search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகரில்"

    • 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் பறிமுதல்
    • நாகர்கோவிலில் போக்கு வரத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் போக்கு வரத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    குறிப்பாக ஆட்டோக்களில் அதிக மாணவிகளை ஏற்றி செல்லும் டிரைவர்களுக்கும், இருசக்கர வாகனங்களில் லைசன்ஸ் இல்லாமல் செல்ப வர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. லைசென்ஸ் இல்லாமல் 18 வயதுக்கு குறைவாக வாகனம் ஓட்டுபவர்களின் வாக னங்களை பறிமுதல் செய்யும் போலீசார் அவர் பெற்றோ ருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலை மையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்ல சாமி மற்றும் போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது 18 வயதுக்கு குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்கள் 10 பேர் இந்த சோதனையில் சிக்கினர். அவர்களது மோட்டார் சைக்கிளை போலீ சார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து வாக னங்கள் பறிமுதல் செய்தது குறித்து அவரது பெற்றோர்க ளுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். வாகனங்களை ஓட்டி வந்தோரின் பெற் றோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 10 பேருக்கு அபராதம் விதிப்பட்ட நிலையில் 4 பேர் மட்டுமே அபராத தொகையை கட்டிவிட்டு மோட்டார் சைக்கிளை திரும்ப பெற்று சென்றனர். 6 பேரின் மோட டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஒரே மோட்டார் சைக்கி ளில் 3 பேர் வந்தவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். நேற்று 6 பேர் சிக்கினார்கள். இதேபோல் நேற்று ஒரே நாளில் 140 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.2 லட்சம் அபராதம் வசூல் ஆகியுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் நாகர்கோவில் மாநகரில் ரூ.30 லட்சத்திற்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து விதி முறைகளை பொதுமக்கள் மீறக்கூடாது. சிறுவர்களுக்கு பெற்றோர் வாகனங்களை ஓட்ட கொடுக்கக்கூடாது. அவ்வாறு ஓட்டினால் அவரது மோட்டார் சைக் கிள்கள் பறிமுதல் செய்யப்ப டும். எனவே இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பெற்றோர் கடைபிடிக்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிவது உயிர் கவசம். எனவே அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×