என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த  தெலுங்கானா பக்தர்களின் கார் தடுப்புக் கட்டையில் மோதி விபத்து
    X

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த தெலுங்கானா பக்தர்களின் கார் தடுப்புக் கட்டையில் மோதி விபத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போவினப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் (வயது 30), சாய்பிரபு (35), வினியலட்சுமி (45) ஷோபா (50) ஆகியோர் காரில் வந்தனர்.
    • இதில் காரில் இருந்த டிரை வர் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போவினப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் (வயது 30), சாய்பிரபு (35), வினியலட்சுமி (45) ஷோபா (50) ஆகியோர் காரில் வந்தனர். இந்த காரை அதே பகுதியைச் சேர்ந்த சினுவாச்சாரி (30) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதி காலை சிதம்பரம் வண்டி கேட் பகுதிக்கு வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக் குள்ளானது. இதில் காரில் இருந்த டிரை வர் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த வர்கள் காரில் இருந்தவர் களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×