நாகர்கோவில் நகரில் கடந்த 12 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.20 லட்சம் அபராதம்

ஒரே நாளில் ரூ.2¾ லட்சம் வசூலானதுதலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில் நகரில் கடந்த 12 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.20 லட்சம் அபராதம்
Published on

கன்னியாகுமரி:

நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி சாலையில் மாணவர்கள் 'பைக்' ரேசில் ஈடுபடுவதாக போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கோணம் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் சாலையின் இருபுறமும் பேரிகாடுகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்திய சோதனையில் ஹெல்ெமட் அணியாமல் வந்த பலரும் சிக்கினர். லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களும் போலீசாரிடம் சிக்கி தவித்தனர். அவர்களுக்கு தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். கோணம் பகுதியில் மட்டும் மாலை நடந்த சோதனையில் 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் நகர் முழுவ தும் நேற்று ஒரே நாளில் 225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட், லைசென்சு, போக்குவரத்து விதிமுறை மீறல் போன்ற காரணங்களுக்காக போலீசார் அபரா தம் விதித்துள்ளனர். இதன் மூலமாக ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூல் ஆகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே போக்கு வரத்து போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் காலை, மாலை நேரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களுக்கும் அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. கடந்த 12 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.20 லட்சம் வசூலாகியுள்ளது.

இதே போல் மார்த்தாண்டம் போக்குவரத்து போலீசா ரும் போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com