி போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டு நாளை முதல் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்ப டுகிறது. ஆகவே பொது மக்கள் போக்குவரத்து காவல்துறைக்கும், ரெயில்வே நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தந்து மாற்று பாதையில் செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சமூக ஆர்வலர்கள் - பொதுமக்கள் மகிழ்ச்சி
    • தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் சேதமாகின

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கனிம வளச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் படி சிறு குன்றுகளில் கூட கற்களை உடைக்க முடி யாது. தரைமட்டத்தில் காணப்படும் பாறைகளில் மட்டுமே விதிகளின்படி கற்களை எடுக்கலாம். ஆனால் மாவட்டத்தில் முறைகேடாக எடுக்கப்படும் கல், ஜல்லி, பாறைப்பொ டிகள் கேரளாவுக்கு தொடர்ந்து கனரக லாரி களில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக தினமும் 500-க்கும் மேற் பட்ட லாரிகளில் கல், ஜல்லி கொண்டு செல்லப்பட்டது. இதுதவிர காக்காவிளை, நெட்டா போன்ற அனைத்து வழிகளிலும் கல் பாரம் ஏற்றிய நூற்றுக்கணக்கான லாரிகள் கேரளாவுக்கு சென்றன. லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலை கள் உட்பட அனைத்து சாலைகளும் சேதமாகின. இதனை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.

    அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாக னங்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டார்.

    விதிமுறையை மீறி கனிம வளங்கள் கொண்டு செல் லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.3 கோடி அபராதம் விதிக்கப் பட்டது. மேலும் போக்கு வரத்து நெரிசல், விபத்துக் கள் அதிகரித்தலை தொடர்ந்து, 10 டயர் கொண்ட லாரிகளுக்கு மேல் உள்ள லாரிகள் கன்னியாகுமரி மாவட் டத்திற்குள் வர அரசு தடை விதித்தது. அரசின் இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்ததோடு, சாலை விபத்துக்களும் குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர்களும், அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    • மாற்றுப்பாதையில் போக்குவரத்து இயக்கம்
    • மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகவும் பிரதான சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டாகும்.

    தென்தாமரைகுளம் :

    சந்தையடி ஊரில் 2ரெயில்வே கேட்டுகள் உள்ளது. இதில் ஒன்று சந்தை யடி ஊருக்குள் செல்லும் வழியிலும், மற்றொன்று கோட்டையடியிலிருந்து கொட்டாரம் செல்லும் சாலையில் சந்தையடியில் உள்ளது. இந்த ரெயில்வே கேட் சந்தையடி, இடை யன்விளை, வெள்ளையன் தோப்பு, ஈச்சன்விளை, மேலசந்தையடி, விஜயநகரி, கரும்பாட்டூர், கோட்டையடி ஆகிய பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகவும் பிரதான சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டாகும்.

    அந்த இடத்தில் இரட்டைரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (21-ந்தேதி) மாலை6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை ரெயில்வே கேட் மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சந்தையடி ஊரில்உள்ள மற்றொரு கேட்டு அடைக்கப்படாததால் அந்த கேட் வழியாக வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் ஊர் மக்களின் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கு அறிவிப்பு பலகை ரெயில்வே நிர்வாகம் சார்பில் வைக்க ப்பட்டுள்ளது.

    • மேல்மலையனூர் அருகே மழைநீர் கால்வாய் சரி செய்ய கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
    • அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே தேவனூர் கிராமத்தில் கீழண்டை தெரு உள்ளது. இப்பகுதியில் மழை பெய்தால் கால்வாய்மூலம் தண்ணீர் வெளியேறும்படி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு ஒரு பாலம் உயர்த்திக் கட்டியதாலும் சிலரது ஆக்கிரமிப்பாலும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது. அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தேவனூர-கெங்கபுரம் சாலையில் இன்று காலை 10.15 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    மழைநீர் வீதியில் தேங்காதவாறு இருந்தது. தற்போது கீழண்டை தெரு ஆரம்பத்தில் ஒரு சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து தண்ணீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கவில்லை இதனால் கடந்த சில நாட்களாக பெய்யும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது.மேலும் வீட்டின் உட்புறம் தண்ணீர் தேங்கியதால் இரவு முழுவதும் தூங்காமல் வீட்டில் தேங்கிய நீரை வெளியேற்றி வருகிறோம். மழைநீர் செல்லும் இடத்தில் சிலர் ஆக்கிரமித்து இருப்பதால் கால்வாய் அமைக்க முடியாத நிலை உள்ளது. இதை நாங்கள்அதிகாரிகளிடம் முறையிட்டும், மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சாலைமறியல் குறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பஸ் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர் அருகே நேற்று நள்ளிரவு நேரத்தில் சென்றது.
    • காயமடைந்த மூர்த்தியை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையிலிருந்து, ராமநாதபுரத்திற்கு சொகுசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை ராமநாதபுரத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர் அருகே நேற்று நள்ளிரவு நேரத்தில் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்து, டிரைவர் மூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பஸ்சில் முன்பக்கம் அமர்ந்திருந்த ஒரு சில பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.

