search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள்கள்"

    • ஆர்.பன்னீர் தேவர் கல்வி அறக்கட்டளை சார்பில்அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
    • 9-ம் வகுப்பு 10-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குளத்திரன்பட்டு ஆர்.பன்னீர் தேவர் கல்வி அறக்கட்ட ளை சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் மற்றும் 9-ம் வகுப்பு 10-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளையின் தலைவரும் தொழில் அதிபருமான கரிகாலன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளரும் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளருமான கருப்பையா அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் பரதநாட்டியம், யோகா, சிலம்பம் மற்றும் கராத்தே போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா சைக்கிள் மற்றும் சீருடை கல்வி உபகரணங்களை வழங்கி பேசியதாவது:-

    கல்வியே சமூக மாற்றத்திற்கு சிறந்த கருவி. இது போன்ற கல்வி பணிகளை இந்த அறக்கட்டளை தொடர்ந்து செய்து வரும். இப்பகுதி மாணவ மாணவியர்கள் இதனை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், ரவி , பல்லவராயர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவ திருமேனிநாதன்

    பிரபல பட்டிமன்ற நடுவரும் பழனியாண்டவர் கலைக்கல்லூரியின் பொருளாதார பேராசிரியருமான தங்க ரவிசங்கர் முன்னாள் எம்.எல்.ஏ நார்த்தாமலை ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன், அன்புக் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுமன் காளிதாஸ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், தலைமை ஆசிரியர் மற்றும் கிராம பொதுமக்கள் மாணவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
    • பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரபீக் நன்றி கூறினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவுக்கு பள்ளியின் தாளாளர் அகமது நெய்னார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் உசேன் வரவேற்றார்.

    அபிராமம் மற்றும் நத்தம் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தாளாளர் ஜாகீர் உசேன் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரபீக் நன்றி கூறினார்.

    • ஆஸ்பத்திரி வாயிலில் குவியும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
    • ஆஸ்பத்திரி வளாகத்தில் பார்க்கிங் இடம் ஒதுக்க வலியுறுத்தல்

    குனியமுத்தூர்,

    கோவை திருச்சி சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி முன்பாக 24 மணி நேரமும் மக்கள் வெள்ளம் அலைமோதுவது வழக்கம். கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு உள்ளே செல்வதும், வெளியே வருவதையும் எந்த நேரமும் பார்க்க முடியும்.

    கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு இரு சக்கர வாகனங்கள் வரிசையாக பார்க்கிங் செய்யப்பட்டு உள்ளன. இங்கு வருபவர்கள் அவசரத்தில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு உள்ளே சென்று விடுகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி முன்பாக இருசக்கர வாகனங்களின் குவியலை எந்த நேரமும் காண முடிகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிடுகிறது.

    ஆஸ்பத்திரிக்கு நேர் எதிரே பஸ் நிலையம் உள்ளது. அனைத்து பஸ்களும் உள்ளே சென்று தான் திரும்ப வேண்டும். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் நோயாளிகளும் வரிசையாக சாலையைக் கடந்து செல்லும் காட்சியையும் பார்க்க முடிகிறது.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் கூறுகையில், பெரிய ஆஸ்பத்திரிக்கு முன்பாக அகலமான சாலைகள் இல்லை. அங்கு தாறுமாறாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்வதால், பஸ்கள் கடந்து செல்வது சிரமமாக உள் ளது.

    எனவே ஆஸ்பத்திரிக்கு வரும் வாகனங்களை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி வைப்பதற்கு பார்க்கிங் இடம் ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால் போக்குவரத்து சாலையை வாகனங்கள் முழுவதுமாக பயன்படுத்த முடியும். பஸ்களும் நெரிசல் இன்றி இலகுவாக நகர முடியும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
    • விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஏ.ஷாஜகான் மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர ரேணுகா வர–வேற்றார்.

    விழாவல் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

    முதுகுளத்தூர் தொகுதி ஒரு காலத்தில் புறக்கணிக் கப்பட்ட தொகுதியாக இருந் தது. இப்போது வளர்ச்சி யடைந்த தொகுதியாக மாறி வருகிறது. அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்கள் தீட்டி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். முதுகுளத்தூர் தொகுதியில் பைபாஸ் வேலை முடுக்கிவிடப்பட் டுள்ளன.

    கிராமங்கள் தோறும் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குடிநீர் பிரச் சினை தீர்க்கப்படும். முதுகு ளத்தூர் அமைதியான நகர மாக திகழ்கிறது. இங்கு சாலைப்பணிகள் முடுக்கி விடப்பட்ருள்ளன. இங்கு மதரீதியாகவோ, சாதி ரீதி யாகவோ பாகுபாடு கிடை யாது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.

