search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீறிய"

    • குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை
    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஹெல்ெமட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தபோது அவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

    போலீசார் அவரது செல்போனை சோதனை செய்தபோது பிடிபட்ட நபர் தனது செல்போனில் அதிவேகமாக பைக் ரேசிங் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இருந்தது. மேலும் இதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்குவரத்து விதிமுறையை மீறிய அந்த வாலிபருக்கு ரூ.12,000 அபராதம் விதித்தனர். இதேபோல் குளச்சல் பகுதியிலும் வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்து சிக்கினார்.

    அவரது செல்போனை சோதனை செய்த போதும் அதிவேகமாக ஓட்டி சென்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவேற்றம் செய்து இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பிடிபட்ட நபருக்கு 17 வயதே ஆனதையடுத்து அந்த நபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 வாலிபரின் பெற்றோருக்கும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு குறைவான நபர்கள் வாகனம் ஓட்டக்கூடாது. இதை பெற்றோர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிவேகமாக வாகனம் ஓட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும் ஹெல்மெட் அணிவது நமது உயிர் கவசம் போன்றதாகும். எனவே அனைவரும் இரு சக்கர வாகன ஓட்டும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்றார்.

    • குடிபோதையில் மாணவன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு
    • இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் மாணவர்கள் அதிவேகமாக போக்குவரத்து விதி முறையை மீறி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த னர். மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் வைத்திருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் சோதனை யில் மாணவர்கள் பலருக்கும் லைசென்ஸ் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. 14 பேர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகளை வழங்கினர். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற உறுதி மொழியும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். போலீசார் சோதனை மேற்கொண்டபோது மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக் கிளையும் பறிமுதல் செய்தனர்.

    குடிபோதையில் இருந்த மாணவன் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 18 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டி வந்ததாக 3 பேர் சிக்கினார்கள். அவரது பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரைகளை வழங்கினார்கள்.

    இந்து கல்லூரியில் மட்டும் நடந்த சோதனையில் 70 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 16 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மூலமாக ரூ.1.50 லட்சம் அபராதம் வசூல் ஆனது. இதேபோல் வடசேரி, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் 238 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த இருசக்கர வாக னங்களை போலீசார் பூட்டு போட்டு பறிமுதல் செய்த வுடன் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோணம் பாலி டெக்னிக் கல்லூரி பகுதியில் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது இந்து கல்லூரி பகுதியிலும் சோதனை நடத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா வருவது வழக்கம்.
    • சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் ஏற்காடு வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

    ஏற்காடு:

    தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் முக்கிய இடங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா வருவது வழக்கம். இதனால் ஏற்காட்டில் வாடகை கார்,வேன் மற்றும் ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கடந்த சில மாதமாக ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஏற்காட்டில் உள்ள வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்காட்டில் ஒரு சிலர் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடுவதால் வாடகை வாகனம் ஓட்டும் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதுபோல் இருசக்கர வாகனங்களை சட்டத்துக்கு புறம்பாக வாடகைக்கு விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் வட்டார போக்கு–வரத்து அதிகாரி, ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து உடனடியாக சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் ஏற்காடு வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார். இந்த தணிக்கையில் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு அவர்கள் ஓட்டிவந்த 2 மோட்டார்சைக்கிள்களை ஆர்.டி.ஓ பறிமுதல் செய்தார்.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற வாகன தணிக்கையில் சொந்த பயன்பாட்டிற்கான வாகனத்தில் வாடகைக்கு ஓட்டியும் அதில் அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற கார் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் இல்லாத 4 கார்களை பறிமுதல் செய்து அதற்கு அபராதமும் விதித்தார்.

    ×