search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிமுறைகளை"

    • 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் பறிமுதல்
    • நாகர்கோவிலில் போக்கு வரத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் போக்கு வரத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    குறிப்பாக ஆட்டோக்களில் அதிக மாணவிகளை ஏற்றி செல்லும் டிரைவர்களுக்கும், இருசக்கர வாகனங்களில் லைசன்ஸ் இல்லாமல் செல்ப வர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. லைசென்ஸ் இல்லாமல் 18 வயதுக்கு குறைவாக வாகனம் ஓட்டுபவர்களின் வாக னங்களை பறிமுதல் செய்யும் போலீசார் அவர் பெற்றோ ருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலை மையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்ல சாமி மற்றும் போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது 18 வயதுக்கு குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்கள் 10 பேர் இந்த சோதனையில் சிக்கினர். அவர்களது மோட்டார் சைக்கிளை போலீ சார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து வாக னங்கள் பறிமுதல் செய்தது குறித்து அவரது பெற்றோர்க ளுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். வாகனங்களை ஓட்டி வந்தோரின் பெற் றோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 10 பேருக்கு அபராதம் விதிப்பட்ட நிலையில் 4 பேர் மட்டுமே அபராத தொகையை கட்டிவிட்டு மோட்டார் சைக்கிளை திரும்ப பெற்று சென்றனர். 6 பேரின் மோட டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஒரே மோட்டார் சைக்கி ளில் 3 பேர் வந்தவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். நேற்று 6 பேர் சிக்கினார்கள். இதேபோல் நேற்று ஒரே நாளில் 140 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.2 லட்சம் அபராதம் வசூல் ஆகியுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் நாகர்கோவில் மாநகரில் ரூ.30 லட்சத்திற்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து விதி முறைகளை பொதுமக்கள் மீறக்கூடாது. சிறுவர்களுக்கு பெற்றோர் வாகனங்களை ஓட்ட கொடுக்கக்கூடாது. அவ்வாறு ஓட்டினால் அவரது மோட்டார் சைக் கிள்கள் பறிமுதல் செய்யப்ப டும். எனவே இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பெற்றோர் கடைபிடிக்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிவது உயிர் கவசம். எனவே அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • குடிபோதையில் மாணவன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு
    • இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் மாணவர்கள் அதிவேகமாக போக்குவரத்து விதி முறையை மீறி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த னர். மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் வைத்திருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் சோதனை யில் மாணவர்கள் பலருக்கும் லைசென்ஸ் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. 14 பேர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகளை வழங்கினர். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற உறுதி மொழியும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். போலீசார் சோதனை மேற்கொண்டபோது மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக் கிளையும் பறிமுதல் செய்தனர்.

    குடிபோதையில் இருந்த மாணவன் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 18 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டி வந்ததாக 3 பேர் சிக்கினார்கள். அவரது பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரைகளை வழங்கினார்கள்.

    இந்து கல்லூரியில் மட்டும் நடந்த சோதனையில் 70 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 16 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மூலமாக ரூ.1.50 லட்சம் அபராதம் வசூல் ஆனது. இதேபோல் வடசேரி, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் 238 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த இருசக்கர வாக னங்களை போலீசார் பூட்டு போட்டு பறிமுதல் செய்த வுடன் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோணம் பாலி டெக்னிக் கல்லூரி பகுதியில் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது இந்து கல்லூரி பகுதியிலும் சோதனை நடத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரே நாளில் ரூ.2¾ லட்சம் வசூலானது
    • தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி சாலையில் மாணவர்கள் 'பைக்' ரேசில் ஈடுபடுவதாக போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    கோணம் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் சாலையின் இருபுறமும் பேரிகாடுகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடத்திய சோதனையில் ஹெல்ெமட் அணியாமல் வந்த பலரும் சிக்கினர். லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களும் போலீசாரிடம் சிக்கி தவித்தனர். அவர்களுக்கு தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். கோணம் பகுதியில் மட்டும் மாலை நடந்த சோதனையில் 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் நகர் முழுவ தும் நேற்று ஒரே நாளில் 225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஹெல்மெட், லைசென்சு, போக்குவரத்து விதிமுறை மீறல் போன்ற காரணங்களுக்காக போலீசார் அபரா தம் விதித்துள்ளனர். இதன் மூலமாக ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூல் ஆகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே போக்கு வரத்து போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் காலை, மாலை நேரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களுக்கும் அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. கடந்த 12 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.20 லட்சம் வசூலாகியுள்ளது.

    இதே போல் மார்த்தாண்டம் போக்குவரத்து போலீசா ரும் போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    ×