    விபத்து நடந்த சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 108 ஆம்புலன்சை வரவழைத்து காயமடைந்த மூர்த்தியை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பஸ்சில் வந்த பயணிகளை, மாற்று பஸ்சில் ஏற்றி ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பெரம்பலூர் சாலைகளைஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்
    • போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டிகள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகரைச் சுற்றி ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. நகரத்தின் போக்குவரத்து விரிவடைந்து வருதால், தற்போது பெரம்லூர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய சாலை சந்திப்புகளான வடக்குமாதேவி, தண்ணீர் பந்தல், எளம்பலூர் பகுதிகளுக்கு அதிகளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகிறது.இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு உரிய வகையில் பார்க்கிங் வசதிகளோ, வேக கட்டுப்பாடோ கண்காணிக்கப்படுவது இல்லை. இதனால் சாலைகளின் ஓரங்களிலேயே ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஆட்டோக்கள் நிறுத்தப்படும் இடத்தை கடக்கும் போது, இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக புதிய பேருந்து நிலையத்தின் எதிரிலேயே வரிசையாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பேருந்து நிலையத்திற்குள் இருந்து வரும் பேருந்தை திரும்பி செல்வதற்கு ஓட்டுனர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.மேலும் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிவேகமாக இயக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகவே ஆட்களை ஏற்றிச் செல்கிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, போக்குவரத்து போலீஸ் ஆகிய அலுவலகங்களில் இது குறித்து ஏராளமான மனு கொடுக்கப்பட்டிருந்தாலும், எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது,பெரம்பலூரில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் அனைத்திலும் , அதிகளவில் ஆட்கள் ஏற்றப்படுகிறது. மேலும் ஸ்பீக்கரில் பாடல்களை அலற விட்டு, செல்கிறது. சரியான பராமரிப்பு இல்லாதததால் அதிகளவு புகையை வெளியிடுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஷேர் ஆட்டோக்களை கட்டப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.இது குறித்து பெரம்பலூர் ஆர்டிஓ பிரபாகரன் கூறும்போது,விதிமுறைகளை மீறும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்து கொண்டு தான் இருக்கிறோம். புதிதாக எந்த ஷேர் ஆட்டோவிற்கும் பர்மிட் தரப்படுவதில்லை. தற்போதுள்ள குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

    • பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர்.
    • சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக கடலூர், விருத்தாசலம் செல்லும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்களில் ஏறி கட்டண சீட்டுகளைப் பெற்று அவை சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்த பஸ்சுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில் அனைத்து பஸ் கண்டக்டர்களும் சரியான பயணச்சீட்டையே பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    • பாலத்தை அகலப்படுத்தி விரிவாக்க பணி நடைபெறுகிறது.
    • நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் ஆர்.சி.சர்ச் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதன்மேல்பகுதியில் தண்ட வாளத்தில் ரயிலும், கீழே அதன் அடிபகுதியில் சாைலையில் வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த பாலத்தை அகலப்படுத்தி விரிவாக்க பணி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் கர்நாடகாவிலிருந்து ஓசூர் ெரயில் நிலையம் வரை ஏற்கனவே உள்ள ரயில் வழிப்பாதை இரு வழிப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனுடன் சேர்த்து தேன்கனிக் கோட்டை சாலையில் உள்ள பாலத்தை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு, கடந்த 6-ம் தேதி இதற்கான பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி, தேன்கனிக்கோட்டை சாலையில் அடுத்த 7 மாதங்களுக்கு வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது . அதன்படி ஓசூரில் இருந்து தேன் கனிக்கோட்டை செல்லும் கனரக வாக னங்கள் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன. இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், ெரயில் நிலையம் அருகேயுள்ள ெரயில்வே கீழ் பாதை வழியாக சென்று வர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    இவ்வாறு ரெயில்வே கீழ் பாதை வழியாக சென்று வரும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. இதனால் நாள்தோறும் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை, ஏராளமான டூவீலர்கள் மற்றும் ஆட்டோக்கள் அந்த வழியாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திணறி, மிகவும் அவதியடைந்தனர்.

