நாகர்கோவிலில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

குடிபோதையில் மாணவன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நாகர்கோவிலில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
Published on

கன்னியாகுமரி:

நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் மாணவர்கள் அதிவேகமாக போக்குவரத்து விதி முறையை மீறி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த னர். மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் வைத்திருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் சோதனை யில் மாணவர்கள் பலருக்கும் லைசென்ஸ் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. 14 பேர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகளை வழங்கினர். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற உறுதி மொழியும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். போலீசார் சோதனை மேற்கொண்டபோது மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக் கிளையும் பறிமுதல் செய்தனர்.

குடிபோதையில் இருந்த மாணவன் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 18 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டி வந்ததாக 3 பேர் சிக்கினார்கள். அவரது பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரைகளை வழங்கினார்கள்.

இந்து கல்லூரியில் மட்டும் நடந்த சோதனையில் 70 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 16 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மூலமாக ரூ.1.50 லட்சம் அபராதம் வசூல் ஆனது. இதேபோல் வடசேரி, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் 238 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த இருசக்கர வாக னங்களை போலீசார் பூட்டு போட்டு பறிமுதல் செய்த வுடன் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோணம் பாலி டெக்னிக் கல்லூரி பகுதியில் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது இந்து கல்லூரி பகுதியிலும் சோதனை நடத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com