search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "obstruction"

    • செல்லூர் மேம்பாலத்தில் நாளை 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
    • திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளையம் செல்லலாம்.

    மதுரை

    மதுரை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    மதுரை செல்லூர் தத்தனேரி ெரயில்வே மேம்பாலத்தில் ஆரப்பாளை யம் செல்ல கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தை இணைக்கும் பணிகள் நடை பெறுவதால் செல்லூர் மேம்பாலத்தில் நாளை 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    எனவே திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பா ளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளை யம் செல்லலாம்.

    கோரிப்பாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஏ.வி. பாலம், யானைக்கல் சந்திப்பு சிம்மக்கல் ரவுண்டாணா தமிழ்சங்கம் ரோடு வழியாக ஆரப்பாளையம் - செல்ல லாம்.

    மறுமார்க்கமாக தமிழ்சங்கம் ரோடு - சிம்மக்கல் ரவுண்டாணா யானைக்கல் சந்திப்பு புதுப்பாலம் சந்திப்பு வலது புறம் திரும்பி -கோரிப்பா ளையம் சந்திப்பை அடைய லாம்.

    திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் அத்தியாவசிய கனரக வாகனங்கள் (பால் வண்டி, ரேசன் பொருட்கள், பெட் ரோல் லாரிகள்) மட்டும் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது - குரு தியேட்டர் சந்திப்பு காளவாசல் சந்திப்பு இடது, அரசரடி சந்திப்பை அடைந்து தமிழ் சங்கம் ரோடு வழியாகவும் அல்லது பாத்திமா கல்லூரி சந்திப்பு இடது கூடல்நகர் ெரயில்வே மேம்பாலம்- புதுநத்தம் சாலை ஆனையூர் அய்யர் பங்களா சந்திப்பு வழியாக வும் மற்றும் மூன்றுமாவடி சந்திப்பு அழகர்கோவில் சாலை வழியாகவும் கோரிப்பாளையம் செல்ல லாம்.

    திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்கு சக்கர வாகனங்கள் செல்லூர் பாலம் வரும் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் தத்தனேரி வழியாக பாலம் ஸ்டேசன் ரோட்டை அடைந்து கோரிப்பாளையம் பகுதிக்கு செல்லலாம்.

    மறுமார்க்கமாக கோரிப்பாளையம் சந்திப்பி லிருந்து செல்பவர்கள் செல்லூர் பாலம் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் அடியில் சர்வீஸ் சாலையில் சென்று - சப்வே வழியாக தத்தனேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலையை அடைந்து அம்மா பாலம் சந்திப்பு வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • மதுரையில் 16-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை புதூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    பாரதி உலா ரோடு, ஜவகர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர் சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புல்லபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய்ரோடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி. ரோட்டின் ஒரு பகுதி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ரேடியோ நிலைய குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ. காலனி.

    சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு (இ.பி. குவாட்டர்ஸ் முதல் கண்ணா மருத்துவமனை வரை), ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரோஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவகர் புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு (ஐ.டிஐ. பஸ் நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை), டீன் குவாட்டர்ஸ், காமராஜர் நகர், 1,2,3,4, ஹச்சகான் ரோடு.

    கமலா முதல் மற்றும் 2-வது தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப் பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆத்திகுளம், குறிஞ்சிநகர், பாலமி குடியிருப்பு, கனக வேல்நகர், பழனிச்சாமிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    பெரியார் பஸ் நிலையம்

    மதுரை எல்லீஸ் நகர் துணைமின் நிலையத்தில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    எல்லீஸ் நகர் மெயின் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், (எம், எச், டி, ஆர்.எச். பிளாக்குகள்), குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் (ஏ முதல் எச் பிளாக்குகள்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள்.

    டி.பி. ரோடு, ெரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி. ரோடு, பைபாஸ் ரோட்டின் ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி அபார்ட் மெண்ட்ஸ், வசுதரா அபார்ட்மெண்ட்ஸ், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட்டு வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போவினப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் (வயது 30), சாய்பிரபு (35), வினியலட்சுமி (45) ஷோபா (50) ஆகியோர் காரில் வந்தனர்.
    • இதில் காரில் இருந்த டிரை வர் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போவினப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் (வயது 30), சாய்பிரபு (35), வினியலட்சுமி (45) ஷோபா (50) ஆகியோர் காரில் வந்தனர். இந்த காரை அதே பகுதியைச் சேர்ந்த சினுவாச்சாரி (30) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதி காலை சிதம்பரம் வண்டி கேட் பகுதிக்கு வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக் குள்ளானது. இதில் காரில் இருந்த டிரை வர் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.   அப்பகுதியில் இருந்த வர்கள் காரில் இருந்தவர் களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது.

    விழுப்புரம்:

    மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மணிலா, தர்பூசணி போன்ற விவசாய பயிர்களை நடுவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோல் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத் துறை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மரக்காணம் பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், மீன்பிடி வலைகள் போன்ற மீன்பிடி உபகரணங்களை கடற்கரை ஓரத்தில் இருந்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

    இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் இன்று முதல் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறையும். இதனால் மீன் விலை அதிகரிக்கும் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

    ×