search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில்   விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி
    X

    விலையில்லா சைக்கிள்களை முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.எஸ். மூர்த்தி வழங்கிய போது எடுத்த படம்.

    ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி

    • ஜேடர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு 130 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    முன்னதாக பள்ளி தமிழாசிரியர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிசாமி, கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் ரேவதி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளருமான சண்முகம், ஆசிரிய ,ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×