    அடுத்தகட்ட பணியாக இமானுவேல் சேகரனுக்கு செல்லுரர் கிராமத்தில் சிலை, முதுகுளத்தூரில் தேவர் மஹால், அழகுமுத் துக்கோன் சிலை, கட்டப் பொம்மனுக்கு சிலை, ஏர்வாடியில் இஸ்லாமியருக்கு மஹால், காமராஜருக்கு சிலை ஆகிய பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தாசில்தார் சடையாண்டி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜய குமார், தாளாளர் செய்யது மூமின், ஜமாத் தலைவர் காதர்முகைதீன், முகம்மது யாக்கோப், சாகுல்ஹம்து, பைசல் முகம்மது உள்பட மரணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் முகம்மது சுல்த்தான் அலாவு தீன் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சாலியமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், பள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், அரசு ஒப்பந்ததாரர் சண் சரவணன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிபோதையில் மாணவன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு
    • இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் மாணவர்கள் அதிவேகமாக போக்குவரத்து விதி முறையை மீறி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த னர். மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் வைத்திருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் சோதனை யில் மாணவர்கள் பலருக்கும் லைசென்ஸ் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. 14 பேர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகளை வழங்கினர். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற உறுதி மொழியும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். போலீசார் சோதனை மேற்கொண்டபோது மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக் கிளையும் பறிமுதல் செய்தனர்.

    குடிபோதையில் இருந்த மாணவன் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 18 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டி வந்ததாக 3 பேர் சிக்கினார்கள். அவரது பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரைகளை வழங்கினார்கள்.

    இந்து கல்லூரியில் மட்டும் நடந்த சோதனையில் 70 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 16 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மூலமாக ரூ.1.50 லட்சம் அபராதம் வசூல் ஆனது. இதேபோல் வடசேரி, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் 238 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த இருசக்கர வாக னங்களை போலீசார் பூட்டு போட்டு பறிமுதல் செய்த வுடன் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோணம் பாலி டெக்னிக் கல்லூரி பகுதியில் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது இந்து கல்லூரி பகுதியிலும் சோதனை நடத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • 231 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்துக் குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா கன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் கட்டமாக கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 231 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    விழாவில் அகஸ்தீஸ்வ ரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்டபெருமாள், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால், மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி, துணை தலைவர் விமலா, பேரூ ராட்சி வார்டு கவுன்சிலர் சரோஜா, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிதம்பரம், பள்ளி தலைமை ஆசிரியை பேபி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் நன்றி கூறினார்.

    இதேபோல் தென்தா மரைகுளம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் 1-வது வார்டு தென்தாமரைகுளம் முதல் தேரிவிளை-மன்னராஜா கோவில் சாலை, 6-வது வார்டு தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் முதல் பூவியூர் அம்பலம் சாலை அலங்கார கற்கள் பதிக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் தன்னாட்சி அதிகாரம் பெற்று செயல்படும் அமலாக்க துறை போன்ற துறைகளை மத்திய அரசு கையில் வைத்து கொண்டு அரசியல் அடக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.

    பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நடவ டிக்கை எடுக்க அனுப்பப் பட்ட கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட வில்லை. தி.மு.க.வை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளும் எந்த சக்தியும் தமிழக பா.ஜ.க.விற்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் தாமரை பாரதி, தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், துணை தலைவி மல்லிகா, பேரூ ராட்சி கவுன்சிலர்கள் எட்வின் ராஜ், பூவியூர் காமராஜ், ஆல்வின், கான்ஸ்டன் டைன், அமுதா, தி.மு.க. பிரமுகர்கள். பேராசிரியர் டி.சி. மகேஷ், தாமரை பிரதாப் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க அறிவுத்தல் எடுக்கப்பட்டுள்ளது.
    • சந்தையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    குனியமுத்தூர்,

    கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை வியாபாரம் நடைபெறும். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த பொருட்களை வாங்க சிங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள்.இதனால் எப்போது இந்த சந்தை மற்றும் சந்தை பகுதியில் அதிகளவு கூட்டம் காணப்படும். வாகனங்களும் அதிகளவில் நிற்கும்.

    காலை 8 மணி முதல் 9.30 வரை பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்கள் அதிகமாக செல்வதை காண முடியும். இந்த சந்தை திருச்சி சாலையில் செயல்படுவதால், அந்த வழியாக எப்போதும் பஸ்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருக்கும்.