    அந்த பகுதியை கடந்து செல்லவே நீண்ட நேரமானது. மேலும் அவசர பணி நிமித்தமாக செல்வோரும் நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த வழியாக நடந்து சென்ற பொது மக்களும் அவதிப்பட்டனர்.

    • போக்குவரத்து வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
    • வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    வருகிற 11-ந்தேதி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அங்கு அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது.

    வாடகை, திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாக னங்கள், டிராக்டர், டாடா ஏஸ், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. சொந்த வாக னங்களில் வருபவர்கள் உரிய ஆவணங்களை 8-ந்தேதிக்கு முன்னர் உட்கோட்ட அலுவல கங்களில் அளித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் அனுமதிக் கப்படமாட்டாது. பிற மாவட்டங்களில் இருந்து சொந்த வாகனங்களில் வருபவர்களும் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். வாக னத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. பட்டாசுகள் வெடிக்கவோ, ஒலி பெருக்கி கள் பொருத்தியோ செல்லக் கூடாது. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. பரமக்குடி நகருக்குள் சந்தைப் பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ் சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.

    ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும். நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக் கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணம் செல்லலாம்.

    சொந்த ஊரில் செப்டம்பர் 11-ந் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சி கள் கொண்டாடவும், ஒலி பெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ந் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

    பரமக்குடி நினைவி டத்தில் செப்டம்பர் 11-ந் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும். அலங்கார ஊர்தி அணி வகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.பரமக்குடி நினைவி டத்தில் 11-ந்தேதி மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும். கட்சிகள், அமைப்புகள் 8-ந்தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை
    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஹெல்ெமட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தபோது அவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

    போலீசார் அவரது செல்போனை சோதனை செய்தபோது பிடிபட்ட நபர் தனது செல்போனில் அதிவேகமாக பைக் ரேசிங் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இருந்தது. மேலும் இதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்குவரத்து விதிமுறையை மீறிய அந்த வாலிபருக்கு ரூ.12,000 அபராதம் விதித்தனர். இதேபோல் குளச்சல் பகுதியிலும் வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்து சிக்கினார்.

    அவரது செல்போனை சோதனை செய்த போதும் அதிவேகமாக ஓட்டி சென்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவேற்றம் செய்து இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பிடிபட்ட நபருக்கு 17 வயதே ஆனதையடுத்து அந்த நபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 வாலிபரின் பெற்றோருக்கும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு குறைவான நபர்கள் வாகனம் ஓட்டக்கூடாது. இதை பெற்றோர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிவேகமாக வாகனம் ஓட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும் ஹெல்மெட் அணிவது நமது உயிர் கவசம் போன்றதாகும். எனவே அனைவரும் இரு சக்கர வாகன ஓட்டும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்றார்.

    • தவுட்டுப்பாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
    • நீண்ட லாரிகளை இரவு நேரங்களில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரைக்கு சுமார் 360 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை அதிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் புதிய பாலம் வழியாக போலீஸ் செக் போஸ்ட் அருகே வந்தது.போலீஸ் செக்போஸ்ட் அருகே செல்லும் போது சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதால் போலீஸ் செக்போஸ்ட் அருகே அதிக நீளமான காற்றாலை விசிறி இறக்கையை நீளமான லாரியில் கொண்டு செல்லும் போது காற்றாலை விசிறி இறக்கையுடன் லாரி செல்ல முடியாமல் நீண்ட நேரம் தடுமாறிக் கொண்டு மிகவும் மெதுவாக சென்றது.அதன் காரணமாக மிகவும் நீளமான காற்றாலை இறக்கைகளை லாரிகளில் கொண்டு சென்றதால் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி ஆற்று பாலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் ,வேன்கள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து காற்றாலை விசிறி ரெக்கை கொண்டு செல்லும் லாரிக்கு பின்னால் வரிசையாக அணிவகுத்து மெதுவாக சென்றன.இதனால் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து பாலத்துறை மேம்பாலம் வரை ஏராளமான வாகனங்கள் இறக்கையை ஏற்றி செல்லும் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பகலில் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது. பகல் நேரங்களில் வரும்போது அனைத்து வாகனங்களும் நீண்ட நேரம் மெதுவாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளை இரவு 10 மணிக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×