    இந்த நிலையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உழவர் சந்தை முன்பாக நிறுத்தி விட்டு உள்ளே சென்று விடுகின்றனர். இதனால் திருச்சி சாலை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. ஒரு சில வியாபாரிகளும் சந்தை முன்பாக வெளியே கடை போட்டு வியாபாரம் செய்கின்றனர். இதனால் அங்கு கூட்டம் கூடுவதாலும் போக்குவர த்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகி ன்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு 2 வாசல் உள்ளது. திருச்சி சாலை மெயின் ரோட்டில் ஒரு வாசலும், வலது புறம் ஹவுசிங் யூனிட் செல்லும் வழியில் ஒரு வாசல் உள்ளது. ஹவுசிங் யூனிட் செல்லும் பாதை மிகவும் அகலமான பாதையாகும். அந்த விசாலமான பாதை எப்போதுமே சுதந்தரமாக இருக்கும்.

    அந்தப் பாதையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் திருச்சி ரோடு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும். இதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவசரத்தில் வந்து வாகனத்தை நிறுத்தி அவசரமாக காய்கறிகளை வாங்கி செல்வது அவர்களது வழக்கம்.

    தினமும் காலை வேளையில் அந்த பகுதியில் ஒரு போக்குவரத்து போலீசா ரை நிறுத்தி வாகனங்களை ஹவுசிங் யூனிட் செல்லும் சாலையில் நிறுத்தினால் இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக காட்சியளிக்கும். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? காலை சமயங்களில் இந்த திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கண்டி ப்பாக போக்குவ ரத்து போலீசார் முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
    • ராஜபாளையம் அருகே தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சேத்தூர் சேவுகப்பாண்டி யன் அரசு மேல்நிலை பள்ளியிலும், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். சொக்கநாதன்புத்தூர் பள்ளியில் எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    நான் எத்தனையோ பள்ளி நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்தாலும் சொக்கநாதன்புத்தூர் பள்ளியில் நடந்த யோகா, பேச்சு மற்றும் நடன நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இதற்காக மாணவ, மாணவிகளையும், ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன். இந்த பள்ளி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையான வகுப்பறைக்கட்டிடத்திற்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கி புதிய வகுப்பறைக்கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார்.

    சேத்தூர் பள்ளியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், இந்த பள்ளியில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கலையரங்கமும், மாணவ, மாணவிகள் அமரும் இருக்கைகளும் வழங்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் கற்பகம்மாள், சுந்தரராஜன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக முதல்வர் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக எம்.எல்.ஏ. பேசினார்.
    • ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் காமராஜர் மேல் நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் மேல் நிலை பள்ளி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார்,ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் யூனியன் தலைவர் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்க ளை வழங்கினர்.

    விழாவில் தங்கப்பா ண்டியன் எம்.எல்.ஏ. பேசும் போது,எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிப்பது கல்வி மட்டுமே. அத்தகைய கல்விக்கு நமது தமிழக முதல்வர் முக்கியத்தும் கொடுத்து வருகிறார். அவர் கல்வித்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார்.

    இந்த திட்டங்களை முறையாக பயன்படுத்தி மாணவ- மாணவியர்களாகிய நீங்கள் அனைவரும் சிறப்பாக கல்வி கற்று ராஜபாளையம் தொகுதியிலிருந்து ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மருத்துவர் போன்ற உயரிய பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் வரவேண்டும் என்றார்.

    அதனைத்தொடர்ந்து பேசிய எம்.பி தனுஷ் எம்.குமார் பேசும் போது, மற்ற மாநிலத்தைக்

    காட்டிலும் நமது தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க காரணம் பெருந்தலைவர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டமே என்றும், மாணவ- மாணவியர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பாலாஜி நாடார், தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கவுன்சிலர் காமராஜ், கிளை செயலாளர் லட்சுமணன், ஒன்றிய இளைஞரணி துணைஅமைப்பாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசும்போது கூறியதாவது:-

    தமிழகத்தில் பெண்கல்விக்கு முக்கியத்தும் கொடுத்து புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். மேலும் விரைவில் மாணவ- மாணவிகளுக்கு மடிக ணிணியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    எனவே மாணவ- மாணவிகள் அனை வரும் கல்வியின் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆதி நாராயணன், தலைவர் ராமசாமி, பொருளாளர் மாடசாமி, தலைமை ஆசிரியர் அறச்செல்வி, பேரூர் செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி, கிளை செயலாளர் தொந்தியப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜேடர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு 130 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    முன்னதாக பள்ளி தமிழாசிரியர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிசாமி, கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் ரேவதி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளருமான சண்முகம், ஆசிரிய ,ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    ×